எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 7 ஜனவரி, 2019

வலிமை மிக்க வாலி.! தினமலர் சிறுவர்மலர் - 51.

வலிமை மிக்க வாலி.!
லவான் என்றால் வலிமை உடையவன். வலிமை என்றால் சாதாரண வலிமை அல்ல. நேர்மையும் வீரமும் கொண்ட ஒருவன் பத்துத்தலை உள்ள ஒருவனைக் கைக்குள் பிடித்து அடக்க முடியுமா. அடக்கி இருக்கிறானே. அந்தப் பத்துத்தலை கொண்டவனும் வீரதீரப் பராக்கிரமம் மிக்கவன்தான். அதெப்படி முடியும் என்று நினைக்கிறீர்கள்தானே. அந்த பலவான்களைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கிஷ்கிந்தை என்றொரு நாடு இருந்தது. அதை நிரஜன் என்னும் வானர அரசன் ஆண்டுவந்தான். அவனது மகள் விரஜா மிக மிக அழகி. அவளை நிரஜன் ருஷீடன் என்ற வானர அரசனுக்கு மணம் செய்து கொடுத்தான். இவர்களுக்கு வாலி, சுக்ரீவன் என்ற இரு வானர இளவரசர்கள் பிறந்தார்கள்.
வாலி மிகுந்த வலிமை வாய்ந்தவன். இவன் சுவேஷன் என்ற வானர அரசனின் மகளான தாரையை மணந்தான். கேசரி என்ற வானரனுக்கும் அவனது மனைவி அஞ்சனைக்கும் பிறந்த அனுமன் பிறந்தார். கிஷ்கிந்தையை வாலி ஆட்சி செய்துவர அனுமன் அவருக்கு மந்திரியாக ஆலோசனை வழங்கி வந்தார்.
து இப்படி இருக்க இந்த தசமுகன் என்பான் யார் என்று பார்ப்போம். இவன் பத்துத்தலை கொண்டவன். இலங்காதிபதி. சிறந்த சிவபக்தன். வீணை இசைப்பதில் வல்லவன். இவன் பாடிய சாமகானத்தைக் கேட்டு சிவன் மகிழ்ந்து பல வரங்கள் கொடுத்திருக்கிறார்.
இவன் திக்பாலகர்களை வெற்றி கொண்டவன். தோல்வி என்பதே அறியாதவன். மூன்று லோகமும் இவன் காலடியில். நவக்ரகங்களும் இவனது சிம்மாசனப்படியில் . இப்படியான கீர்த்திகளைக் பெற்ற இவன் வாலியின் வலிமையைக் கேள்விப்பட்டு அவனை அடக்க வேண்டும் என எண்ணினான்.

சனி, 5 ஜனவரி, 2019

சாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “!

வாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றார்கள். படித்துப் பயன் பெற வேண்டுகிறேன் மக்காஸ். 

எல்லோருக்கும் தேவை ”காஃப்ஃபீடு” !

ஸார்,  இன்ஷுரன்ஸ் எல்லாம் வேஸ்ட் ஸார்.   முப்பது வருஷம் கழிச்சி பணத்துக்கு மதிப்பே இருக்காது.  ஒங்களுக்குத் தெரியுமா அன்னைக்கு ஒரு கப் காஃபி ஆயிரம் ரூபா ஆகிடும்.

ஏன்யா சேமிக்கலைன்னு கேட்டா வீல்பர்ரோ எக்கனாமிக்ஸ் பத்திப் பேசுவாங்க. 

இதோ படத்தில் இருக்கிறதே வண்டி நிறைய பணம்.  அதைத் தள்ளிக் கொண்டு போகிறார் ஒருவர்.

திடீரென எங்கிருந்தோ வந்து குதிக்கிறார்கள் சில வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள்.  செல்வந்தரிடமிருந்து வண்டியைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்.  அடுத்து ஒரு காரியம் செய்கிறார்கள்.  அதுதான் ஆச்சரியமே.  வண்டியில் உள்ள பணத்தைத் தெருவில் கவிழ்த்துக் கொட்டுகிறார்கள்.  பணத்தை விட்டு விட்டு வண்டியைத் தள்ளிக் கொண்டு ஓடி விடுகிறார்கள்.   

