எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 27 பிப்ரவரி, 2013
தகுதியுள்ளது..
மறைமுக பாலியல்
துன்பியலில் பயந்து
நடுங்கிக் கிடக்கிறாள்.
நெடுஞ்சாலை ஓர
குத்துப் புதருக்குள்
காதலனை சந்திக்க
சென்றவளின் பிணம்.
மிதவாதியா அல்லவா
பிரிக்கத் தெரியாமல்
சூலுற்றவளுக்கு
சிறையில் பிரசவம்.
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
ஷாம்பூ
”அம்மம்மாகிட்ட கேளு.சீயக்காய்தான் நல்லது. “ அம்மா ரேச்சல்.
“ஷாம்பூவே போடு. அதென்ன அம்மம்மாகிட்ட கேக்கிறது..” தன் அதிகாரத்தை நிலைநாட்டியபடி நகர்ந்தாள் மீத்துவின் தாதி ப்ரேம்.
டில்லிக்கு வேலை நிமித்தம் வந்தபோது பஞ்சாபின் திலீப் சர்மாவை காதல் மணம் செய்தவள் கேரள ரேச்சல்.
கேரளாவின் சிவப்பரிசிச் சோறு., குழாய்ப்புட்டு., கடலைக்குழம்பு., சாப்பிட்டு வளர்ந்த ரேச்சல் மாமியாருக்காக ரோட்டி., காலிதால் மாக்னி., பஞ்சாபி பனீர்., ஆலு கோபி., கோப்தா க்ரேவி., கடி., என உணவையும் மாற்றிக் கொண்டாள். தேங்காய் எண்ணெய், சீயக்காய் குளியல்தான் மாற்ற முடியவில்லை அவளால்.
திங்கள், 25 பிப்ரவரி, 2013
மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
லங்காதீபம் ( கவியருவி) விருது.
வியாழன், 21 பிப்ரவரி, 2013
நெருஞ்சி. கவிதைத் தொகுதி எனது பார்வையில்
நெருஞ்சி
புதுக்கவிதையில் சமுதாய சிந்தனைகளைத் தூண்டிய தொகுப்பு “நெருஞ்சி”. இதன் ஆசிரியர் கால காலன். எல்லாந்தந்த தாய்க்கும் தந்தைக்கும் படைத்திருக்கும் இவர் தனது சொந்தப் பதிப்பகத்திலேயே இதை வெளியிட்டிருக்கிறார். விலை ரூ 75.
75 கவிதை கொண்ட இந்த கவிதைத் தொகுப்பு சமுதாயத்தின் அவலங்களைச் சுட்டி நெருஞ்சி முள்ளாய்த் தைக்கிறது. இதன் முன்னுரையில் கவிப்பேரரசு வைரமுத்து இதைக் குறிஞ்சிப் பூக்கள் எனக் குறிப்பிட்டது தகுமே.. ஏனெனில் சமுதாய நோக்கோடு படைக்கப்படும் கவிதைகள் அரிதான காலகட்டத்தில் இந்தத் தொகுப்பு நம் வாழ்வியல், அரசியல், நடப்பியல், சூழலியல் குறித்த கேள்விகளைக் கேட்டபடி செல்கிறது.
புதன், 20 பிப்ரவரி, 2013
ஓய்வும் பயணமும்.
வெள்ளையடிக்கப்பட்ட மதகடியில்
ஓய்ந்தமர்ந்தேன்.
கரண்டுக் கம்பங்களில் காக்கையும்
மதகடி நீரில் கொக்கும்
வயல் வரப்புக்களில் நாரையும்
நெத்திலிகள் நெளிந்தோட
குட்டிச் சோலையாய்
விளைந்து கிடந்தது வாய்க்கால்.
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
திங்கள், 18 பிப்ரவரி, 2013
தீக்கதிரில் ..
வெள்ளி, 15 பிப்ரவரி, 2013
விஸ்வரூபம்.. எனது பார்வையில்
ஒரு பெரியவர் புறாக்களுக்கு தீவனம் அளித்தபடி தோன்றுகிறார். ஒரு புறாவை மட்டும் எடுத்துப் பறக்க விடுகிறார். பின்னால் அமர்ந்திருந்த இருவரில் ஒருவர் “ இவர் கமலஹாசனா.. ? “ இன்னொருவர் “ இவர் கமலஹாசனாவும் இருக்கலாம். அவர் எந்த ரோலும் பண்ணுவார்.” என்கிறார்.
பயங்கர எதிர்ப்பார்ப்போடு படம் பார்க்கத் துவங்குகிறோம். விஸ்வநாதனின் மனைவி பூஜா குமார் தனக்கு ஏற்படும் சமீப அனுபவங்களை ஒரு டாக்டரிடம் பகிர்கிறார். அதே நேரம் ஒரு டிடக்டிவை ஏற்பாடு செய்து தன் கணவரைப் பின் தொடரச் செய்கிறார். அவர் புகைப்படம் எடுத்து பூஜாவின் கணவர் ஒரு முஸ்லீம் என்பதை பதிவு செய்கிறார். கண்ணாடிச் சுவர்களுடன் மாஸ்க் என்பது வெளிநாடுகளில் இருக்குமோ.. # டவுட் நம். 1.
வியாழன், 14 பிப்ரவரி, 2013
காதல் கசப்பா இனிப்பா..
புதன், 13 பிப்ரவரி, 2013
மாமியார் vs மருமகள்
செவ்வாய், 12 பிப்ரவரி, 2013
சாதனை அரசிகள் புத்தக வெளியீட்டில் திரு பாரதி மணி அவர்களின் உரை..
