எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ENVIRONMENTAL AWARENESS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ENVIRONMENTAL AWARENESS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

இந்திய நதிநீர் இணைப்பு.

எத்தனை நதிகள் எத்தனை நதிகள்
அத்தனை நதியும் பெண்ணின் பெயர்கள்.
தாய்மைப் பண்பில் பெருகிடும் அன்பில்
வாய்மை தவறா மனிதர்கள் போலே
பொங்கிப் பெருகிய புதுப்புனல் ஆறுகள்
மங்கிப் போனதே மண்ணாய் ஆனதே
தவஞ்செய்து பெற்ற தவத்திரு நதிகள்
அவஞ்செய்த காரணம் காணாமல் போனதே
இடிப்பார் இல்லாமல் உரைப்பார் கேளாமல்
இந்திய நதிநீர் இழிந்தே கழிந்ததே.

விவசாயம் காப்போம்.

வேரில் கொஞ்சம் வெப்பம் பிண்ணாக்கு
தூரில் கொஞ்சம் தோட்டச் சருகுகுகள்.
மாட்டுச் சாணம் மண்புழுக் கழிவுகள்.
மக்கிய தழைகள் மகசூல் பெருக்கும்.

வயலைக் கொல்லும் பூச்சிக் கொல்லிகள்
காயம் ஆக்கும் சாயத்தண்ணீர்

ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.

ஊருக்கு அணி செய்யும்
பயிருக்கு உயிர் செய்யும்
உயிருக்கு நீர் வார்க்கும்
ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.

பாரெல்லாம் பயன் பெறவே
தூரெடுத்துத் தூர் வார்த்து
கரைகொண்டு கரை சேர்த்து
ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.

செவ்வாய், 10 அக்டோபர், 2017

லலித் கலா அகாடமியில் விகடனின் ஓவியங்கள். - 3.

லலித் கலா அகாடமியின் வாயிற்புறம் நிறைய சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கேதான் ஓவியர் வீரசந்தானத்தை முதன் முறையாகப் பார்த்தேன். தாடி மீசையுடன் ஜிப்பா போட்டிருந்தவர் புகைத்துக் கொண்டிருந்தார். உள்ளே ஊர்ப்பட்ட ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பாதி விற்பனையும் ஆகி இருந்தன.  

அங்கே நான் பார்த்த மிச்ச ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு இங்கே.
உள்ளே சென்றதும் விகடன் ஆசிரியர் ரா கண்ணன், சந்திரா, கவின்மலர்  ஆகியோர் இருந்தார்கள்.  நாணயம் விகடனில் என் மாமா நாகப்பன் எழுதுவது பற்றி கண்ணன் குறிப்பிட்டுப் பேசினார். சந்திரா, கவினோடு கைகுலுக்க ஆசைப்பட்டேன் . அணுக்கமான சூழ்நிலை தென்படாததால்  நகர்ந்து சென்று ஓவியங்களை பார்வையிடத் துவங்கினேன். அதன்பின் ஓவியர் கோபுலுவை நடுநாயகமாக அமரவைத்து புகைப்படக்காரர்கள் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
விதம் விதமான மனித முகங்கள் சிற்பங்களில் .

லலித் கலா அகாடமியில் விகடனின் ஓவியங்கள். - 2

தானே துயர் தீர்க்க நீண்ட விகடனின் ஓவியக் கரங்கள் என்ற தலைப்பில் முன்னேயே ஒரு போஸ்ட் போட்டிருக்கிறேன். அதில் தப்பிப் பிழைத்த இன்னும் சில ஓவியங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு. நண்பர்கள் ஜீவாநந்தன் பி ஆர் ராஜன் ஆகியோரின் ஓவியங்களை அதிலேயே பகிர்ந்துள்ளேன்.
ராம் அடைக்கலசாமியின் ஓவியம் மரங்களையும் இயற்கையையும்  பாதுகாக்கச் சொல்கிறது.
பாஸ்கரனின் ஓவியம். மீன்கள் இலைகள் என்று கலவையான படிநிலை ஓவியம்

சனி, 30 ஜூலை, 2016

நொய்யல் நோயில்...

