புதிய பார்வை என்றொரு இதழை நடத்தி வந்தார் எங்கள் கல்லூரியில் படித்த ரத்னம் என்ற அக்காவின் உறவினர். அவர் பத்ரிக்கையிலும் நான் அவ்வப்போது எழுதி வந்தேன். !. வேண்டாம் தட்சணைகள், தூது, சாயம் போன வானவில்கள், ஒரு ஊனம் தேவை ஆகிய கட்டுரை, கவிதை, சிறுகதைகள் அதில் வெளியாகின.
அதன் ஆசிரியர் பெயர் அகமுடை நம்பி என்ற அறிவுடை நம்பி, அறிவன் என்ற பெயரிலும் எழுதி வந்தார். அருப்புக்கோட்டையில் விவசாயப் பொறியாளராகப் பணிபுரிந்துவந்த அவர் புதியபார்வையில் சிறப்பாசிரியராகவும் பணியாற்றி வந்தார். பல்வேறு இக்கட்டுக்களுக்கும் இடையில் கைக்காசைப் போட்டு அவ்விதழை நடத்தி வந்தார். அருமைமிக்க அவரின் கடிதங்களைப் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
அதன் ஆசிரியர் பெயர் அகமுடை நம்பி என்ற அறிவுடை நம்பி, அறிவன் என்ற பெயரிலும் எழுதி வந்தார். அருப்புக்கோட்டையில் விவசாயப் பொறியாளராகப் பணிபுரிந்துவந்த அவர் புதியபார்வையில் சிறப்பாசிரியராகவும் பணியாற்றி வந்தார். பல்வேறு இக்கட்டுக்களுக்கும் இடையில் கைக்காசைப் போட்டு அவ்விதழை நடத்தி வந்தார். அருமைமிக்க அவரின் கடிதங்களைப் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
