எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 அக்டோபர், 2017

அசடன் – ஒரு பார்வை.

அசடன் – ஒரு பார்வை.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

4 கருத்துகள்:

  1. அருமையான விமர்சனம்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான நூல், மதிப்புரை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  4. //மொழிபெயர்ப்பு நூல்களை விமர்சிக்கும்போது மொழிபெயர்ப்பை விமர்சிப்பதா அல்லது நூலை விமர்சிப்பதா என்ற குழப்பம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. ஏனெனில் மொழிபெயர்ப்பை விமர்சிக்க அது பற்றி வெவ்வேறு மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலேயே வெவ்வேறு ஆசிரியர்களாலோ எழுதப்பட்டதை வாசித்திருக்க வேண்டும். நூலை விமர்சிக்கும்போது அந்நூலின் மூலக்கதை ஆசிரியர் எழுதிய காலகட்டத்தை ஒட்டியும் தெரிந்திருக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளர் மிகச் சரளமாக மொழிபெயர்த்திருந்தால் அது அவர் எழுதியதோ என்னும் இலக்கியமயக்கம் நம்மை ஆட்கொண்டுவிடும்.//

    மொழிபெயர்ப்பு நூல் எம்மொழியில் பெயர்க்கப்படுகின்றதோ அதைத் தாய்மொழியாக (இங்கே தமிழ்) கொண்டு, எம்மொழியில் அம்மூலநூல் எழுதப்பட்டதோ (இங்கே உருசிய மொழி - ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து என்றால் ஆங்கிலம்) அம்மொழி தெரியாதவர்களுக்காக மட்டுமே. இருமொழிகளும் நன்கு தெரிந்தவர்களுக்கு மொழிபெயர்ப்பேன்? எனக்கு உருசிய மொழி தெரிந்திருந்தால் நானேன் ''அசடனை'' வாங்கி படிப்பேன்? தமிழ்தெரிந்தால் திருவாசைத்தையும் திருக்குறளையும் நானாகவே படிப்பேன். ஏன் ஜி யு போப்பின் ஆங்கில மொழியாக்கத்தைப்படிப்பேன்? அம்மொழியாக்கம் ஆங்கிலேயர்களுக்காக பண்ணப்பட்டது. உங்கள் குழப்பம் காரணமேயில்லாதது. ஒன்று மூலநூலின் மொழி; அல்லது அதை பெயர்க்கப்பட்ட நூலில் மொழி (இங்கே முறையே உருசிய, ஆங்கில மொழிகள்) இதில் இரண்டிலொன்றைத் தெரிந்து அதில் வாசித்துவிட்டு அசடனை நீங்கள் மொழிபெயர்ப்பு சரியாக வந்திருக்கிற்தா என் விமர்சிக்க வேண்டுமா? அப்படித்தான் சொல்கிறீர்கள். ஏன் காலகட்டம் மட்டும்? அந்நூலில் பிற்புல பண்பாடும் தெரிந்திருந்திருப்பது நல்லது. ஆனால் அது முடிவென்றால், மொழிபெயர்ப்பு நூல்களை எவரும் வாசிக்க முடியாது. நூலை வாசிக்கும்போதே அக்காலமும் அப்பணபாடும் தானாகவே வந்து நிற்கும்படியே எழுதியிருப்பார். அதையும் நாம் சேர்த்தே இரசிப்போம். எனவே அசடனை வாசிக்க எனக்கு உருசியாவின் 19ம் நூற்றாண்டு வரலாறோ, வாழக்கை பணபாடோ முன்னரே தெரியவேண்டியதில்லை !.

    அப்படி அவர் எழுதியதோ என்ற இலக்கிய மயக்கம் தோன்றினால், மொழிபெயர்ப்பு மோசம் என்று பொருள். ஒரு மொழிபெயர்ப்பாளனின் முதலும் கடைசியுமான கடமை - மூல நூலை அப்படியே தருவது. தான் எதையுமே கலக்கக்கூடாது. அப்படி கலக்கும் போது, ஒரு மூலக்கதையெடுத்து பற்பல கற்பனைகள் கலந்து இல்லாத கதாபாத்திரஙகளை புதியதாகச் சேர்த்து, அல்லது இருக்கும் கதாபாத்திரங்களை அழித்துவிட்டு படைப்பதுவே. எ.கா. ப்ரண்டியின் ஆங்கில நாவல் ஜேன் ஐயரை மூலக்கதையாக எடுத்து வந்த திரைப்படம் ''சாந்தி நிலையம்''. செகப்பிரியரின் ஒதெல்லோ நாடகத்தை ''நிச்ச்ய தாம்பூலம்'' இப்படி நாவல்களும் உண்டு. இவை தழுவலகள் எனப்படும்.

    ஒன்று மட்டும் தெரியவேண்டும். எவ்வளவுதான் சிற்ப்பாக மொழிபெயர்ப்பு இருந்தாலும், மூலநூல வாசிப்பு இன்பம் முழவதும் மொழிபெயர்ப்பில் வராது. திருவாசகத்தைத் தமிழில் வாசிக்கும்போது, அதன் உயிர் - மணிவாசகரின் ஆழ்ந்த சிவபக்தியிலும், அவரின் மொழி அப்பக்திய எப்படி நமக்கு நல்க பயன்படுத்தப்படுகிறது என்பதையுன் உணர்கிறோம். மொழிக்கென்றே ஓர் அழகுண்டு. மொழிபெயர்ப்பில் அதைக்கொண்டுவர முடியாது. குறிப்பாக இங்கே அசடன் மூல மொழி உருசியனினிலிருந்து பெயர்க்கப்படவில்லை. அதன் ஆங்கில மொழியாக்கத்திலிருந்தால். எப்படி மூல நூலில் மொழியழகைத் தரமுடியும்?

    கதை மட்டுமே மொழிபெயர்ப்பில் சாத்தியம்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...