எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தில்லானா மோகனாம்பாள் பத்மினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தில்லானா மோகனாம்பாள் பத்மினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

தில்லானா மோகனாம்பாள் பத்மினி

தில்லானா மோகனாம்பாள் பத்மினி


”உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதனாலே, முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே, பச்சைக் கிளி பாடுது, மன்னவன் வந்தானடி தோழி, மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்” இப்பாடல்களைக் கேட்கும்போது எதுகை, மோனை, சந்தலயம் போல் சிவாஜியும் பத்மினியும் நம்முள் கலந்து நிற்பார்கள்.

திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்தவர். தந்தை தங்கப்பன், தாய் சரஸ்வதி. ஜூன் 12, 1932 இல் பிறந்தார். செப்டம்பர் 24, 2006 இல் மறைந்தார். இவரது சகோதரிகள் லலிதா, ராகினி, மூவருமே புகழ் பெற்ற நடனமணிகள் மற்றும் நடிகைகள். இவர்கள் திருவிதாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டார்கள். நடிகை ஷோபனா இவரது அண்ணன் மகள். இவரது கணவர் பெயர் ராமச்சந்திரன். ஒரே மகன் பெயர் ப்ரேம் ஆனந்த். பத்மினி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் நடனப் பள்ளியை நடத்தி வந்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...