எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
1281 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1281 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 ஜூலை, 2019

காரைக்குடிச் சொல்வழக்கு. கா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்

1281. சதப்பெறட்டு, - சதை பிரண்டு போதல். ஏதாவது கடினமான காரியம் செய்யும்போது சதை பிசகிப் போதல். பொதுவாக கை அல்லது காலில். படிகள் அல்லது சீரற்ற தரையில் நடக்கும்போது கால் பிசகி கெண்டைக்காலில் அல்லது பாதத்தில்தான் அதிகம் சதைப்பிரட்டு ஏற்படும்.

1282. தவிடு வறுத்து ஒத்தனம், - இந்த சதைப்பிரட்டுக்குத் தவிட்டை வறுத்து ஒத்தடம் கொடுப்பார்கள். ஒரு துணியில் தவிட்டை முடிந்து வெறும் வாணலியை அடுப்பில் சூடேற்றி அதில் இந்த தவிட்டு மூட்டையைச் சூடுபடுத்தி வலிக்கும் இடத்தில் ( சுளுக்கு அல்லது சதைப்பிரட்டு ) ஒத்தடம் கொடுப்பார்கள்.

1283. புளிப்பத்து, - இந்த ஒத்தடத்தில் ( தவிட்டு ஒத்தனம் ) வலி தீராவிட்டால் புளியைக் கெட்டியாக கரைத்துக் கொதிக்க வைத்து வலிக்கும் இடத்தில் அந்தப் புளிச்சாறால் தடவி சூடாகப் பத்துப் போடுவார்கள்.

1284. முட்டப்பத்து, - நரம்பு போன்றவை பிசகி இருந்தாலோ அல்லது எலும்பில் விரிசல், மெல்லிய விரிசல் இருந்தாலோ ரத்தக்கட்டு ஏற்பட்டாலோ அதற்கு முட்டைப் பத்துப் போடுவார்கள். முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துப் பத்தாகப் பூசி விடுவார்கள். அது இறுக இறுக வலி குறையும். எலும்பை இணைக்கும். இந்தப் பத்துக்களை எல்லாம் முட/நுட வைத்திய சாலையில் போடுவார்கள்.  


Related Posts Plugin for WordPress, Blogger...