எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 அக்டோபர், 2015

செடிகள்



3.5.86. 11.30 a.m.

24. * இந்தச் செடிகள்
என் ஆன்மா
உடலும் உயிருமாய்
கம்பிகளுக்குள்
நானும் அதுவும்.


*இவைகள்
மனிதர்கள் போல்
எனக்குக் கட்டளையிடுவதில்லை.

*பரிட்சை அதிகாரி போல்
கண்காணிப்பதில்லை.

*வண்ணான்கள் போல்
என்னைப் பொதிசுமக்க வைப்பதில்லை.

*மழைக்காலக் கொட்டில்கள்போல்
நீர் வழியவிட்டு
என்னை அவஸ்தைப்படுத்துவதில்லை.

*அண்டத்தின்
அமைதியின் பாஷையில் பேசி
நானும் அதுவும்
வளர்ந்துகொண்டிருக்கிறோம்.
ஸ்நேகம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.



3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...