எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 15 அக்டோபர், 2015

காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

துர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ..

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.

காரைக்குடி வீடுகள் தேக்குமரக் கதவுகள், சிற்ப வேலைப்பாடுகள் , ஆத்தங்குடி/இத்தாலியன் மார்பிள்ஸ், பெல்ஜியம் கண்ணாடிகள், வடிவழகோடு அமைக்கப்பட்ட பித்தளைத் தாழ்வாரங்கள், மரச் செதுக்கல்கள், ப்ளாச்சுகள் இவற்றோடு ரசிக்க வேண்டிய இன்னொரு அம்சம் அதன் 182. ஓவியங்கள்.

சுவற்றில் மேலே வரந்தையாக  மற்றும் வாசல் நிலைகளில் ,ஜன்னல் நிலைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் சரித்திர இதிகாச புராண முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும் வாழ்வியல் நிகழ்வுகள், யோகா, தியானம், வாழ்வியல் இச்சை, விலங்குகள், பூக்கள், பறவைகள், தெய்வத் திரு உருவங்கள் போன்றவையும் இடம் பெறும்.

183. வசிஷ்டரும் காமதேனுவும். :-

இங்கே வசிஷ்டரும் காமதேனுவும் ஹோமத்தின் முன்னால். ஒரு வனமே கண்முன் விரிகிறதல்லவா. காமதேனுவிடம் பாலருந்தும் நந்தினி கன்றுக் குட்டியும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது.



184/ தனலெக்ஷ்மி :-

தாமரை சுமந்து தனலெக்ஷ்மி மையத்திலிருக்க சாமரம் வீசி சேவை செய்யும் பணிப்பெண்கள் இருபுறமும். அவர்களுக்குப் பின்னும் இரு பணிப்பெண்கள் ஏவல் புரிந்தபடி. தனலெக்ஷ்மி அமர்ந்திருக்கும் இடத்தில் பின்புறம் அலங்கார முடிச்சுக் கயிறுகளோடு கூடிய திண்டு. இந்த எந்த ஊர் கலாபாணி என்று எனக்குத் தெரியவில்லை. தஞ்சாவூர் பெயிண்டிங்கை ஆதாரமாகக் கொண்டு வரையப் பட்டிருக்கலாம். கலம்காரி ஓவியங்களா என்றும் தெரியல. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

லெக்ஷ்மியின் உடை டிசைனும் தாமரை விரிந்தது போன்ற கீழ்ப் பட்டியும் அமர்ந்திருக்கும் பலகையும் கையில் இருக்கும் பணப்பெட்டியும் இதை வீட்டில் ப்ரதிஷ்டை செய்த உணர்வை உண்டாக்குது. மேலே சுவர் விளிம்பில் ஜன்னல் ஆர்ச்சுக்கு மேற்புறம் வரந்தையில் பூக்களும் இலைகளும் அணி வகுக்க சிறகசைத்துக் கிடக்கும் குட்டி தேவர்களும் கின்னரர்களும் கந்தவர்களும் ( கானம் வாசிக்கும் ) யஷர்களும் பார்த்திருப்பது போல வரையப்பட்டுள்ளது.



185. சந்தான லெக்ஷ்மி :-

வீட்டில் குழந்தைச் செல்வங்கள் பெருகி மகிழ வேண்டும் என்று வரையப்பட்ட ஓவியம் இது. மடியில் குழந்தையைப் பக்காவாக அமரவைத்து மேல் இரு கைகளில் தாமரையும் வலதுகையால் அபயமுத்திரையும் இடது கையால் ஹஸ்த முத்திரையும் வழங்கும் லெக்ஷ்மி அற்புதம். காதில் குண்டலங்களும் குழந்தை தலையில் முடி போட்டு பூ வைத்திருக்கும் அழகும் அருமை.

கால்களை வைத்து அமர்ந்திருக்கும் பாணியும் பணிப்பெண்கள் உடையணிந்திருக்கும் விதமும் அவர்கள் கொண்டையில் சிட்டி அணிந்திருப்பதும்  இது மகாராஷ்ட்ர பாணியில் அமைந்திருப்பது போல் இருக்கிறது. ஓவியம் வரைந்தவர்கள் அந்த ஊரிலிருந்து வந்தவர்களா தெரியவில்லை.

இங்கேயும் சுவர் 186. வரந்தையில் விதம் விதமான  பூக்கள் இலைகள் அணிவகுக்கின்றன. ஒவ்வொரு அரை வட்டத்தினுள்ளும் மனிதர், மீன் என்று இருக்க அதன் பக்கங்களில் குஞ்சம் தொங்குவது போல வரைந்திருப்பதும் கலை உணர்வுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது.