எனது நொய்யல் கவிதை 


நொய்(த)யல்
------------------
ஆற்றில் போட்டாலும்
அளந்து போடு..
சொல்லிக் கொடுக்கப்பட்ட
பழமொழி
சரியாகச் சேரவில்லை
சாயப்பட்டறைக்காரர்களுக்கு..
கடல் வரை
நீட்ட உத்தேசித்து
கையறு நிலையாய்
கிடத்தியதுதான் மிச்சம்..
வயலும் இல்லாமல்
வாழ்வும் இல்லாமல்
வெளிநாட்டின்
மானம் காக்கும் உடைகளில்
காயடித்துக் கிடக்கிறது
கிழிக்கப்பட்ட தோலுடன்
சாயம் பூசி நொய்யல்.

நன்றி:தேனம்மை லெக்ஷ்மணன்,கீற்று இணையத்தளம்

நன்றி காந்திய மக்கள் இயக்கம் திருப்பூர். 



சனி, 18 ஜூன், 2016

சாட்டர்டே போஸ்ட். 2014 ம் 2042 ம் பற்றி Be Positive விமல் தியாகராஜன்.


நல்ல சிந்தனையாளன், முன்னேறுகிற பையன் என்ற அறிமுகத்தோடு என் முகூல் ோழி ஒருவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் விமல் தியாகராஜன். உடனே அவர் வெப்சைட் சென்று பார்த்தேன் , பிரமித்தேன். கட் அவுட் கலாச்சாரத்திலும் சினிமா ரிலீஸிலும் தங்கள் இளமைப் பருவத்தை ற்கால இளையாயம் வீணாக்கிக் கொண்டிருக்கும்போது தனது  அபார உழைப்பு, பொதுநல சிந்தனையால் வியக்கவைக்கிறார் விமல் தியாகராஜன். ிட்டத்ட்டட்சம் ார்வைகள் கந்தைப்பூவுக்குச் சந்தக்காரர். பிரர் மியைச் சந்தித்ு அாவியர். !!! நம் வலைத்தளத்தில் வெளியிட மிகப் பொருத்தமான நபர் என்று உடன் நட்பில் இணைத்து நம்ம வலைத்தளத்துக்கான கேள்வியை முன்வைத்தேன். இன்று பதில் வந்துவிட்டது.  

விமல் தியாகராஜன் சென்னை L&T நிறுவனத்தில் (Asst. General Manager) துணைப் பொது மேலாளராக பணிப்புரிகிறார். தமிழ் பற்றும், சமுதாய நலனில் அக்கறை கொண்டுள்ளதாலும் Be Positive Tamil” www.bepositivetamil.com என்ற இணைய இதழை 2014 ஆம் ஆண்டு முதல் நடத்திவருகிறார். இந்த இதழின் மூலம் மீடியாவின் சமுதாய பங்கு 100% பாசிடிவாக இருக்க முடியும் என நிருபித்து வருகிறது இவரது B+ குழு. மக்களிடம் நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிப்பதன் மூலம், சிறிய மாற்றமாவது சமூகத்தில் நிகழும் என்பது இவரின் நோக்கமாக உள்ளது.

இந்தப் பத்திரிகை வாயிலாக தேசப்பற்று, சுயநலமின்மை, சுற்றுப்புறச்சூழல் நட்பு ஆகியவற்றை கற்றுத்தரும் ஊக்குவிக்கும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார். சமூகத்தில் நம்மை சுற்றியுள்ள ஆனால் அதிகம் வெளியில் தெரியாத சாதனையாளர்களை நேர்காணல்கள் எடுத்து இவரது இதழில் வெளியிடுவது மற்றுமொரு சிறப்பம்சமாக உள்ளது.

தமிழில் பாசிடிவான பகிர்வுகளை மட்டுமே தரும் ஒரே ஊடகம் B+ என்பதால், தொடக்கத்திலிருந்து இதுவரை இவரது இணையத்தை 75000 க்கும் அதிகமான பார்வையாளர்கள், 4 லட்சத்திற்கும் மேல் பார்வையிட்டு, தங்கள் ஆதரவைத் தந்துள்ளனர்.

