சாபம் நீங்கி ஞானம் பெற்ற சத்தியதவன்
முன்னோர் செய்த புண்ணியம் தலைமுறை தலைமுறையாகத் தொடரும். அதேபோல்தான் அவர்கள் செய்த பாவமும். நாகாவாமல் தன் தந்தை செய்த பிழையால் சாபத்தோடு பிறந்து அம்பிகையின் பீஜாக்ஷரத்தால் ஞானம் பெற்ற சத்தியதவனைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
வேத காலத்தில் கோசல தேசத்தில் தேவதத்தன் தன் மனைவி ரோகிணியுடன் வசித்து வந்தான். பல்லாண்டுகாலம் பிள்ளைப்பேறு இல்லாததால் இருவரும் மனம் வருந்தினார்கள். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் பிள்ளைப் பேறு உண்டாகும் என்று சொல்லப்பட அதற்கான யத்தனங்களில் இறங்கினான் தேவதத்தன்.