ஏனென்றால் பணத்தை விட வண்டி மதிப்பு மிக்கது.  இதையே “WHEELBARROW” பொருளாதாரம் என்று சொல்வார்கள்.

வெள்ளி, 4 ஜனவரி, 2019

அஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.

அஃகப் பானையும் எஃகுப் பானையும்/ பானை பிடித்தவள் பாக்கியசாலி.
  அஃகப் பானையும் எஃகுப் பானையும்

  “தஞ்சாவூரு மண்ணு எடுத்துத் தாமிரபரணித் தண்ணியவிட்டு சேர்த்து சேர்த்து செய்ததிந்தப் பொம்மை” என்ற பாடலைக் கேட்டிருக்கலாம். பெண்ணைக் குறித்துப் பாடப்பட்ட பாடலானாலும் பானை வகைகள் டெல்டா போன்ற பகுதிகளில் இருக்கும் களிமண் கொண்டு ஆற்று நீரால் பிசையப்பட்டு வனையப்படுவதை இப்பாடல் அழகாக விவரிக்கின்றது. அதே போல் திருமணமானதும் தம்பதியர் வாழ்வு செல்வச் செழிப்போடு சிறந்தோங்கினால் ’பானை பிடித்தவள் பாக்கியசாலி’ என்று சொல்வதும் உண்டு.  

வியாழன், 3 ஜனவரி, 2019

ஹோகனேக்கல் தொங்கு பாலம்.- HOGENAKKAL HANGING BRIDGE.

ஹோகனேக்கல் - காவிரி ஆறு பாயும் தமிழக கர்நாடக எல்லையில் இருக்கும் ஊர். இங்கே வட்டு எனப்படும் பரிசல் ப்ரயாணம் பிரசித்தம். இந்தியாவின் நயாகரான்னு கூட சிலாகிக்கிறாங்க. தர்மபுரியிலேருந்து பக்கம்.

அங்கே தொங்கும் பாலத்துல போய் பார்த்ததையும் அங்கே இருந்த பச்சைப் புல்வெளிகளையும் என் காமிரா கண்ணால பார்த்து எடுத்துட்டு வந்திருக்கேன் உங்களுக்காக மக்காஸ்.

தமிழ்நாடு வனத்துறை போர்டு.

வனவிலங்குகள் செல்லும் பாதை என்பதால் முன் அனுமதி பெற்றே போகணும்.

புதன், 2 ஜனவரி, 2019

தந்தைக்கு நிகராக உயர்ந்த மைந்தன் ச்ருதகர்மா. தினமலர். சிறுவர்மலர் - 50.

தந்தைக்கு நிகராக உயர்ந்த மைந்தன் ச்ருதகர்மா:-
ருப்பாக இருக்கிறான் என்று ஒரு குழந்தையை அவனைப் பெற்ற தந்தையே வெறுக்க முடியுமா. ஆனால் வெறுத்துவிட்டாரே. அவர்தான் சூரிய பகவான். அதோ காலைச் சாய்த்து சாய்த்து மனவருத்தத்தோடு நடந்து செல்கிறானே ஒரு சிறுவன், அவன்தான் அவரது புத்திரன் க்ருதவர்மா என்ற சனி. தன்னை அடியோடு வெறுத்த தந்தையிடம் நற்பெயர் வாங்க அவன் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா. அதனால் சூரியன் மனம் மாறினாரா எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சூரியனின் மனைவி பெயர் உஷாதேவி. அவர்களுக்கு முன்று குழந்தைகள் பிறந்தபின்பு உஷாதேவியால் சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. தன்னைப் போல உருவம் கொண்ட ஒரு பெண்ணைப் படைத்து அவளை சூரியனுடன் குடும்பம் நடத்தச் சொல்லிவிட்டு தவம் செய்யப் பூலோகம் சென்று விட்டாள். அவள்தான் சாயாதேவி.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் இரண்டு குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்கள் ச்ருதகர்மா என்ற ஆண் குழந்தையும் , தபதி என்ற பெண் குழந்தையும். உஷாதேவியின் நிழலிலிருந்து உருவானவர்தான் சாயாதேவி என்பதால் அவருக்குப் பிறந்த ச்ருதகர்மா என்ற சனீஸ்வரன் கருமை நிறமாகப் பிறக்கிறார்.