எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 ஜூலை, 2019

காரைக்குடிச் சொல்வழக்கு :- ஊட வாரதும் நெருக்குவெட்டும்.

1256.சடைப்பெரம்பாய் - கெட்டிப்பிரம்பால் பின்னப்பட்ட பாய். இது பட்டாலையில் விரிக்கப்படும். சுமாராக ஆறடி அகலமும் பத்தடி நீளமும் கூட இருக்கும். பொதுவாக பட்டாலையில் விரிக்கப்படும் இது திருமணம், குடிபுகல் போன்ற விசேஷம் அனுவல் என்றாலும் திருவிழா சமயங்களிலும் பட்டாலை தவிர பத்தி முகப்பு ஆகியவற்றிலும் பெரும்பாலும் ஆண்கள் அமர விரிக்கப்படும். பெண்கள் அமர சமுக்காளம் விரிப்பார்கள். 

1257.குரிச்சி - சாய்வு நாற்காலி.இது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஓய்வெடுக்கப் பயன்படுத்துவது. ஈஸி சேர் போன்ற அமைப்பில் இருக்கும். மரத்தால் ஆனது. கால் வைக்க இருபுறமும் இருக்கும் கட்டைகளைப் பிரித்துவிட்டுக் காலை நீட்டித் தூங்கலாம். இதன் உடல் பகுதி பிரம்பு அல்லது பட்டை ப்ளாஸ்டிக்கால் பின்னப்பட்டிருக்கும். இதன் மேற்பகுதி/முழுப்பகுதியும் யானையின் முகபடாம் மாதிரி வெல்வெட் துணியால் போர்த்தப்பட்டிருக்கும்.  

1258.கவுளி சொல்லுதல் - பல்லி தட்டும் சத்தம். இது தட்டும் திசைக்கேற்பப் பலன் கொள்வார்கள்.  


1259.மிகுந்துஇங்கே -  ”அதிகமாக இங்கே (- என்று அர்த்தம் )” இதை/ஒரு விஷயத்தை இப்படித்தான் சொல்வார்கள் அல்லது செய்வார்கள். 

1260.அங்கம் ஒடுங்கிப் போதல் - உடல் சுருங்குதல். மான அவமானத்துக்கு அஞ்சி அங்கம் சுருங்குதல். மேலும் உடல்/மனச் சுணக்கத்தால் உறவு கொள்ள இயலாமல் இருத்தல் 

1261.ஐய்யறவு - சந்தேகத்துக்குரிய, பரிதாபம், பாவம், அச்சம், வெறுப்பு. 

1262.காசுப்பை - பணப்பை, சுருக்குப்பை,   

1263.ஒங்க மாறல் - உங்கள் மூலமாக, உங்கள் வழியாக. , உங்க பக்கம், உங்களைச் சார்ந்தவர் வழியாக ( இந்தக் காரியம் நடைபெறவேண்டும் என வேண்டுதல் ) 

1264.அதுகாண்டி -  அதற்காக வேண்டி. 

1265.ஓமுட்டும் - உன்னுடையது. உன் சம்பந்தப்பட்டது. 

1266.சொனக்கிப்புட்டியே - தாமதப் படுத்திவிட்டாயே., சுணக்கிவிட்டாயே

1267.குலசாமிகும்பிட - குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வணங்குவது, 

1268.கொளுகிட்டு - முடிச்சிக்கிட்டு, தீர்மானித்துக் கொண்டு, கேட்டுக்கொண்டு, பக்கா செய்து கொண்டு

1269.அட்டியில்ல - வருத்தமில்லை, நோ ப்ராளம், பிரச்சனையில்லை, பொறுப்பு இல்லை, பரவாயில்லை, நோ கம்ப்ளெயிண்ட் :) 

1270.ஒண்டுதல் - பிழைப்புக்காக ஒருவர் வீட்டில் ஒண்டிக் கொள்ளுதல்.

1271.ஊட வாரது -  நடுவில் வருவது. ஊடால வருவது. குறுக்கே வருவது. 

1272.வருத்திக்கின்றுவோம் - வரவழைத்துக் கொள்ளுவோம் . வெளிநாட்டில் இருக்கும் மகனை விசேஷத்தின்போது தாய்நாட்டிற்கு அழைத்துக் கொள்ளுதல், அதே போல் தாய்நாட்டில் இருக்கும் மருமகளை மகன் கூட வாழ வெளிநாட்டுக்கு அழைத்துக் கொள்ளுதல். 

1273.நெருக்குவட்டா - நெருக்கிப் பிடிச்சு, சுருக்குன்னு, உடனே, அப்பவே, அந்த க்ஷணமே, உடனடியா,  கையோட

1274.மருகுதல் -  உருகிப் போதல். ஒன்றைச் சொல்லிச் சொல்லி மருகுதல். ஒரு விஷயத்தை எண்ணிக் கொண்டே இருப்பது. 

1275.நொட்டி ஒடித்தல் - கை/கால்விரல்களை மடக்கி நொட்டி/சொடக்கு எடுத்தல்/ஒடித்தல் . 


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள்பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள்சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள்சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள்கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான்பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்குகொரக்களியும் வர்ணக்கோமாளியும்

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணையர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்

50. கோவிலூர் மியூசியம்

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள்சமத்தியும் ராராட்டும்இங்காவும்ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள்அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.
56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள்ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும்இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.

59. இலை விருந்துஇதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்குஅந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்

61. காரைக்குடிச் சொல்வழக்குசுவீகாரம்திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்

65. காரைக்குடிச் சொல்வழக்குகைப்பொட்டியும் பொட்டியடியும்

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்குகூடைகொட்டான் முடையலாம் வாங்க

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும்அந்தக்காலஎழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும்ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திருஎம்..எம்ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம்இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

3 கருத்துகள்:

  1. ஓமுட்டும்- இந்த வார்த்தை எங்கள் இராமநாதபுரம் பகுதியில் வாந்தி எடுப்பதை குறிக்கும் (ஓமட்டிகிட்டு வருது ...)

    பதிலளிநீக்கு
  2. யாம்புட்டு - என்னோடது
    ஓம்புட்டு - உன்னோடது
    ஒமட்டுது - வாந்தி வருவதுபோல் இருக்கு.

    இப்படித்தான் பேசுவோம் தேவகோட்டை பக்கம்.. :)

    நம்ம பக்க பேச்சு வழக்கு சொற்களை தொகுப்பது அருமை அக்கா.

    பதிலளிநீக்கு
  3. ஒமுட்டும்தான்/ஒமட்டும்தான் வாந்தி. ஓம்முட்டும் அல்லது ஓமுட்டும்.ஓம்புட்டும் என்றால் உன்னுடையது என்று பொருள்.

    சரியா சொன்னீங்க குமார் சகோ. நன்றிப்பா

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...