எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 அக்டோபர், 2017

நால்வரும் நடுத்தம்பியும் வெள்ளைக்காரத் தம்பதியினரும்.

காரைக்குடியில் இறைப்பணி ஆற்றிவரும் திருநாவுக்கரசர் நற்பணி மன்றத்தினர் பல வருடங்களாக திருவாசக முற்றோதல் செய்து வருகிறார்கள். இல்லம் செழிக்கவும், நிம்மதி நிலைபெறவும், நன்மை ஓங்கவும் இம்முற்றோதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

திருமணம், சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் , புதுமனை புகுவோர் ஆகிய சுபநிகழ்வுகளிலும் இம்முற்றோதல் செய்கிறார்கள். மேலும் கோயில்களிலும் திருவாசகம் பாடப்படுகின்றது.

இதில் பன்னிரு திருமுறைகளுடன் எட்டாம் திருமுறையில் உள்ள  ”திருவாசகமும்” முழுமையாக ஓதப்படுகிறது. சந்த நயத்தோடு கூடிய இப்பாடல்களை செவிமடுத்தாலே யாக்கை நிலையாமை பற்றிய தெளிவும் பேரின்பப் பரம்பொருளைப் பற்றும் அவாவும் தோன்றும். 
நால்வரின் புகைப்படத்தைத் தாங்கி நிற்பவர் என்னுடைய நடுச்சகோதரர் வள்ளியப்பன் என்ற பாபு என்ற சேவுகன்செட்டி. இவர் தற்போது இல்லை. 2013 ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சிவபதவி அடைந்துவிட்டார். ஆகையால் இப்படம் எனக்கு முக்கியமான ஒன்றாகிறது.

சக்தி இல்லையேல் சிவம் இல்லை ஜீவனும் இல்லை. சிவனைப் பற்றிப் பேசும்போது என் தம்பி நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

பூக்களின் நடுவே நால்வர்.
உத்திராக்கம் இன்றியமையாதது. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் வந்திருந்தோர் ஒவ்வொருவராக வந்து ( தம்பதி சமேதராகவும் ) தீபம் காட்டி வணங்குவார்கள்.
திருவாசத்தேனில் தோய்ந்த சிவனடியார்கள்.
என் தம்பியர் மூவர் தந்தையாருடன். நடுவில் நிற்பவர் நடுத்தம்பி. இப்போது இல்லை என்று கூட நம்பமுடியவில்லை. எங்கோ இருக்கிறார் என்றே எண்ணிக் கொள்வதுண்டு. ஹ்ம்ம்.

முன்புறம் நிற்பவர் முதல் தம்பி, அடுத்து நடுத்தம்பி , கை நீட்டிப் பேசிக் கொண்டிருப்பவர் தந்தையார், பின்னே நிற்பவர் சின்னத்தம்பி .

மதியம் உணவுக்காக சிறிது நேரம் இடைவேளை விட்டு திரும்பப் பாடத் துவங்கினார்கள். அவ்வப்போது பனங்கல்கண்டும், வெந்நீரும், பனங்கல்கண்டுப் பாலும் வழங்கப்பட்டது. ( பாடிப் பாடித் தொண்டை கமறாமல் இருக்க)
பிரதோஷ வேளை நெருங்கும்போது உற்சாகத்துடன் பாடும் அடியவர்கள்.
திருவாசகத்தேனில் தோய்ந்துருகும் மாணிக்கவாசகப் பெருமான்.

நால்வரும் திருவாசத்தேனில் தோய்ந்து கனிந்திருக்கிறார்கள்.
முற்றோதலும்  பூஜையும் அடியவர்களுக்கான சிறப்பும் செய்யப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.
 திருவாசகம் :- 

தொல்லை யிரும் பிறவிச் சூழுந்தளை நீக்கி 
அல்லலறுத்
 தானந்தம் ஆக்கியதே - எல்லை 
மருவா
 நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் 
திருவாசக
 மென்னந் தேன்.

நமச்சிவாய
 வாழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும்
 என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி
 ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க 
ஆகமம்
 ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன்
 அநேகன் இறைவன் அடிவாழ்க …..5
  
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க 
பிறப்பறுக்கும்
 பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க 
புறத்தார்க்குச்
 சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க 
கரங்குவிவார்
 உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 
சிரம்குவிவார்
 ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க …..10 

ஈசன்
 அடிபோற்றி எந்தை அடிபோற்றி 
தேசன்
 அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே
 நின்ற நிமலன் அடி போற்றி 
மாயப்
 பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
சீரார்
 பெருந்துறை நம் தேவன் அடி போற்றி …..15 

ஆராத
 இன்பம் அருளும் மலை போற்றி 
சிவன்
 அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் 
அவன்
 அருளாலே அவன் தாள் வணங்கிச் 
சிந்தை
 மகிழச் சிவ புராணம் தன்னை 
முந்தை
 வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். …..20 

கண்
 நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி 
எண்ணுதற்கு
 எட்டா எழில்ஆர் கழல் இறைஞ்சி 
விண்
 நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய் 
எண்
 இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் 
பொல்லா
 வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் …..25 

