எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 செப்டம்பர், 2019

ரியாத் தமிழ்ச்சங்கப் போட்டியில் சூலாட்டுக்குட்டிக்கு ஊக்கப்பரிசு.

மகிழ்வுடன் பகிர்கிறேன். மூன்றாவது முறையாக ரியாத் தமிழ்ச் சங்கத்தால் தொடர்ந்து என் கவிதைகளும் சிறுகதையும் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வருடம் ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது கதையான “சூலாட்டுக்குட்டி “ ஊக்கப் பரிசு பெற்றிருக்கிறது.

திங்கள், 16 செப்டம்பர், 2019

வாசகசாலை கவிதை இரவு - 200.



முகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம் . சிறுகதை, நாவல் விமர்சனம் ஆகியவற்றை முன்னெடுத்து அனைவரின் வாசிப்புத் திறனையும் மேம்படுத்துகிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்டவர்களின் கவிதைகளைத் தினந்தோறும் வாசித்துப் பல்வேறு கவிஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதில் என் கவிதைகளும் 28 ஆம் நாளில்  இடம்பெற்றிருப்பது மகிழ்வு. 

தங்கள் அன்றாடக் கடமைகளோடு ஒவ்வொரு கவிஞரின் கவிதைகளையும் தேர்ந்தெடுத்து அவற்றை முகநூலில் சரியாக இரவு பத்துமணிக்கு ரசனையான கருத்துக்களுடன்/விளக்கங்களுடன் இனிமையான குரலில் வாசகசாலைக் குழுவினர் பதிவு செய்து வருகிறார்கள். டெக்னிகல் டிஃபெக்ட் ஆன சில சமயங்கள் தவிர மற்ற நாட்களில் ஒளிபரப்பாகியே வருகிறது. 

சனி, 14 செப்டம்பர், 2019

ஸோலிங்கனில் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் கௌசியுடன் ஒரு சந்திப்பு.

பிரபல வலைப்பதிவர், எழுத்தாளர், மூன்று நூல்களின் ஆசிரியை, ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர், யேர்மனி தமிழ்க் கல்விச்சேவை இருபத்தியைந்தாம் ஆண்டு மலர் உறுப்பினர், வெற்றிமணி பத்ரிக்கையின் கட்டுரையாளர், அன்புத்தோழி கௌரி சிவபாலன் ( கௌசி ) அவர்களை சந்திக்கும் பாக்யம் கிட்டியது. :) இப்போது அமேஸானிலும் நூல்கள் வெளியிட்டு வருகிறார்.

முகநூலில் உள்டப்பியில் வந்திருக்கிறேன் என்று தெரிவித்த உடனே தனது ஸோலிங்கன் இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். என் சின்ன மகன் ஜெர்மனியில் இருக்கிறான். அவனுடன் அவர்கள் இல்லத்துக்குச் சென்றபோது ரயில்வே ஸ்டேஷனுக்கே அவரது கணவர் சிவபாலன் அவர்கள் கார் எடுத்துக்கொண்டு அழைத்துச் செல்ல வந்துவிட்டார்.

இதுதான் கௌசியின் நூலகம். இதன் எதிரில்தான் அவரது மடிக்கணனியும் இருக்கிறது.  அவரது மூன்று நூல்களை எனக்குப் பரிசாக அளித்தார்.  முக்கோண முக்குளிப்புகள், வெள்ளை உடைக்குள் கரையும் பருவம், என்னையே நானறியேன்.

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ஏலையாவில் தமிழீழ தேசியத் தலைவரின் பேட்டி !!!

1994 இல் இருந்து 2000 ஆண்டுவரை ஏலையா என்ற சிற்றிதழ் வெளியாகி இருக்கிறது. இதனை வெளியிட்டவர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள்.



புதன், 11 செப்டம்பர், 2019

யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை :-


யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை :-

ஜெர்மன் கல்விச் சேவையின் பதினைந்தாம் & இருபத்தியைந்தாம் ஆண்டு மலர்கள் வாசிக்கப் பெற்றேன். படிக்கப் படிக்கப் பேரானந்தம் பெருகியது. கிட்டத்தட்ட 31 ஆண்டுகளாக ஜெர்மனியில் தமிழ்க்கல்விச் சேவை சாதித்து வருகிறார்கள் யேர்மன் தமிழ்க் கல்விச் சேவை அமைப்பினர். 
Related Posts Plugin for WordPress, Blogger...