சங்கரன்கோவில் கோமதி அம்மனைத் தரிசிக்க வேண்டும் என்பது பல நாள் ஆவல். அது சில வருடங்களுக்குமுன் நிறைவேறியது. கோயிலுக்கு உள்ளேயே புற்று எல்லாம் உள்ளது பிரகாரத்தில். புற்றுமண்ணே பிரசாதமாகும். அம்மனுக்குப் புஷ்பப் பாவாடை என்று சில வேண்டுதல்கள் கேள்விப் பட்டதுண்டு. மிக ஆத்மார்த்தமான தரிசனம்.
குற்றாலம் சித்திர சபை.
தென்காசி காசி விசுவநாதர் கோவில்.
உலகம்மன் கோவில் என்றும் சொல்கிறார்கள்.
ஒன்பது நிலை இராஜகோபுரம் கொண்டது.
இங்கே கோவிலே தேர் போன்ற அமைப்பில் அமைந்துள்ளது.
முன்னே இரு யானைகள் கட்டி இழுத்துச் செல்கின்றன.
குற்றாலம் ஐந்தருவியிலும் மெயின் ஃபால்ஸிலும்.சில சமயம் குற்றாலம் அருவி பொங்கிப் பாய்ந்து வெருட்டி விடுமாம்.
அங்கே பழங்கள் அனைத்தும் கிடைத்தன. லிச்சி, ரம்புஸ்தான், ட்ராகன் பழங்களை வாங்கி ருசித்தோம்.












கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)