எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜனவரி, 2018

சோர்ந்த மனதைச் சுறுசுறுப்பாக்கும் சுசீலாம்மாவின் கடிதங்கள்.

எவ்வளவு அழகான எழுத்தோ அவ்வளவு கம்பீரமான பேச்சும் மிடுக்கும் கொண்டவர் சுசீலாம்மா. என்றும் நாங்கள் மயங்கும் எங்கள் துருவ நட்சத்திரம். ஆண்டாளின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி அனுமானங்களுக்கு இலக்கியத்தாலேயே நுட்பமான பதிலடி கொடுத்திருக்கிறார். அது தினமணி.காமில் வெளியாகி உள்ளது.இலக்கியச் சுவை மாந்த விரும்புவோர் ஆண்டாளின் பாசுரங்களில் அமிழ விரும்புவோர் இந்த இணைப்பை பார்க்க.

 தீதும் நன்றும்.

என்றென்றும் அவர்களின் மகளாகப் பெருமையுறும் கணம் இந்தக் கடிதங்களையும் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.



அருப்புக்கோட்டையிலிருந்து க சி அகமுடை நம்பியின் கடிதங்கள்.

புதிய பார்வை என்றொரு இதழை நடத்தி வந்தார் எங்கள் கல்லூரியில் படித்த ரத்னம் என்ற அக்காவின் உறவினர். அவர் பத்ரிக்கையிலும் நான் அவ்வப்போது எழுதி வந்தேன். !. வேண்டாம் தட்சணைகள், தூது, சாயம் போன வானவில்கள், ஒரு ஊனம் தேவை ஆகிய கட்டுரை, கவிதை, சிறுகதைகள் அதில் வெளியாகின.

அதன் ஆசிரியர் பெயர் அகமுடை நம்பி என்ற அறிவுடை நம்பி, அறிவன் என்ற பெயரிலும் எழுதி வந்தார். அருப்புக்கோட்டையில் விவசாயப் பொறியாளராகப் பணிபுரிந்துவந்த அவர் புதியபார்வையில் சிறப்பாசிரியராகவும் பணியாற்றி வந்தார்.  பல்வேறு இக்கட்டுக்களுக்கும் இடையில் கைக்காசைப் போட்டு அவ்விதழை நடத்தி வந்தார்.  அருமைமிக்க  அவரின் கடிதங்களைப் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

வியாழன், 2 மே, 2013

சுசீலாம்மாவின் கடிதம்

சுசீலாம்மாவின் கடிதம்.

இப்போதெல்லாம் கடிதம் எழுதுவது அருகி விட்டது. ஷார்ட் மெசேஜஸ்தான். குறுந்தகவல்கள். நீண்ட வாக்கியங்கள் பேசுவது கூடக் குறைந்து விட்டது. கம்யூனிகேஷனுக்குத் தேவையான வார்த்தைகள் மட்டுமே புழக்கத்தில் வந்துவிடும் என்று தோன்றுகிறது.

மொத்தமே 10 வார்த்தைகள்  போதும்.  ஆமாவா, மொக்கை, அவ்வ்வ்வ், கலக்கல் மாமு, வேணும், வேணாம், வரேன், வல்லை, பிடிக்குது . பிடிக்கலை.. இது மாதிரி மணிரத்னம் பட ஸ்டைல்ல பேச்சு குறைஞ்சுகிட்டே வருது எல்லார்கிட்டயும்.
Related Posts Plugin for WordPress, Blogger...