எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வீடு எரிகிறது.:-



26. 4. 86.

17. வீடு எரிகிறது.:-

எரியூட்டப்படுகின்றன
நமது சுயங்கள்

பற்றியெரியும்
சட்டங்களாய்
நமது கனவுகள்


நிகழ்வில் உடையும்
ஓடுகளாய்
நமது இறந்தகாலம்.

ஊரெல்லாம்
வேடிக்கை பார்க்க
சிதறிச் சரியும்
நமது கோட்டைகள்.

நீரூற்றி
அவிக்கப்பட்டுக் கிடக்கும்
கரிக்கட்டைகளாய்
மனசுச்சவம் பொதித்த
மயானங்களாய்
சிறுத்துக் கிடக்கும்
நமது சுயங்கள்.



4 கருத்துகள்:

  1. வெளியேறிப் பார்க்க
    அவிந்த சுயமும்
    பிணம் போலத்தானே
    அற்புதமான கவிதை

    பதிலளிநீக்கு
  2. நன்றி ரமணி சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...