எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 பிப்ரவரி, 2019

காதலர் தினத்தில் ”காதல் வனம்” வெளியீடு.

எனது புது நாவலான காதல் வனம் காதலர் தினமான ஃபிப்ரவரி பதிநான்காம் தேதி சென்னை கே கே நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வெளியிடப்பட்டது.

அந்நிகழ்வுக்கு நம் வலைப்பதிவர்கள், முகநூல் நண்பர்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பித்தார்கள்.
 



கல்லூரித் தோழி ஏர்னஸ்டினின் கணவர் முழு நிகழ்வையும் கிட்டத்தட்ட 600 படங்களாக எடுத்து அனுப்பி வியப்பூட்டினார். ( நட்பின் வலிமை :)

சர்ப்ரைஸாகக் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி அளித்த வெல்விஷர் ஏஞ்சல் அருளானந்த குமார் சாருடன். ( இவர் என் கல்லூரித் தோழி ஏர்னஸ்டினின் கணவர், இருவரும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ) அன்பும் நன்றியும் பெருமகிழ்வும் குமார் சார்


எனது உறவினர்கள் அலமு அத்தை, சுப்பு ஐத்தான், அலமு ஆச்சி ஆகியோர் வந்திருந்து வாழ்த்தினார்கள். என் ஆச்சி மகள் லெக்ஷ்மி ராமசாமியும் வந்து வாழ்த்தினாள்.

(GLIMPSES OF HAPPINESS.  )

அன்புத்தங்கை புவனா, நண்பர் ஸ்டில்ஸ் ரவி சார் ஆகியோர் வேறு நிகழ்வுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் சீக்கிரம் வந்து சென்றுவிட்டார்கள்.

அயல் சினிமா டிஸ்கஷனில் இருந்த தீபா ஜானகிராமன், அரு ராமனாதன் ஆகியோரும் வாழ்த்து நல்கினார்கள்.

நெல்லை உலகம்மை முதலில் வந்து வாழ்த்தி பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

புத்தகம் வெளியிட்ட எங்களுக்கு சாஸ்த்ரி பவன் மணிமேகலை மேம் அவர்கள் பொன்னாடை போர்த்தினார்கள்.

பதிப்பாளருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் கூட !.
   
 (குட்டி முதலாளியின் அழகான வெட்கம் )

நாங்களும் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடை போர்த்தினோம்.

நமது செட்டிநாட்டின் இதழ் ஆசிரியர் ஆவுடையப்பன் சார், இராம குருநாதன் சார்,

(நாடகத் துறையின் பிதாமகருடன்)

வெளி ரங்கராஜன் சார், பெருமாள் ஆச்சி, ஆதிரா முல்லை, வாசக சாலையின் கற்பகவல்லி, நமது பதிவர்கள் இராகவன் நைஜீரியா,  ஞா கலையரசி,  கேபிள் ஷங்கர், எம் ஏ இராமமூர்த்தி சார், விகடன் பொன் காசிராஜன், இன்னும் சிலர் & டிஸ்கவரி வேடியப்பன், அவரது  துணைவியார் மற்றும் மகன் கலந்து கொண்டார்கள்.

பத்தாண்டுகளுக்கும் மேலான நட்பில் எழுந்தருளி வாழ்த்திய முகநூல் ,  வலையுலக அன்பு நண்பர்கள்.  எம் ஏ.  ராமமூர்த்தி சாரும், எங்கள் அனைவரின் ஏகோபித்த அன்புக்கும் மரியாதைக்கும் உரியவரான ராகவன் நைஜீரியா சாரும். எங்குமே நீங்கள் அவர்களைக் கண்டிருக்க முடியாது என்பதால் எழுந்தருளி எனக் குறிப்பிட்டிருக்கிறேன். <3 .="" p="">


(கடந்த பத்தாண்டுகளாக வலையுலக & முகநூல் நண்பர் கேபிள் சங்கர். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சங்கர்ஜி )


காதலர் தினத்தில் அழியாக் கொள்கைகள் தந்த அண்ணலைக் காதலிப்பதாகக் கூறி அனைவருக்கும் அண்ணல் படத்தை வழங்கினார் சாஸ்த்ரி பவன் மணிமேகலை. சாஸ்த்ரி பவனில் லாபியில் அண்ணலின் சிலையை வைக்க இவர் கடந்த 12 ஆண்டுகளாகப் பெரும்பணி ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் & டிஸ்கவரி & படி வெளியீடு அதிபர் வேடியப்பன் சகோ.

