முள்முடி
”டண்டணக்கா டணக்கு னக்க.. டண்டணக்கா டணக்கு னக்க” பள்ளிக்கூடப் பக்கவாட்டுக் காம்பவுண்டை ஒட்டித்தான் இந்தச் சத்தம். செல்வி டீச்சரின் காதுகளில் மட்டும் ஊரில் இருக்கும் எல்லா ஒலியும் எப்படியோ கேட்டு விடும். என்ன ஒரு திடுக்கிட வைக்கும் சத்தம்.
பள்ளியை ஒட்டி இருந்தது அந்த நீத்தார் விடுதி. அதன் முன்புறம் மாபெரும் ரோடு இருந்தது. அதன் வழியாகத்தான் தினம் நீத்தார் ஊர்வலம் முன்பு இடுகாட்டுக்குச் செல்லும். இப்போது ஒரு வாரமாகப் பள்ளியை ஒட்டி இருந்த அந்தப் பத்தடி சந்தில் சென்று கொண்டிருந்தது.
கோபம் மேலிட பள்ளியின் மெயின் கேட்டை விட்டு வெளியே வந்த செல்வி டீச்சர் பிண ஊர்வலம் திரும்பும் வரை காத்திருந்து அந்த நீத்தார் விடுதிக்குச் சந்தின் வழியாகவே சென்று சேர்ந்தார். அங்கே பெண்களின் கூட்டம் குளியலறையில் முண்டியடித்துக் கொண்டு இருந்தது.
நெல்லும் குந்தாணியும் கவிழ்த்து விடப்பட்டு இருக்கப் பாயைச் சுருட்டி எடுத்துச் சென்றாள் ஒரு பெண். முன்புறம் அந்த நீத்தார் விடுதியினை மேற்பாத்து வரும் நிர்வாகியிடம் சென்றார் செல்வி டீச்சர்.




