எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

கம்பன், தஸ்தயேவ்ஸ்கி பற்றிய இலக்கியப் பங்களிப்பில் சுசீலாம்மாவும் அம்மா இலக்கிய விருது பெற்ற முனைவர் சிங்கை லெக்ஷ்மி அவர்களும்.

கம்பன் தொட்ட சிகரங்கள் என்ற தலைப்பில் மார்ச் 27 ஆம் தேதியன்று காரைக்குடிக் கம்பன் விழாவில் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அன்னை சுசீலாம்மா அவர்கள் உரையாற்றினார்கள். அது அன்றே விஜயா பதிப்பகத்தாரால் நூலாகவும் பதிப்பிக்கப்பட்டது. அதற்காகவும் தஸ்தயேவ்ஸ்கியின் நூல்களைத் தமிழில் கொணர்ந்ததற்காக ரஷ்யன் கல்சுரல் செண்டரில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய பாராட்டு விழாவுக்காகவும் அம்மாவுக்கும் என் அன்பையும் வாழ்த்துக்களையும் பணிவான வணக்கங்களையும் செலுத்துகிறேன். வாழ்க வளமுடன் அம்மா என்னும் தேவதை.  
அத்துடன் தமிழக அரசால் அம்மா இலக்கிய விருது பெற்ற முனைவர் சிங்கை லெக்ஷ்மி அவர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரின் தமிழ்ப்பணியும் போற்றுதலுக்குரியது. பல்வேறு ஆய்வு நூல்களும் கட்டுரைத் தொகுப்புகளும் எழுதிய இவர் சென்ற நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கில் செட்டிநாட்டுப் பெண் படைப்பாளிகள் என்ற தலைப்பில் என் படைப்புகள் பற்றியும் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். நமது செட்டிநாடு இதழின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும். 

செவ்வாய், 31 அக்டோபர், 2017

அசடன் – ஒரு பார்வை.

அசடன் – ஒரு பார்வை.


மொழிபெயர்ப்பு நூல்களை விமர்சிக்கும்போது மொழிபெயர்ப்பை விமர்சிப்பதா அல்லது நூலை விமர்சிப்பதா என்ற குழப்பம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. ஏனெனில் மொழிபெயர்ப்பை விமர்சிக்க அது பற்றி வெவ்வேறு மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலேயே வெவ்வேறு ஆசிரியர்களாலோ எழுதப்பட்டதை வாசித்திருக்க வேண்டும். நூலை விமர்சிக்கும்போது அந்நூலின் மூலக்கதை ஆசிரியர் எழுதிய காலகட்டத்தை ஒட்டியும் தெரிந்திருக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளர் மிகச் சரளமாக மொழிபெயர்த்திருந்தால் அது அவர் எழுதியதோ என்னும் இலக்கியமயக்கம் நம்மை ஆட்கொண்டுவிடும்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

அசடனில் குற்றமும் தண்டனையும் கடிதம்.

அசடன் நூலில் அவர்களது மொழிபெயர்ப்பு நூலான குற்றமும் தண்டனையும் பற்றிய எனது கடிதத்தையும் வெளியிட்டு கௌரவம் கொடுத்துள்ளார்கள் சுசீலாம்மா.

நன்றி அம்மா. :) மிகப் ப்ரபலமான எழுத்தாளர்களோடு எனக்கும் ஒரு தனியிடம் கொடுத்தமைக்கு அன்பும் நன்றியும்மா.
Related Posts Plugin for WordPress, Blogger...