எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 செப்டம்பர், 2012

பிறந்தநாள் பொம்மைகள்..

பிறந்தநாள் குழந்தைக்கு
அணிவகுத்து வருகின்றன
கரடி பொம்மைகள்..
கலர் சாக்குகளில்
பொட்டலமாய் முடியிட்ட
முடிச்சைப் பிடித்து
கைபோன திசையெல்லாம்
அசைக்கிறது குழந்தை.


பிய்த்து உதிரும் பெயர் போக
மிச்சமாய் இருக்கும் பொம்மைகளில்
தொற்றி இருக்கும் அட்டையின்
சில பெயர்கள் குழந்தையின்
அம்மாவின் பிரியத்தை
இழந்ததாய் இருக்கின்றன.

அச்சத்தோடும்., கோபத்தோடும்
வெறுப்போடும்., ஆதங்கத்தோடும்
ஒதுக்கப்படும் அவை
பெயர் அட்டை பிய்க்கப்பட்டு
கட்டிலுக்குக் கீழ் இருக்கும்
பழைய பெட்டியில்
அடைக்கலமாகின்றன.
இன்னொரு குழந்தையின்
பிறந்தநாளுக்குப் பயணப்படுவதற்காக.

டிஸ்கி:- இந்தக் கவிதை 7, ஆகஸ்ட் 2011 திண்ணையில் வெளியானது

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...