இவரது முகநூல் பக்கம் www.facebook.com/bpositivenews
இவரது இணையம் www.bepositivetamil.com
சமீபத்திய பகிர்வு - http://bepositivetamil.com/?p=1496

/// சுற்றுசூழலில் அடுத்தகட்ட அபாயம் என்னவா இருக்கும் என்பது பற்றி எழுதிக் கொடுங்க விமல் . ///

////
2042

அன்று காலை வெகு சீக்கிரமே எழுந்து புறப்பட வேண்டியிருந்தது. என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அதில் நேரம் காலை 8:40 எனவும், நாள் 14/06/2042 எனவும் காட்டிக்கொண்டிருந்தது. 10மணிக்கு, மருத்துவரிடம் எனக்கு அப்பாயின்மெண்ட். அந்த க்ளீனிக்கிற்குப் பயணம் செய்ய 32வது மாடியிலிருந்த என் வீட்டிலிருந்து லிஃப்டில் கீழே இறங்கி, சாலையை அடைந்தேன். இந்த 2042 ஆம் ஆண்டு ஆரம்பித்த நாளிலிருந்தே, நமக்கு ஒரே அலைச்சல் தான், வெயில் வேறு கொல்லுகிறதுஎன்று புலம்பிக்கொண்டே பேருந்து நிறுத்ததிற்கு வந்தேன்.

வெள்ளி, 17 ஜூன், 2016

கண்ணுக்கு (பசு)மை அழகு. !

ஒரு நர்ஸரி நிறுவனத்தார் ஹோட்டலில் கண்காட்சி நடத்தினார்கள். அரிய வகைச் செடிகளும், மூலிகைகளும் கூட அதில் இடம் பெற்றிருந்தன. ஹோட்டலில் திருமண வைபவங்கள், சடங்கு நிகழ்ச்சி, நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள், அலுவலக மீட்டிங்குகள், அல்லது பொருட்காட்சி போல ஏதும் சேல் எல்லாம் பார்த்திருக்கிறேன்.

முதன்முறையாக ஒரு நர்ஸரிக் கண்காட்சியைப் பார்த்தேன். குன்றக்குடிக்கு அருகில் இருக்கும் வள்ளல் அழகப்பர் நர்ஸரி நிறுவனத்தார் காரைக்குடி சுபலெக்ஷ்மி பேலஸ் ஹோட்டலில் இந்தக் கண்காட்சியை நிகழ்த்தினார்கள். வீட்டுள்ளே வளரும் செடிகள், மூலிகைகள், ரோஜாக்கள், காக்டஸ்கள் , போன்ஸாய் செடிகள் , தென்னங்கன்றுகள் மற்றும் நாம் பெயர் மட்டுமே கேள்விப்பட்டு, பார்த்திராத செடிகள் அனைத்தையும் பார்த்தேன். எனவே ஒரு பசுமைப் பதிவு. ( நாம ஃப்ளாட்டுல வெந்தயக்கீரையும் மல்லியும் வளக்குறோம்ல. :) சுற்றுச்சூழல் விழிப்புணர்வுல நமக்கும் பங்கிருக்கு, அக்கறை இருக்குன்னு சொல்லிக்கத்தான் :)

பாக்கெட் விதைகளைத் தூவிட்டு வந்ததா தங்கச்சி ஏஞ்சல் சொல்லி இருந்தா. துளசி வைங்கன்னு வாட்ஸப்புல வந்துது. கார்ல போம்போது காடா இருக்க இடமெல்லாம்  விதைகளை வீசிட்டுப் போங்கன்னு கூட ஒரு மெசேஜ் பார்வேர்டு வந்தது. நம்ம பங்களிப்பா ஃப்ளாட் வீட்டுக்காரங்க வீட்டுக்கொரு தொட்டிச் செடி வைங்கன்னு ஒரு ரெக்வெஸ்ட் செய்யத்தான் இந்த போஸ்ட் :)

வெல்கம் மக்களே. ஒவ்வொரு செடிகிட்டயும் அழைச்சிட்டுப் போறேன் வாங்க :)

செவ்வாய், 26 மே, 2015

நமாமி கங்கே !!!. NAMAMI GANGE !!!

நைரோபியில் வசித்துவரும் என் அன்புத் தோழி காஞ்சனா மோகன் அவ்வப்போது முகநூலில் தமிழ் இலக்கியங்களில் இருந்து தான் வாசித்து மகிழ்ந்த பகுதிகளைப் பகிர்வார். இது மட்டுமல்ல தனக்குப் பிடித்த மேற்கோள்கள், சாதனைகள், பாடல்கள் ஆகியவற்றையும் பகிர்வார். மிக உன்னதமான ரசனைகளின் தொகுப்பு அவர்.

