பிரபல வலைப்பதிவர், எழுத்தாளர், மூன்று நூல்களின் ஆசிரியை, ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர், யேர்மனி தமிழ்க் கல்விச்சேவை இருபத்தியைந்தாம் ஆண்டு மலர் உறுப்பினர், வெற்றிமணி பத்ரிக்கையின் கட்டுரையாளர், அன்புத்தோழி கௌரி சிவபாலன் ( கௌசி ) அவர்களை சந்திக்கும் பாக்யம் கிட்டியது. :) இப்போது அமேஸானிலும் நூல்கள் வெளியிட்டு வருகிறார்.
முகநூலில் உள்டப்பியில் வந்திருக்கிறேன் என்று தெரிவித்த உடனே தனது ஸோலிங்கன் இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். என் சின்ன மகன் ஜெர்மனியில் இருக்கிறான். அவனுடன் அவர்கள் இல்லத்துக்குச் சென்றபோது ரயில்வே ஸ்டேஷனுக்கே அவரது கணவர் சிவபாலன் அவர்கள் கார் எடுத்துக்கொண்டு அழைத்துச் செல்ல வந்துவிட்டார்.
இதுதான் கௌசியின் நூலகம். இதன் எதிரில்தான் அவரது மடிக்கணனியும் இருக்கிறது. அவரது மூன்று நூல்களை எனக்குப் பரிசாக அளித்தார். முக்கோண முக்குளிப்புகள், வெள்ளை உடைக்குள் கரையும் பருவம், என்னையே நானறியேன்.
முகநூலில் உள்டப்பியில் வந்திருக்கிறேன் என்று தெரிவித்த உடனே தனது ஸோலிங்கன் இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். என் சின்ன மகன் ஜெர்மனியில் இருக்கிறான். அவனுடன் அவர்கள் இல்லத்துக்குச் சென்றபோது ரயில்வே ஸ்டேஷனுக்கே அவரது கணவர் சிவபாலன் அவர்கள் கார் எடுத்துக்கொண்டு அழைத்துச் செல்ல வந்துவிட்டார்.
இதுதான் கௌசியின் நூலகம். இதன் எதிரில்தான் அவரது மடிக்கணனியும் இருக்கிறது. அவரது மூன்று நூல்களை எனக்குப் பரிசாக அளித்தார். முக்கோண முக்குளிப்புகள், வெள்ளை உடைக்குள் கரையும் பருவம், என்னையே நானறியேன்.
