எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 18 செப்டம்பர், 2019
திங்கள், 16 செப்டம்பர், 2019
வாசகசாலை கவிதை இரவு - 200.
முகநூலில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பக்கம் வாசகசாலை. தினமும் கவிதை இரவில் கவிதை வாசிப்பு , மாதத்தில் ஒருநாள் நூல் விமர்சனம் . சிறுகதை, நாவல் விமர்சனம் ஆகியவற்றை முன்னெடுத்து அனைவரின் வாசிப்புத் திறனையும் மேம்படுத்துகிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்டவர்களின் கவிதைகளைத் தினந்தோறும் வாசித்துப் பல்வேறு கவிஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதில் என் கவிதைகளும் 28 ஆம் நாளில் இடம்பெற்றிருப்பது மகிழ்வு.
தங்கள் அன்றாடக் கடமைகளோடு ஒவ்வொரு கவிஞரின் கவிதைகளையும் தேர்ந்தெடுத்து அவற்றை முகநூலில் சரியாக இரவு பத்துமணிக்கு ரசனையான கருத்துக்களுடன்/விளக்கங்களுடன் இனிமையான குரலில் வாசகசாலைக் குழுவினர் பதிவு செய்து வருகிறார்கள். டெக்னிகல் டிஃபெக்ட் ஆன சில சமயங்கள் தவிர மற்ற நாட்களில் ஒளிபரப்பாகியே வருகிறது.
சனி, 14 செப்டம்பர், 2019
ஸோலிங்கனில் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் கௌசியுடன் ஒரு சந்திப்பு.
பிரபல வலைப்பதிவர், எழுத்தாளர், மூன்று நூல்களின் ஆசிரியை, ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர், யேர்மனி தமிழ்க் கல்விச்சேவை இருபத்தியைந்தாம் ஆண்டு மலர் உறுப்பினர், வெற்றிமணி பத்ரிக்கையின் கட்டுரையாளர், அன்புத்தோழி கௌரி சிவபாலன் ( கௌசி ) அவர்களை சந்திக்கும் பாக்யம் கிட்டியது. :) இப்போது அமேஸானிலும் நூல்கள் வெளியிட்டு வருகிறார்.
முகநூலில் உள்டப்பியில் வந்திருக்கிறேன் என்று தெரிவித்த உடனே தனது ஸோலிங்கன் இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். என் சின்ன மகன் ஜெர்மனியில் இருக்கிறான். அவனுடன் அவர்கள் இல்லத்துக்குச் சென்றபோது ரயில்வே ஸ்டேஷனுக்கே அவரது கணவர் சிவபாலன் அவர்கள் கார் எடுத்துக்கொண்டு அழைத்துச் செல்ல வந்துவிட்டார்.
இதுதான் கௌசியின் நூலகம். இதன் எதிரில்தான் அவரது மடிக்கணனியும் இருக்கிறது. அவரது மூன்று நூல்களை எனக்குப் பரிசாக அளித்தார். முக்கோண முக்குளிப்புகள், வெள்ளை உடைக்குள் கரையும் பருவம், என்னையே நானறியேன்.
முகநூலில் உள்டப்பியில் வந்திருக்கிறேன் என்று தெரிவித்த உடனே தனது ஸோலிங்கன் இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். என் சின்ன மகன் ஜெர்மனியில் இருக்கிறான். அவனுடன் அவர்கள் இல்லத்துக்குச் சென்றபோது ரயில்வே ஸ்டேஷனுக்கே அவரது கணவர் சிவபாலன் அவர்கள் கார் எடுத்துக்கொண்டு அழைத்துச் செல்ல வந்துவிட்டார்.
இதுதான் கௌசியின் நூலகம். இதன் எதிரில்தான் அவரது மடிக்கணனியும் இருக்கிறது. அவரது மூன்று நூல்களை எனக்குப் பரிசாக அளித்தார். முக்கோண முக்குளிப்புகள், வெள்ளை உடைக்குள் கரையும் பருவம், என்னையே நானறியேன்.
வெள்ளி, 13 செப்டம்பர், 2019
புதன், 11 செப்டம்பர், 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