இன்று நமாமி கங்கே பற்றி அவருடைய மொழியில் மிக அருமையாகப் பகிர்ந்து இருந்தார். கங்கை நம்மோடும் நம் இதிகாசத்தோடும் வாழ்வியலோடும் ஒன்றிக் கலந்து விட்டவளல்லவா. இந்தியாவில் எத்தனை நதிகள் இருந்தாலும் கங்கைக் கரையில் இறப்பது புனிதமாகக் கருதப்படுகிறது. கங்கா மாதாவை மட்டுமல்ல எந்த நதிக்கரைக்குப் போனாலும் பூஜா கரோ என்று பண்டிட்ஜிகள் கேட்பார்கள்.

கங்கே ச யமுனே என்றுதான் ஸ்நானம் செய்யும்போது சொல்லும் ஸ்லோகமும் ஆரம்பிக்கிறது. பூஜையின்போதும் இப்படித்தான். நதிக்கரை நாகரீகங்களில் தழைத்து வாழ்ந்த நாம் இப்போது வாட்டர் கேன் தண்ணீரில் உயிர்வாழ்கிறோம்.

கொட்டிய கழிவை எல்லாம் சுமந்து நம்மைப் புனிதப்படுத்திய கங்கையை நாம் இனியாவது மாசுபடாமல் காப்போம். திருச்சூர் சகோதரர்கள் பாடிய இந்த அறிமுகப் பாடல் மனதுக்கு மிக இன்பமாக இருந்தது எனவே பகிர்கிறேன். நன்றி காஞ்சனா ( எனக்கு இதைச் சொல்ல நைரோபியிலிருந்து இந்தியாவையும் கங்கையையும் நேசிக்கும் & சுவாசிக்கும் தோழி தேவைப்பட்டிருக்கிறார் :) :) :)

இனி காஞ்சனா மோகனின் எழுத்தில் நமாமி கங்கே !

/////நமாமி கங்கே... நமாமி கங்கே!

திருச்சூர் பிரதர்ஸ்!

நைரோபியில் ஐயப்பா கோவில் ஆண்டு நிறைவு உற்சவத்தை முன்னிட்டு,
” ஐய்யப்ப சேவா சாமாஜ் “ன் அழைப்பை ஏற்று நைரோபிக்கு விஜயம் செய்து கர்நாடக இசைக் கச்சேரி செய்ய வந்திருக்கிறார்கள்,
” திருச்சூர் ப்ரதர்ஸ் ’’ ___
திரு ஸ்ரீ கிருஷ்ண மோகன் & திரு. ராம் குமார் மோகன் !

புதன், 29 அக்டோபர், 2014

எக்ஸ்னோரா.. ExNoRa



எக்ஸ்னோரா.

எக்ஸ்னோரா சிதம்பரம் என்பவரை ஒரு முறை குமரன் கல்யாண மண்டபத்தில் லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நடைபெற்ற  நவராத்ரி விழாவின்போது சந்தித்தேன். சீஃப் கெஸ்ட் மேன்மைமிகு கவர்னர் பர்னாலாவின் பேத்தி ஆயிஷா ஸாந்து ., ஸ்பெஷல் கெஸ்ட் ஃபிலிம் டைரக்டர் மதுமிதா விஜய்., மற்றும் எக்ஸ்னோரா சுலோசனா ராமசேஷன்.. குத்துவிளக்கேற்றி முப்பெரும் தேவியரும் விழாவைத் தொடங்க.. நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.. எக்ஸ்னோராவைச் சேர்ந்த சுலோச்சனா அவர்களுக்கு லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நினைவுப் பரிசு வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.!

அந்த நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா மெம்பரான சிதம்பரம் என்பவரும் வந்திருந்தார். அவரிடம் அது பற்றிக் கேட்டபோது சிறிது விவரங்கள் அளித்தார்.இவர் 2 கவிதை நூல்களும், ஒரு ஜோக் நூலும் ஒரு நாவலும் ( தாய்மையே வெல்லும் ) வெளியிட்டிருக்கிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...