காதல் வனம் நாவலை சாஸ்த்ரி பவன் யூனியன் லீடர் மணிமேகலை அவர்கள் வெளியிட பேராசிரியை கவிஞர் மணிமேகலை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.




காவிரி மைந்தன் தன்னுடைய காதல் பொதுமறை என்ற நூலை வெளியிட்டார். கலையரசி வெளியிட நான் பெற்றுக் கொண்டேன்.

 இன்னொரு பிரதியை நமது செட்டிநாட்டின் ஆசிரியர் ஆவுடையப்பன் வெளியிட டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் பெற்றுக் கொண்டார்.



 நண்பர் க து இளங்கோ, தோழிகள் நாச்சியாள் சுகந்தி, கவிதா சொர்ணவல்லி, நண்பர் காவிரி மைந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

(கனிவின் ராணி கவிதா சொர்ணவல்லி, தானைத் தலைவி நாச்சியாள்,

கிட்டத்தட்ட அறுபது விருதுகளுக்கும் மேல் வாங்கியவர், பேராசிரியை, கவிஞர், அன்புத்தோழி மணிமேகலை சித்தார்த்தன் அவர்கள். போனில் கேட்டுக்கொண்டதற்கிணங்க எனது நாவல் “ காதல் வனம் “ வெளியீட்டில் கலந்து கொண்டு நூலைப் பெற்றுக் கொள்ள இசைந்தார். வந்திருந்து அருமையாக உரையாற்றிப் புன்னகை பொலியும் முகத்தோடு விழாவைச் சிறப்பித்தார். அன்பும் நன்றியும் மணிமேகலை மேம்.

ஆயிரத்தில் அல்ல லட்சத்திலும் அல்ல கோடியில் ஒருத்தியம்மா நீ. கண்டநாள் முதல் இந்த நாள் வரை என்னை விட்டு இம்மியும் விலகாத என் அன்புத் தோழி மணிமேகலை. காதலர் தினத்தில் அழியா அற்புதக் கொள்கைகளை அளித்த அண்ணலைக் காதலிப்பதாகச் சொல்லி வியக்க வைத்தவள் நீ. பன்னிரெண்டு ஆண்டுகள் சாஸ்த்ரி பவனின் லாபியில் அவரது உருவச்சிலையை வைக்க இடைவிடாமல் போராட்டம் நடத்திவரும் புரட்சிப் பெண் நீ. உன் ஆன்மாவின் குரல் வெற்றியடைய பக்கபலமாய் இருந்து வாழ்த்துகிறேன். அன்பும் மகிழ்ச்சியும் நன்றியும் மணி மேம்


வேடியப்பன் வரவேற்புரை வழங்க நானும் எனது கணவரும் ஏற்புரை வழங்கினோம்.

என் அன்பிற்கினிய அலமு அத்தையுடன் <3 .="" p="">




மிகச் சிறப்பான மாலையாக அது அமைந்தது. கண்ணதாசன் பற்றியும் அவர் பாடல்கள் பற்றியும் காவிரி மைந்தன் அவர்களும், மணிமேகலை அவர்களும் பாடி சிறப்பித்தார்கள்.

மொத்தத்தில் காதல் வனம் கலகலப்பான வனமானது.

6 கருத்துகள்:

  1. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. இனிய வாழ்த்துக்கள் தேனம்மை! புகைப்படங்க்ள் யாவும் அருமை!

    பதிலளிநீக்கு
  3. சிறப்பு. நல்வாழ்த்துகள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பாக விழா நடந்தது அறிந்து மகிழ்ச்சி....

    மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
  5. நன்றி டிடி சகோ

    நன்றி பாஸ்கர் சகோ

    நன்றி மனோ மேம்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...