எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 25 செப்டம்பர், 2019

சுப் சிப் ஆனந்தம்.

சுப் சிப் ஆனந்தம்.

அந்த வேகன் ஆர் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. வளைவுகளில் அபாரமாகத் திருப்பிய கவிதாவுக்கு இருபத்திமூன்று வயது.

“ஃபாஸ்டா கத்துக்கிட்டே. குட் ட்யூட் ! “ வியந்த ப்ரசன்னாவுக்கு வயது முப்பது. இருவரும் லீடிங் ஜர்னலில் ஃப்ரீலான்சிங் ஜர்னலிஸ்ட்ஸ். ஆன்மீகம் அரசியல் என்று எல்லா அக்கப்போரையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்து ரவுண்டு கட்டி கட்டம் போட்டு நியூஸ் அனுப்புவார்கள்.

”ஆட்டோ கியர் . ஜஸ்ட் லைக் டூவீலர்ஸ். என்ன லெஃப்ட் அண்ட் ரைட் சைஸ் கொஞ்சம் பெரிசு. ரோட் கான்ஷியஸ் கொஞ்சம் இருந்தா போதும். ஓட்டிறலாம்.”

“ட்ரை பண்றியா “ கேட்டுக்கொண்டே அந்தப் பத்ரிக்கை அலுவலகத்துக்குள் நுழைந்து சர்ரென்று வளைத்துக் காரை நிறுத்தினாள் கவி என்ற கவிதா.

”புது அசைன்மெண்ட்.. கொஞ்சம் கேபினுக்கு வா.": .. மேலதிகாரி விட்டலிடமிருந்து ஒரு மெசேஜ் ஒளிர்ந்தது.

”எனக்கும் சேர்த்து ஒரு சாண்ட்விச் காஃபி ஆர்டர் பண்ணு . ஃபைவ் மினிட்ஸ்ல வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்”. என்றவள் மூடத்துவங்கிய லிஃப்டில் தாவினாள்.

”அது என்ன காலா ரெக்கையா. இப்பிடிப் பறக்குது “ நினைத்துக்கொண்டே ப்ரசன்னா கேண்டீனுக்குத் திரும்பினான்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

கவனமின்மையால் துன்புற்ற சகுந்தலை. தினமலர் சிறுவர்மலர். 34,

கவனமின்மையால் துன்புற்ற சகுந்தலை.
வீட்டிற்குப் பெரியவர்கள் வரும்போது அவர்களைப் பார்த்துச் சிரித்தாலே வாங்க என்று வரவேற்றுவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள் இன்றைய சில இளையவர்கள். சிலரோ தங்கள் அறைக்குள் சென்று விடுகிறார்கள். சிலரோ கைபேசியில் விளையாடிக் கொண்டு யாரையும் சட்டை செய்வதில்லை. இப்படி கவனக் குறைவாக வீட்டிற்கு வந்த ஒரு முனிவரை வரவேற்காததால் சகுந்தலை என்ற பெண்ணுக்கு சாபம் கிடைத்தது. அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
விசுவாமித்திர முனிவருக்கும் மேனகை என்ற அப்சரஸுக்கும் பிறந்தவள்தான் இந்த சகுந்தலை. தந்தையோ முனிவர் அதனால் அவர் சகுந்தலை பிறந்ததும் தன் தவம் எல்லாம் அழித்துவிட்டதாகக் கருதித் தவம் செய்யச் சென்றுவிட்டார். தாயோ தேவலோகத்தின் அப்சரஸ். நாட்டிய தாரகை. அதனால் அவளும் குழந்தையை ஒரு வனத்தில் விட்டுச் செல்கிறாள்.
அக்குழந்தையின் குரல் கேட்டுப் பறவைகள் சூழ்ந்து கானம் பாடுகின்றன. குழந்தைக்குரலும் பறவைக்குரலும் கேட்ட கண்வ மகரிஷி இவளை எடுத்து வளர்க்கிறார். பறவைகளால் பாதுகாக்கப்பட்ட குழந்தை என்ற அர்த்தத்தில் ”சகுந்தலை” என்று பெயரிட்டு வளர்க்கிறார்.

திங்கள், 23 செப்டம்பர், 2019

பவன்குமாரனின் பலம் தெரிவித்த ஜாம்பவான். தினமலர் சிறுவர்மலர். 33.