சாதனை அரசிகள் புத்தகம் ஜனவரி 8 அன்று ( பபாசியில் ) டிஸ்கவரி புத்தக நிலைய ஸ்டாலில் வெளியிடப்பட்டது. என் கணவர் வெளியிட முதல் காப்பியை நடிகர் மற்றும் பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு . பாரதி மணி அவர்களும் , இரண்டாம் காப்பியை கிரிக்கெட்டர் திருஷ்காமினியும் பெற்றுக் கொண்டார்கள்.
திங்கள், 11 பிப்ரவரி, 2013
குங்குமத்தில் பிரபல பதிவர்களின் கருத்துக்கள்.
( சின்மயி மற்றும் ராஜன் பற்றிக் கூறவில்லை. எது சரி என்றும் எது தவறு என்றும் அவர்கள் இருவருக்குமே தெரிந்திருக்கும். ட்விட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்துவிட்டு செல்லாமலே இருக்கிறேன். நடந்தது எதுவும் அங்கங்கே லிங்கில் கிடைக்கின்றன. எல்லாமே சரியா இல்லை இணைப்பா என்றும் தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் வாய்மொழியாக வந்தால்தான் உண்டு. எனவே நான் என்னுடைய கருத்தை மட்டும் சொன்னேன். )
வெள்ளி, 8 பிப்ரவரி, 2013
வியாழன், 7 பிப்ரவரி, 2013
சுவரோவியங்களும் குட்டீஸ் ஓவியங்களும்:-
எங்க தெரியுதுன்னு கேக்கிறீங்களா.. அதுக்கெல்லாம் கொஞ்சம் கலைக் கண் வேணுங்க..! ( ஹிஹி ).
எனக்குத் தெரிஞ்ச சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு.
இது சித்தன்ன வாசல், குடுமியான் மலை ஓவியங்களை ஞாபகப்படுத்துது இல்லையா. எதிர் காம்பவுண்டுல மண் சுவர் வீடு பேர்ந்து உருவான ஓவியம் இது. சிலருக்கு ஒரு படத்துல வடிவேலு தலை இப்படி இருந்தது ஞாபகம் வரலாம்.
புதன், 6 பிப்ரவரி, 2013
தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில் .
தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி
சுயகம்பீரத்தோடு ஆரம்பிக்கும் இந்தத் தொகுதி சுய எள்ளல் ,சுய விமர்சனம் எல்லாம் கலந்து செல்கிறது. ஏதோ ஒன்றைத் தேடுதல், கிடைத்ததை வைத்து திருப்தி அடைதல் என்ற மத்தியதர மனப்பான்மை பல கதைகளில் காணக் கிடைக்கிறது.
மொத்தம் பத்துக் கதைகள். எல்லாமே பொதுவாக மனம் சார்ந்தவைதான். மிகப் பெரும்பாலும் ஒரு ஆணின் பார்வையிலும் ஓரிரு கதைகள் மட்டும் பெண்களின் பார்வையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் வரும் கதைகள் எல்லாம் விசித்திரம் நிரம்பியவை. யாராலும் புரிந்து கொள்ள முடியாத மந்திரப் பேழை போல அவ்வப்போது திறந்து மூடும் கனவுகள் நிரம்பியவை. யதார்த்த உலகை மறுப்பவை. இவற்றையும் பதிவு செய்திருக்கும் அய்யப்ப மாதவனுக்கு வாழ்த்துக்கள்.
செவ்வாய், 5 பிப்ரவரி, 2013
ப்ளூம்பாக்ஸ் (BLOOM BOX ) எப்போ இந்தியாவுக்கு வரும்
**********************************************
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்து வழங்க ( 3 ஆண்டுகளில் ) தமிழக அரசு திட்டம் அறிவித்து இருக்கும் நேரம் நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்க விரும்புறேன்.
நம்ம ஊரைச் சேர்ந்த கே. ஆர் . ஸ்ரீதர் கண்டுபிடிச்ச ‘ப்ளூம் பாக்ஸ்’ மூலமா ஆக்சிஜனும் ( ஆக்சிஜனையும் தயார் செய்து அனுப்பணும் ) இயற்கை எரிபொருள் அல்லது சூரிய சக்தி சேர்த்து ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின்சாரத்தை நாமே தயாரிச்சுக்கலாம். ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் இருக்கா..
திங்கள், 4 பிப்ரவரி, 2013
நிலங்களுக்கும் ரேஷன்.
சென்ற சில மாதங்களாக தொடர்ந்து பயணங்கள் செய்யும் போது ஒரு விஷயம் பளிச்செனக் கண்களில் அறைந்தது. அது என்னவெனில் நம் தமிழ்நாடு முழுமைக்கும் ரியல் எஸ்டேட்டாக துண்டு போடப்பட்டிருக்கும் காட்சி. காடு, மலை, மேடு, கம்மாய் ஊரணி , அருவி போன்ற சில இடங்களைத் தவிர எல்லா இடங்களும் கற்களாலும் காம்பவுண்ட் சுவர்களாலும் கட்டம் பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றன.
நிறைய விவசாய நிலங்கள் மற்றும் தூர்ந்த குளங்கள், ஏரிகள் கூட. இதனால்தான் மழை வரும் நேரம் அந்த வீடுகள் எல்லாம் நீரில் மூழ்கிக்கிடக்கின்றன. நிறைய மரங்கள் வைப்பதன் மூலம் காற்றை உற்பத்தி செய்யலாம். கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கலாம் ஆனால் உற்பத்தி செய்ய முடியாத ஒன்று என்றால் அது நிலம் மட்டுமே.





