எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வள்ளியப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வள்ளியப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 அக்டோபர், 2017

நால்வரும் நடுத்தம்பியும் வெள்ளைக்காரத் தம்பதியினரும்.

காரைக்குடியில் இறைப்பணி ஆற்றிவரும் திருநாவுக்கரசர் நற்பணி மன்றத்தினர் பல வருடங்களாக திருவாசக முற்றோதல் செய்து வருகிறார்கள். இல்லம் செழிக்கவும், நிம்மதி நிலைபெறவும், நன்மை ஓங்கவும் இம்முற்றோதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

திருமணம், சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் , புதுமனை புகுவோர் ஆகிய சுபநிகழ்வுகளிலும் இம்முற்றோதல் செய்கிறார்கள். மேலும் கோயில்களிலும் திருவாசகம் பாடப்படுகின்றது.

இதில் பன்னிரு திருமுறைகளுடன் எட்டாம் திருமுறையில் உள்ள  ”திருவாசகமும்” முழுமையாக ஓதப்படுகிறது. சந்த நயத்தோடு கூடிய இப்பாடல்களை செவிமடுத்தாலே யாக்கை நிலையாமை பற்றிய தெளிவும் பேரின்பப் பரம்பொருளைப் பற்றும் அவாவும் தோன்றும். 
நால்வரின் புகைப்படத்தைத் தாங்கி நிற்பவர் என்னுடைய நடுச்சகோதரர் வள்ளியப்பன் என்ற பாபு என்ற சேவுகன்செட்டி. இவர் தற்போது இல்லை. 2013 ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சிவபதவி அடைந்துவிட்டார். ஆகையால் இப்படம் எனக்கு முக்கியமான ஒன்றாகிறது.