பவன்குமாரனின் பலம் தெரிவித்த ஜாம்பவான்
எந்தச் செயலைச் செய்வதற்கும், “உன்னால் முடியும் தம்பி” என்று ஒருவர் சொன்னால் அதை நம்ப வேண்டும் அப்படித் தன் மறந்து போன திறமையை ஒருவர் ஞாபகப்படுத்தியவுடன் தன்னால் முடியும் என்று விண்ணிலே பறந்த ஒருவரைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் குழந்தைகளே.
கேசரி அஞ்சனை ஆகியோருக்கு வாயுபுத்திரரின் அருளால் பிறந்தவர் ஹனுமன். இவர் சிறு வயதில் மிகுந்த சுட்டிக் குழந்தையாய் இருந்தார். ஒருமுறை தாய் ஏதோ வேலையாக இருக்கும்போது இவருக்குப் பசி எடுத்துவிட வானில் தோன்றிய சூரியனைப் சிவப்புப்பழம் என நினைத்துத் தாவிப் பிடிக்கப் போனார். அதைக் கண்டு பதறிப்போன  இந்திரன் சின்னக் குழந்தையான அனுமனைத் தாடையில் அடிக்க அவர் மயக்கமுற்று விழுந்தார்.
இதனால் வாயு பகவான் கோபப்பட்டுத் தன் இயக்கத்தை நிறுத்த அனைத்து உயிர்களும் காற்றில்லாமல் தவித்தன. உடனே சூரியன் முதலான தேவர்கள் அனுமனை மயக்கம் தெளிவித்துப் பல்வேறு வரங்கள் வழங்கினார்கள். அணிமா மஹிமா லகிமா ஆகிய சித்திகளும், காற்றில் பறக்கும் சக்தியும் பெற்றார் அனுமன்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மாஃபியாக்கள் நிறைந்த ஊரும் மனித நேயப் பண்புகளும்.

2341. ஜெர்மனி வாழ் ஈழத்தமிழர்களிடம் நான் வியந்த விஷயம் அவர்களின் தன்னம்பிக்கை, மன உறுதி விடா முயற்சி வித்ஸ்டாண்டிங். தொடர்ந்த உழைப்பு, தமிழ் சேவை.

2342.
வீடுகள் அடர்ந்த சாலைகள் - சிறு வீதிகள் இப்படி அமைக்கப்படுகின்றன.
முதியோர்கள், குழந்தைகள் குடியிருக்கும் பகுதி என்பதால் சத்தம் குறைவாக இருக்க வேண்டும். ஹார்னே உபயோகிக்கக் கூடாது.

வண்டி வாகனங்கள் இதில் செல்லும்போது மிக மிக மெதுவாகத்தான் செல்லமுடியும், இல்லாவிட்டால் லடக் லடக் என்று சீக்கிரம் டயர் தேய்ந்துவிடும். செங்கல் சைஸில் சுட்ட கற்களை அடுக்கி அமைக்கப் பட்டுள்ளது.

மழைநீர் சேகரமாகும். நீர் நிற்காது வழிந்தும் ஓடிவிடும். நிலம் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருப்பதால் கான்வாஸ் ஷூ, லெதர் ஷூ போட்டுச் செல்பவர்களுக்கும் வண்டி ஓட்டிகளுக்கும் கூட வழுக்காது !.
அழகுக்கு அழகும் கூட..

குடியிருப்புப் பகுதிகளில் இப்படிச் சாலைகள் அமைத்தது முன்னெச்சரிக்கை என்பதா கருணை என்பதா காருண்யம் என்பதா. :) <3 p="">
#இத்தாலி.. மாஃபியாக்கள் நிறைந்த ஊர் மட்டுமல்ல மனிதமும் நிறைந்த ஊர்தான்.

சிறந்ததை அளித்த அதிபத்தர். தினமலர் சிறுவர்மலர் - 32.

சிறந்ததை அளித்த அதிபத்தர்.
மனிதர்கள் பொதுவா தனக்கு எந்த விதத்திலும் தேவைப்படாது என்று கருதும் பொருளையே பிறருக்கு எந்தத் தயக்கமுமில்லாமக் கொடுப்பாங்க. எவ்வளவு இருந்தாலும் தனக்கு தனக்கு என முடிந்துவைத்துக் கொள்வார்கள். அப்படி இல்லாமல் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்த ஒருவர் மிகச் சிறந்ததையே கொடுக்கும் வழக்கமுள்ளவராக இருந்தார். அப்படி அவர் கொடுத்த மிகச் சிறந்த பொருள் எது, அதை யாருக்குக் கொடுத்தார்னு பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சோழநாட்டில் நாகப்பட்டினம் என்ற ஒரு ஊர் உள்ளது. இந்த ஊர் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் பக்கமுள்ள நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் பலர் வசித்து வந்தார்கள். அவர்களின் தலைவரான அதிபத்தர் என்பாரும் அங்கேயே வசித்து வந்தார். அவர் சிவனின் மேல் பக்தி கொண்டவர்.
தினந்தோறும் மீன் பிடிக்கச் செல்கையில் முதலில் பிடிக்கும் மீனை சிவனுக்கு என்று சொல்லிக் கடலிலேயே விட்டுவிடுவார். இப்படி ஒரு நாளில் எத்தனை மீன் கிடைத்தாலும் சரி அல்லது ஒரு மீன் மட்டுமே கிடைத்தாலும் சரி அந்த முதல் மீனை சிவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு மீதி மீன்களை விற்றுத் தன் அன்றாட செலவுகளைச் செய்து வாழ்ந்து வந்தார்.
Related Posts Plugin for WordPress, Blogger...