எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
118 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
118 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மாஃபியாக்கள் நிறைந்த ஊரும் மனித நேயப் பண்புகளும்.

2341. ஜெர்மனி வாழ் ஈழத்தமிழர்களிடம் நான் வியந்த விஷயம் அவர்களின் தன்னம்பிக்கை, மன உறுதி விடா முயற்சி வித்ஸ்டாண்டிங். தொடர்ந்த உழைப்பு, தமிழ் சேவை.

2342.
வீடுகள் அடர்ந்த சாலைகள் - சிறு வீதிகள் இப்படி அமைக்கப்படுகின்றன.
முதியோர்கள், குழந்தைகள் குடியிருக்கும் பகுதி என்பதால் சத்தம் குறைவாக இருக்க வேண்டும். ஹார்னே உபயோகிக்கக் கூடாது.

வண்டி வாகனங்கள் இதில் செல்லும்போது மிக மிக மெதுவாகத்தான் செல்லமுடியும், இல்லாவிட்டால் லடக் லடக் என்று சீக்கிரம் டயர் தேய்ந்துவிடும். செங்கல் சைஸில் சுட்ட கற்களை அடுக்கி அமைக்கப் பட்டுள்ளது.

மழைநீர் சேகரமாகும். நீர் நிற்காது வழிந்தும் ஓடிவிடும். நிலம் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருப்பதால் கான்வாஸ் ஷூ, லெதர் ஷூ போட்டுச் செல்பவர்களுக்கும் வண்டி ஓட்டிகளுக்கும் கூட வழுக்காது !.
அழகுக்கு அழகும் கூட..

குடியிருப்புப் பகுதிகளில் இப்படிச் சாலைகள் அமைத்தது முன்னெச்சரிக்கை என்பதா கருணை என்பதா காருண்யம் என்பதா. :) <3 p="">
#இத்தாலி.. மாஃபியாக்கள் நிறைந்த ஊர் மட்டுமல்ல மனிதமும் நிறைந்த ஊர்தான்.

Related Posts Plugin for WordPress, Blogger...