எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 ஜூலை, 2019

டாஸோஸும் டார்டெல்லானியும்.

2281. சொல்லிக் கொள்ளும்படியாக என்ன செய்தாய் என்ற கேள்வி துரத்தும்போது தூக்கம் போய்விடுகிறது.

2282. வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பாதி தூரம் மலை ஏற வேண்டும்.பின் இறங்க வேண்டும். இறக்கத்தில்தான் கோவில் அமைந்திருக்கிறது.

பயணத்தில் பதட்டப்பட வைக்கும் சரிவுகள் அதிகம். அதிலும் சிலர் குதிரைகளில் தேசிங்கு ராஜன்/ராணிகள் போல் பட்டிவாரில் கால்மிதித்து உய்யெனப் பறப்பார்கள்.

சிலர் டோலியில் போய்ச் சேர்ந்தால் போதும் என அரைகுறையாகப் படுத்திருப்பார்கள்.

ஜெய் மாதா தீ என ஒரு கோலைப் பிடித்து ஔவையார் பாணியில் ஏறி இறங்கிப் போய் வந்த நோவு ஒன்றுதான் நம் கடவுட் தேடலில் கிடைத்த அடையாளம்.

ஏறினோமா இறங்கினோமா. எதைப் பெற்றோம். வாழ்க்கையும் சிலசமயம் அப்படித்தான். எழுத்தும்..

2283. Tazos

2284. ஒரே இட நெருக்கடி. :D

ஞாயிறு, 21 ஜூலை, 2019

விகடக் கூத்தாடிய விச்வக்சேனர். தினமலர் சிறுவர்மலர் - 24.

விகடக் கூத்தாடிய விச்வக்சேனர்
நம்மிடம் இருக்கும் ஒரு பொருள் பறிபோய்விட்டால் அதைப் போராடிப் பெற முயல்வோம். மன்னர்கள் தம் பொருளை இழந்தால் யுத்தம் நிகழ்த்தி அப்பொருளைக் கைப்பற்றுவார்கள். ஆனால் விச்வக்சேனர் என்பவர் ஒரு பொருளைக் கைப்பற்ற விகடக் கூத்தாடினார். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
விஷ்வக்சேனர் என்பவர் ஆதிசேஷன் , கருடன் போல் நித்யத்துவம் வாய்ந்தவர். துலா மாசம் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் இவர். இவரின் மனைவி பெயர் சூத்ரவதி. இவர் எல்லாத் திசைகளிலும் விஷ்ணுவின் படைகளுக்கு சேனைத்தலைவராக விளங்குபவர். அதனால் இவரை சேனை முதலி, சேனாதிபதி ஆழ்வான் அப்பிடின்னு அழைக்கப்படுகின்றார்.
நம்மாழ்வாருக்கு உபதேசம் செய்த பெருமை உடையவர். பராசரபட்டரால் வணங்கப்பட்ட பெருமைக்குரியவர். சடகோபரே இவரோட அம்சமாகத்தான் அவதரித்தார். பெருமாள் என்ன நினைக்கிறாரோ அதை உணர்ந்து செயல்படுத்தக்கூடிய வலிமை வாய்ந்தவர் விஷ்வக்சேனர்.

வெள்ளி, 12 ஜூலை, 2019

சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன். தினமலர் சிறுவர்மலர் - 23

சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன்
இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பாசத்தால் விஞ்சிய சகோதரர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதிகம் பேசப்படாமல் இராமாயணத்தில் ஓரிரு இடங்களில் ஆங்காங்கே வந்தாலும் சத்ருக்னன் இராமன் மேல் மட்டுமல்ல தன் சகோதரர்கள் மூவர் மேலும் கொண்ட பாசம் நம் கண்களைக் கலங்க வைத்துவிடும்.
அயோத்தியை ஆண்ட தசரத மன்னருக்குப் புத்திர பாக்கியமில்லை என்பதால் புத்திர காமேஷ்டியாகம் நடத்துகிறார். ஹோமப் ப்ரசாதமாக பாயாசம் தரப்படுகிறது. அதை தசரதரின் மனைவியரான கௌசல்யை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் அருந்துகிறார்கள். கடைசியாக அருந்தும்போது பாயாசப் பாத்திரத்தில் சுமித்திரைக்கு மட்டும் கடைசியாக இருமடங்கு பிரசாதம் கிடைக்கிறது. அதனால் கௌசல்யைக்கு ராமரும், கைகேயிக்கு பரதனும் பிறக்க சுமித்திரைக்கு லெக்ஷ்மணன், சத்ருக்னன் என்ற இரு மகன்களும் பிறக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் வசிஷ்டரின் வழிகாட்டுதலின் படி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறார்கள்.  இப்படி இருக்கையில் ஒரு நாள் விசுவாமித்திர முனிவர் தனது தவத்துக்கு இடையூறு செய்யும் அரக்கர்களை அழிக்க ராமனையும் லெக்ஷ்மணனையும் அனுப்பும்படி தசரதரிடம் கேட்கிறார். குழந்தைகளைப் பிரிய தசரதர் தயங்கினாலும் அனுப்பி வைக்கிறார்.

வியாழன், 11 ஜூலை, 2019

காரைக்குடிச் சொல்வழக்கு. கா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்

1281. சதப்பெறட்டு, - சதை பிரண்டு போதல். ஏதாவது கடினமான காரியம் செய்யும்போது சதை பிசகிப் போதல். பொதுவாக கை அல்லது காலில். படிகள் அல்லது சீரற்ற தரையில் நடக்கும்போது கால் பிசகி கெண்டைக்காலில் அல்லது பாதத்தில்தான் அதிகம் சதைப்பிரட்டு ஏற்படும்.

1282. தவிடு வறுத்து ஒத்தனம், - இந்த சதைப்பிரட்டுக்குத் தவிட்டை வறுத்து ஒத்தடம் கொடுப்பார்கள். ஒரு துணியில் தவிட்டை முடிந்து வெறும் வாணலியை அடுப்பில் சூடேற்றி அதில் இந்த தவிட்டு மூட்டையைச் சூடுபடுத்தி வலிக்கும் இடத்தில் ( சுளுக்கு அல்லது சதைப்பிரட்டு ) ஒத்தடம் கொடுப்பார்கள்.

1283. புளிப்பத்து, - இந்த ஒத்தடத்தில் ( தவிட்டு ஒத்தனம் ) வலி தீராவிட்டால் புளியைக் கெட்டியாக கரைத்துக் கொதிக்க வைத்து வலிக்கும் இடத்தில் அந்தப் புளிச்சாறால் தடவி சூடாகப் பத்துப் போடுவார்கள்.

1284. முட்டப்பத்து, - நரம்பு போன்றவை பிசகி இருந்தாலோ அல்லது எலும்பில் விரிசல், மெல்லிய விரிசல் இருந்தாலோ ரத்தக்கட்டு ஏற்பட்டாலோ அதற்கு முட்டைப் பத்துப் போடுவார்கள். முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துப் பத்தாகப் பூசி விடுவார்கள். அது இறுக இறுக வலி குறையும். எலும்பை இணைக்கும். இந்தப் பத்துக்களை எல்லாம் முட/நுட வைத்திய சாலையில் போடுவார்கள்.  


தினமலர் திண்ணை பற்றி வாசகர் கடிதங்களும், மஞ்சளும் குங்குமமும் வெளியீடும்.

1. வாரமலர் திண்ணை பகுதியில் 20. 1. 2019 இதழில் எனது விடுதலை வேந்தர்கள் நூலில் உள்ள வேலு நாச்சியார் பற்றி ”திருமாங்கல்யம் அளித்து அஞ்சலி” என்ற தலைப்பில் குறிப்பு வெளியானது.

அது பற்றி 3. 2. 2019 வாரமலர் அர்ச்சனை (வாசகர் கடிதம்) பகுதியில் கிருஷ்ணகிரி , ராஜசிம்மன் அவர்களின் பாராட்டுக் கடிதம். மகிழ்வுடன் பகிர்கிறேன். தினமலருக்கு நன்றி :) டபிள் தமாக்கா 😍
Related Posts Plugin for WordPress, Blogger...