எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அவர்களுக்குப் பின்.... மெல்லினத்தில்

அவர்கள் இருக்கும்வரை
அவர்களுடன்.
அவர்கள் வெளியேறியபின்
யாருடன்.

அவர்கள் இருக்கும்வரை
அவர்களுடன்.
அவர்களைக் கொன்றபின்
யாருடன்.


அவர்கள் இருக்கும்வரை
அவர்களுடன்.
அவர்கள் அடையாளம் இழந்தபின்
யாருடன்.

அவர்கள் இருக்கும்வரை
அவர்களுடன்.
அவர்கள் ஆட்சியிழந்தபின்
யாருடன்.

நிராயுதபாணிகளுடன்
போர் புரியுங்கள்.
அவர்கள் எண்ணங்கள்
எழுத்து ஆயுதங்களாக உருமாறி
எய்யப்படும் அபாயத்தை
எதிர்நோக்கியபடி.

 டிஸ்கி:- இந்தக் கவிதை டிசம்பர் 2011 மெல்லினத்தில் வெளிவந்தது.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...