புல்லாகிப்
 பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல்
 மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய்
 மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல்
 அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லா
 நின்ற இத் தாவர சங்கமத்துள் …..30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் 
மெய்யே
 உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் 
உய்ய
 என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற 
மெய்யா
 விமலா விடைப்பாகா வேதங்கள் 
ஐயா
 எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே …..35   

வெய்யாய்
 தணியாய் இயமானனாம் விமலா 
பொய்
 ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி 
மெய்
 ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 
எஞ்ஞானம்
 இல்லாதேன் இன்பப் பெருமானே 
அஞ்ஞானம்
 தன்னை அகல்விக்கும் நல் அறிவே …..40 

ஆக்கம்
 அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும் 
ஆக்குவாய்
 காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் 
போக்குவாய்
 என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் 
நாற்றத்தின்
 நேரியாய் சேயாய் நணியானே 
மாற்றம்
 மனம் கழிய நின்ற மறையோனே …..45 

கறந்த
 பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 
சிறந்தடியார்
 சிந்தனையுள் தேன்ஊறி நின்று 
பிறந்த
 பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் 
நிறங்கள்
 ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த 
மறைந்திருந்தாய்
 எம்பெருமான் வல்வினையேன் தன்னை …..50  

மறைந்திட
 மூடிய மாய இருளை 
அறம்பாவம்
 என்னும் அரும் கயிற்றால் கட்டி 
புறம்தோல்
 போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி 
மலம்
 சோரும் ஒன்பது வாயில் குடிலை 
மலங்கப்
 புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய …..55 

விலங்கு
 மனத்தால் விமலா உனக்கு 
கலந்த
 அன்பாகிக் கசிந்து உள் உருகும் 
நலம்
 தான் இலாத சிறியேற்கு நல்கி 
நிலம்
 தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி 
நாயிற்
 கடையாய்க் கிடந்த அடியேற்குத் …..60 

தாயிற்
 சிறந்த தயா ஆன தத்துவனே 
மாசற்ற
 சோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
தேசனே
 தேன்ஆர் அமுதே சிவபுரானே 
பாசமாம்
 பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே 
நேச
 அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் …..65

பேராது
 நின்ற பெருங்கருணைப் போராறே 
ஆரா
 அமுதே அளவிலாப் பெம்மானே 
ஓராதார்
 உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 
நீராய்
 உருக்கி என் ஆருயிராய் நின்றானே 
இன்பமும்
 துன்பமும் இல்லானே உள்ளானே …..70   

அன்பருக்கு
 அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் 
சோதியனே
 துன்னிருளே தோன்றாப் பெருமையனே 
ஆதியனே
 அந்தம் நடுவாகி அல்லானே 
ஈர்த்து
 என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 
கூர்த்த
 மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் …..75 

நோக்கரிய
 நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே 
போக்கும்
 வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே 
காக்கும்
 என் காவலனே காண்பரிய பேர் ஒளியே 
ஆற்றின்ப
 வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற 
தோற்றச்
 சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் …..80 

மாற்றமாம்
 வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் 
தேற்றனே
 தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் 
ஊற்றான
 உண்ணார் அமுதே உடையானே 
வேற்று
 விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப 
ஆற்றேன்
 எம் ஐயா அரனே  என்று என்று …..85

போற்றிப்
 புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் 
மீட்டு
 இங்கு வந்து வினைப்பிறவி சாராமே 
கள்ளப்
 புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே 
நள்
 இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே 
தில்லை
 உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே …..90  

அல்லல்
 பிறவி அறுப்பானே  என்று 
சொல்லற்கு
 அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 
சொல்லிய
 பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர்
 சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 
பல்லோரும்
 ஏத்தப் பணிந்து. …..95

அருளியவர்: மாணிக்கவாசகர் சுவாமிகள் திருப்பெருந்துறையில்அருளியது
(எட்டாம் திருமுறை)

-- நன்றி http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=238:2013-01-11-13-11-06&catid=12:siva-&Itemid=9  

தினம் நான் மாலை ப்ரதோஷ வேளையில் சொல்வதுதான் என்றாலும் ( டைப் செய்ய சிரமப்பட்டு)  இதை இந்த வலையிலிருந்து எடுத்துப் போட்டுள்ளேன். 

மாலை பூஜை முடிந்தவுடன் இந்த வெள்ளைக்காரத் தம்பதியினர் எங்கள் இல்லத்துக்கு வந்தனர். வீடு பற்றியும் திருவாசகம் முற்றோதல் பற்றியும் கேட்டுத் தெரிந்தனர்.

எங்கள் வீதியின் பக்கம் வந்ததாகவும் இந்த வீடு ( பெரிய வாயிற்கதவுகள் திறந்திருந்தபடியால் ) ஈர்த்ததாகவும் அதனால் காண வந்ததாகவும் சொன்னார்கள். 

டிஸ்கி :-

இதையும் பாருங்க.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3 கருத்துகள்:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. முற்றோதல் என்றால் முற்றிலும் ஓதல் என்று பொருளா . பக்தியுடன் எழுதுகிறீர்கள் பாராட்டு

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...