எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அதிபத்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிபத்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

சிறந்ததை அளித்த அதிபத்தர். தினமலர் சிறுவர்மலர் - 32.

சிறந்ததை அளித்த அதிபத்தர்.
மனிதர்கள் பொதுவா தனக்கு எந்த விதத்திலும் தேவைப்படாது என்று கருதும் பொருளையே பிறருக்கு எந்தத் தயக்கமுமில்லாமக் கொடுப்பாங்க. எவ்வளவு இருந்தாலும் தனக்கு தனக்கு என முடிந்துவைத்துக் கொள்வார்கள். அப்படி இல்லாமல் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்த ஒருவர் மிகச் சிறந்ததையே கொடுக்கும் வழக்கமுள்ளவராக இருந்தார். அப்படி அவர் கொடுத்த மிகச் சிறந்த பொருள் எது, அதை யாருக்குக் கொடுத்தார்னு பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சோழநாட்டில் நாகப்பட்டினம் என்ற ஒரு ஊர் உள்ளது. இந்த ஊர் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் பக்கமுள்ள நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் பலர் வசித்து வந்தார்கள். அவர்களின் தலைவரான அதிபத்தர் என்பாரும் அங்கேயே வசித்து வந்தார். அவர் சிவனின் மேல் பக்தி கொண்டவர்.
தினந்தோறும் மீன் பிடிக்கச் செல்கையில் முதலில் பிடிக்கும் மீனை சிவனுக்கு என்று சொல்லிக் கடலிலேயே விட்டுவிடுவார். இப்படி ஒரு நாளில் எத்தனை மீன் கிடைத்தாலும் சரி அல்லது ஒரு மீன் மட்டுமே கிடைத்தாலும் சரி அந்த முதல் மீனை சிவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு மீதி மீன்களை விற்றுத் தன் அன்றாட செலவுகளைச் செய்து வாழ்ந்து வந்தார்.
Related Posts Plugin for WordPress, Blogger...