சிறை இராஜேஷ்
”ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் பூத்திருக்கு. ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்தை. சேர்த்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே.. பட்டுவண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம். பாசம் என்னும் நீர் எறைச்சு ஆசையிலே நான் வளர்த்தேன். நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன். என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உனை..”என்ற உயிர்த்துடிப்பான பாடல்கள் இவரது படங்களில் இடம்பெற்றிருக்கும்.
நடிப்புத் துறையில் 50 ஆண்டுகள் 150 படங்கள். அவள் ஒரு தொடர்கதை, கன்னிப் பருவத்திலே, அறை எண் 305 இல் கடவுள், ஆட்டோகிராஃப், ஒரு கல் ஒரு கண்ணாடி, தனிக்காட்டு ராஜா, தீனா, நிலவே மலரே, மெட்டி, ரமணா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜி, ஜெய்ஹிந்த் இவற்றோடு கமலுடன் விருமாண்டி, சத்யா, மகாநதி என்று மூன்று படங்களில் நடித்துள்ளார். இதில் இரு படங்களில் நேர்மையான காவலராக வருவார்.