187. கஜலெக்ஷ்மி :-

இங்கே மேகத்தில் நிற்கும் யானைகள் சூழ அமர்ந்திருக்கும் கெஜலெக்ஷ்மி. இரு புறமும் வெண்கொற்றக் குடைகளும் சாமரங்களும் தாங்கிய பணிப்பெண்கள், வாழை மரம் என ஒரு பர்ஃபெக்ட் கஜலெக்ஷ்மி இவர்.

மேலே வரந்தையில் வழக்கம் போல மேல் பட்டியில் பூக்கள் இலைகள் ஓவியம் , அரைவட்டத்தில் பூக்கள்  , பக்கவாட்டுகளில் குஞ்சலம் தொங்க அமைந்திருக்கு. அதன் ஒவ்வொரு அரை வட்டத்திலும் அண்ட பேரண்ட பக்ஷி, அன்னம், மயில், குதிரை, நாய் என விதம் விதமான வண்ணங்களில் வரைஞ்சிருக்காங்க.

தற்காலத்துல இந்த மாதிரியான பழைய வீடுகளைப் புதுப்பிக்கும்போது  சில சமயம் 188. பழைய ( தாவரச் சாறு .. ) ஓவியங்களில் மேல் மாடர்ன் பெயிண்டை ரீபெயிண்ட் செய்றாங்க. அப்போ பழைய ஓவியங்களின் நுண்ணிய அமைப்புகள் மறைஞ்சி போயிடுறதும் உண்டு.


189. தான்ய லெக்ஷ்மி :-

வீட்டுல இது முகப்பறை. இதுதான் மளிகைக் கூடம் மாதிரி. ஸ்டோர் ரூம். இது ரொம்பி வழிச்சு எந்நேரமும் நிறைவா இருக்கணும்னு தான்ய லெக்ஷ்மியை வாசல் நிலையில் வரைஞ்சிருக்காங்க.


தான்ய லெக்ஷ்மிக்கு மட்டும் நைவேத்தியங்கள் பால் பழம், சூட, தீப தூப நைவேத்தியங்கள். :) பக்கவாட்டில் இரு சாமரம் வீசும் கன்னிகள். அத்தோடு இரு ஆண்களும் இருக்காங்க. அதில் தலைப்பா கட்டிய ஒரு ஆண் துண்டை எடுத்துக் கைகளில் வைத்துக் கொண்டு தான்ய லெக்ஷ்மியை வணங்குகிறார்.

இரு பக்கமும் குலை தள்ளிய வாழைமரம் இருக்கு. ஒரு பக்கம் அதை ஒரு யானை குலையோடு பூவையும் சாப்பிடப் பார்க்குது. இன்னொரு புறம் ஒரு சிற்றாடை ( தாவணி ) கட்டிய பெண் நடனமாடுகின்றாரா அல்லது எதையும் தெளிவு படுத்துகின்றாரா தெரில. அவர் பக்கம் ஒரு தலைப்பா கட்டிய ஆண் அமர்ந்து வணங்குவதுபோன்ற தோற்றம்.

மேல் வரந்தையில் பூக்கள் இலைகள், கீழே ஆர்ச் வளைவில் பூக்கள், குஞ்சங்கள், அதன் நடுவில் உணவுண்னும் ஒரு பறவை, வாயில் எதையோ கவ்விய அன்னம், முட்டிக்கால் போட்டிருக்கும் மனிதன், வாலைச் சுருட்டிய நாய், இன்னும் சில ப்ராணிகள்னு இருக்கு.

கோயில் திருவாச்சி மாதிரி இது 190. ஜன்னல் திருவாச்சி.

திருஷ்டி படக் கூடாது என்று அமைக்கப் பட்டிருக்கலாம். நீல முகமும் செக்கச் சிவந்த நாக்கும். விடைத்த காதுகளும் அம்மாடி எம்மாம் பெரிய மீசை என பயமுறுத்துது. :) .
இவங்க ஜன்னல் அன்ன பட்சிகள். பச்சைப் பசேல் புல்வெளியில் ஜோடியா காட்சி தந்து சூழ்நிலையை இதமாக்குறாங்க. இந்தத் தங்க அன்னபட்சிகள்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



5 கருத்துகள்:

  1. அழகான ஓவியங்கள் கண்ணைக் கவர்ந்தன! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. என்ன அழகான ஓவியங்கள்!! அருமை! இப்போதும் இப்படி வீடுகள் உள்ளனவா செட்டிநாட்டுப் பகுதியில்?!!!!!

    பதிலளிநீக்கு
  3. நன்றி சங்கீதா க்ரியேஷன்ஸ்

    நன்றி சுரேஷ் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.. இருக்கு எங்க பையன் கல்யாணத்துக்கு அழைக்கிறேன். அப்போ வந்து பாருங்க:)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...