எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும்.

821. ஒரு சந்தி பிடித்தல் - தினம் தலைகுளித்து காலையில் பூஜை செய்து ஒருவேளை மட்டும் உணவருந்துதல்.

822. சோறு உண்ணு/உண்ணுதல்/உங்கையில்( உண்கையில் ) :- சாதம் சாப்பிடுவது/சாதம் சாப்பிடும்போது 

823. காங்கை அடித்தல் :- உடம்பு சுடுதல். காய்ச்சல் இல்லை ஆனால் உடல் கதகதப்பாக இருத்தல்

824. நோர/நுவரநாட்டியம் :- வியாக்யானம், தகராறு, குசும்பு, கோளாறு, புகார், வம்பு செய்தல்,

825. பொக்குன்னு :- உடனே., திடீரென்று, அவசரமாக,

826. பொசகெட்ட :- கிடைக்காத ஒன்றுக்கு ஆசைப்பட்டு ஏங்குதல். ஒரு பொருளின் மேல் அதீத ஆசை .வைத்தல் ( சோத்துக்குப் பொசகெட்டவன் ).

827. சொட்டவாளங்குட்டி:- மிக அழகான குழந்தைகளை இப்படிகூப்பிட்டுக் கொஞ்சுவார்கள்.

828. நச்சுப்புடுவா/ன் - தான் நினைத்ததைச்  சாதிக்க   அனைவரையும் படுத்தி எடுத்தல்.

829. இழுப்புளுக்கி/ இலுப்புளுகி  - ஒரு விஷயத்தை இங்கிட்டும் அங்கிட்டும் சொல்லிக் கொடுத்து சண்டையைப் பெரிசாக்கி விடுபவர்களுக்குப் பெயர்.

830. சீர்தனம் - பெண்ணுக்குத் திருமணத்தின்போது தாய்,தந்தையால் அளிக்கப்படும் பணம். இதை டெப்பாசிட் செய்து கொடுப்பார்கள். இது பெண்ணுக்கு நல்லது கெட்டது நடக்கும்போது மூலதனமாகப் பயன்படும். இதை வட்டிக்குக்  கொடுத்து அந்தப் பணத்தில் தங்கள் வாழ்வாதாரங்களை பெற்றுக் கொள்வார்கள். 

831. கொள்வினை கொடுப்பினை - இருவேறு குடும்பத்தார் ஒருவருக்கொருவர் சம்பந்தம் செய்து கொள்ள அதிர்ஷ்டம் அமைந்தால் கொள்வினை கொடுப்பினை இருக்கு என்று சொல்வார்கள். முன்ன பின்ன செய்த அதிர்ஷ்டம் என்றும் சொல்வதுண்டு. 

832. பெண் எடுக்கிக் காட்டுதல்- திருமணத்தின்போது மாப்பிள்ளை அழைத்தவுடன் பெண்ணை எடுக்கிக் காட்டுதல் அக்காலத்தய நடைமுறை. ( ஏனெனில் பெண்ணுக்கு ஏழு எட்டு வயதுதான் இருக்கும். :)

833. குணம் வாழும் பிள்ளை/குலம் வாழும் பிள்ளை - குடத்தில் இருக்கும் நீரில் இந்த குலம் வாழும் பிள்ளையைப் போட்டு எடுப்பார்கள். ( இது வெள்ளியால் செய்யப்பட்ட சிறு குழந்தை உருவம் ) .

834. அம்புட்டு வெள்ளம் கொண்டுக்கினு வந்தாள் - அதிகமாக சீதனம் கொண்டு வந்த பெண்களைக் குறிப்பது.

835. தாக்க(ல்) - சேதி, விபரம், செய்தி, விஷயம், ஒருவர் வீட்டு விஷயம். 

836. சவுத்துப் போச்சே/சவுத்துப் போதல் - வீரியம் இழந்து போதல். சுவை குன்றுதல், அளவுக்கு அதிகமாக இருத்தல்

837. மேலைக்கு இருக்கேனோ இல்லையோ - வயதானவர்கள் கூறும் வார்த்தை இது. மேலைக்கு என்றால் அடுத்த வருடங்களுக்கு அல்லது மாதங்களுக்கு அல்லது அனுவல்களுக்கு இருக்கனோ இல்லியோ இன்னிக்கே பேத்தியைக் கல்யாணம் செய்து பார்த்துவிடணும் என்று பெரியவர்கள் கூறுவது.

838. ஒண்ணுமத்தவுக - ஒன்றுமில்லாதவர்கள். வசதி குறைவானவர்கள், கொடுக்க மனம் இல்லாதவர்கள். 

839. வாவரசி - வாழ்வரசி என்பதைக் குறிப்பது.  மஞ்சள் குங்குமத்தோடு கணவன் மறைவுக்கு முன்பே இறக்கும் பெண்ணை இப்படிக்கு குறிப்பிடுவார்கள்.

840. பெருமாளும் தேவியும்போல/ஈசனும் தேவியும் போல. -  கணவனும் மனைவியும் சிவச்சின்னங்கள் தரித்து விருந்து விசேஷங்களுக்கோ,கோயில் கண்ணிக்கோ  போகும்போது இப்படிக் குறிப்பிடுவார்கள்.

"ஆம்பிள்ளையானும் பெண்டாட்டியும் பெருமாளும் தேவியும்போல / பார்வதியும் பரமேஸ்வரனும் போல எழுந்தருளிட்டாக " என்பார்கள்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 

85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

4 கருத்துகள்:

  1. ஆவணப்படுத்தப்படவேண்டியவற்றை நீங்கள் தொகுத்து ஆவணப்படுத்தும் விதம் அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. விஜேய், ரொறன்றோ, கனடா13 செப்டம்பர், 2017 அன்று PM 9:03

    சோறு சோறுதான் ஆதிகாலம் தொட்டு, தமிழ் பேசும் எந்த நாட்டிற்கு போனாலும்
    சோறென்றே சொல்வாா்கள். சாதம் என்று கேட்டால் அங்கே புாியாது. சாதம் என்பது
    தமிழ்ச்சொல்லிலை................ சாதம் சென்னையில் பிராமணா் பேச்சுவழக்கில் உள்ள சொல். தயவு செய்து குளப்பிக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  3. nandri Jambu sir

    nandri Kumar sago

    nandri Vijay. ok.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...