எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 11 ஜனவரி, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். சண்முக வடிவு -- யோகா ஒரு வைப்புநிதி.


முகநூல் தோழி சண்முக வடிவு அவர்கள் யோகக் கலை பயிற்சியாளர். அவங்க ஒரு முறை ஒரு போஸ்டுக்கு பதில் சொல்லி இருக்கும்போது மாமியாராயிட்டதைக் குறிப்பிட்டு இருந்தாங்க. இவ்ளோ சின்ன வயசிலேயே மாமியாராயிட்டீங்களான்னு நான் அவங்கள ஆச்சர்யமா கேட்டிருந்தேன். திருமணமான சின்னப் பெண் போலிருக்கும் சண்முக வடிவு அவர்களின் ஃபிட்னெஸ்ஸுக்கும் புத்துணர்ச்சிக்கும் காரணம் யோகாதான்.

யோகா என்பதால் , அது அனைவருக்கும் முக்கியமானது என்பதால் ஜாலி கார்னரா கேக்க முடியல..


எல்லார்கிட்டயும் கேள்வி கேட்டா பொதுவா ஜாலியா கேலியா கிண்டலா பதில் சொல்ல சொல்லுவேன். பட் யோகா ரொம்ப இம்பார்ட்டெண்ட் என்பதால் நோ கிண்டல்.. ஒன்லி மேட்டர்.

 /////யோகா ஏன் அவசியம். இதுனால என்னென்ன நன்மைகள்.. ////

புதன், 8 ஜனவரி, 2014

பாராவின் கருவேல நிழலும் மண்டூகம் துப்பும் மொழியும்.

பாராவின் கருவேல நிழலும் மண்டூகம் துப்பும் மொழியும்

சிவகங்கைச் சீமையில் கருவை மரங்கள் அதிகம். அதன் நிழல் என்று ஏதுமில்லை. அதன் நிழலில் யாரும் அமர முடியாது. வெக்கையும் புழுக்கமும் நிரம்பிய கரம்பைக் காட்டில் அடர்ந்து முளைத்திருக்கும் கருவைகள்.

வெட்டிய யாருக்கும் முள் குத்தாமல் இருந்திருக்க முடியாது.அந்தக் கருவேல நிழல் தலைப்பில் தொகுக்கப்பட்ட வலையுலக நண்பர் ராஜாராம் அவர்களின் கவிதைத் தொகுப்புப் படித்துப் பலகாலம் ஆயிற்று.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

பச்சிளம் குழந்தைகளும் பாலியல் பலாத்காரமும்.:-


பச்சிளம் குழந்தைகளும் பாலியல் பலாத்காரமும்.:-


ஒன்றரை வயதுப் பெண் குழந்தையில் இருந்து கற்பழிக்கப்படும் துர்ப்பாக்கியத்தில் உள்ளது பெண்ணினம்.  என்ன கொடுமை இது. இவ்வாறு செய்பவர்கள் ( மிக சொற்ப கேஸ்களைத் தவிர ) வேறு அந்நியர்கள் அல்ல. அந்தக் குழந்தைக்குப் பலமுறை பரிச்சயமானவர்களே. 

திங்கள், 6 ஜனவரி, 2014

அன்ன பட்சி. -- எண்ணங்களின் தூது..

2009 ஜூலை 15 இல் வலைத்தளம் ஆரம்பித்து எழுதத் துவங்கினேன்.அதை ஆரம்பித்துக் கொடுத்தவரே என் தமிழன்னை சுசீலாம்மா அவர்கள்தான்.

அதன்பின் இரண்டரை வருடங்கள் கழித்து 2012 ஜனவரியில் என் முதல் புத்தகம் ”சாதனை அரசிகள்” வெளிவந்ததது.

அதே வருடம் ஃபிப்ரவரி 5 இல் என் இரண்டாம் புத்தகம் ’ங்கா’ வெளிவந்தது.

என் மூன்றாம் புத்தகம் கிட்டத்தட்ட 4 1/2 வருடங்கள் கழித்து வெளிவருகிறது.

கவிதைத் தொகுப்பு போடலாம் என எண்ணும்போதெல்லாம் ஏதோ ஒரு யோசனை தடை செய்துவிடும்.

அகநாழிகை பொன் வாசுதேவன் அகநாழிகை பதிப்பகத்தின் மூலம் பலர் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். அவர் பதிப்பகத்தின் மூலம் என் மூன்றாவது புத்தகம் “ அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பு வெளி வருகிறது.

சனி, 4 ஜனவரி, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், ரமலான் தீன் - காதலர் இருவர் கருத்தொருமித்து..

என் முகநூல் சகோதரர்களில் குறிப்பிடத்தக்கவர் ரமலான் தீன். பிறந்த நாள் என்றாலும் சரி, திருமண நாள் என்றாலும் சரி முதல் வாழ்த்து இவருடையதாகத்தான் இருக்கும். இருவருமே சிவகங்கைச் சீமையைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஊர்ப்பாசமும் அதிகம். 

அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு குண்டக்க மண்டக்க கேள்வி.

////உங்க மனைவி உங்களைத் திட்டினது உண்டா. அப்பிடின்னா எதுக்கு. ஏன். ////