எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வெம்மிளகாய்..

குடுவை உடைந்து
மீன்கள் துள்ளின..
ஆன்ம விடுதலைக்காய்..

பிணத்தின் முன் ஆட்டம்..
சாவும் கொண்டாடப்பட வேண்டுமென்றா..
நிறைபட வாழ்ந்ததற்கா..

மல்லிகை மொக்குகளில்
வெம்மிளகாய் வாசனை ..
உன் ஊடல்..



கேட்ட வரம் கொடுக்கும்
கோயில் வாசல்கள் எல்லாம்
காசுக்காய் பிச்சைக்காரர்கள்..

மலைக்கு மாலை..,
தீட்டு கூடாது..
மழைத்தண்ணீர் அடித்து அலசியது
ஊர்த்தீட்டு அனைத்தும் காலில்..

ஒரே பரிசலில் ..
இருவேறு பக்கங்கங்களில்..
எதிர்த்துடுப்போடு.,

நீர்வீழ்ச்சி அடிக்க.,
நதிச்சுழி இழுக்க.,
அணைச்சுறா எதிர்க்க..

செல்லும் வழியெல்லாம்
அன்பைத் தூவித் தூவி
தலை நரைத்த மேகம்..

வார்த்தைச் சட்டிகளில்
கவனமில்லாமல் வறுபட்டு
கருகிய மனசு..

30 கருத்துகள்:

  1. செல்லும் வழியெல்லாம்
    அன்பைத் தூவித் தூவி
    தலை நரைத்த மேகம்..

    ஆஹா.. அருமையான கற்பனை.

    பதிலளிநீக்கு
  2. கேட்ட வரம் கொடுக்கும்
    கோயில் வாசல்கள் எல்லாம்
    காசுக்காய் பிச்சைக்காரர்கள்..


    .......நிறைய யோசிக்க வைத்தது.....

    பதிலளிநீக்கு
  3. சகல திசைகளிலும் செல்லும் கவிதையின் கண் காணக் காண அழகு!

    பதிலளிநீக்கு
  4. ///மல்லிகை மொக்குகளில்
    வெம்மிளகாய் வாசனை ..
    உன் ஊடல்..///

    ///மலைக்கு மாலை..,
    தீட்டு கூடாது..
    மழைத்தண்ணீர் அடித்து அலசியது
    ஊர்த்தீட்டு அனைத்தும் காலில்..///

    ///வார்த்தைச் சட்டிகளில்
    கவனமில்லாமல் வறுபட்டு
    கருகிய மனசு..////
    என்ன சொல்வது தேனம்மை!!!

    எங்கு பிடிக்கிறீர்கள் இந்தப் படிமமும் வார்த்தைகளும்.

    அற்புதமான கவிதை எப்போதும் போல்

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. எப்படி தான் இப்படி யோசிக்க முடிகிறது. ஒவ்வொரு கவிதையும் அர்த்தம் பொதிந்த அழகு.

    பதிலளிநீக்கு
  6. கவிதை அருமை.. நிறைய யோசிக்க வைக்கிறது..

    இங்கு வருவது இது முதல் முறை சகோ...
    சிவாஜி சிறகுக்குள், சிவாஜி சொன்னார்.. உங்களுக்கும் அவருக்கும் நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. ’மனம்’ என்றே முடித்திருக்கலாமோ...

    நல்ல வீச்சு... ரொம்ப நல்லா வந்திருக்குங்க :)

    contradictiona அடுக்கி பின்னியிருக்கீங்க...

    மாலையும், பிச்சைகாரர்களும் ரொம்ப பிடிச்சுயிருந்தது..

    பதிலளிநீக்கு
  9. தேனு ரொம்ப நல்லா வந்துருக்கு கவிதை ..ரசித்து படித்தேன் ..

    பதிலளிநீக்கு
  10. பேதம் பார்க்கும் மனிதர்கள் மாறப்போவதில்லை தேனக்கா !

    பதிலளிநீக்கு
  11. ச்சும்மா அருமையா இருக்குங்க!

    பதிலளிநீக்கு
  12. சூப்பர் அக்கா!

    //மல்லிகை மொக்குகளில்
    வெம்மிளகாய் வாசனை ..
    உன் ஊடல்..//

    //வார்த்தைச் சட்டிகளில்
    கவனமில்லாமல் வறுபட்டு
    கருகிய மனசு..//

    செம...

    பதிலளிநீக்கு
  13. //ஒரே பரிசலில் ..
    இருவேறு பக்கங்கங்களில்..
    எதிர்த்துடுப்போடு.,//

    இது மட்டுமின்றி, எல்லாமே சிந்திக்க வைக்கின்றன. அருமையான கவிதைக்கு நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  14. //கேட்ட வரம் கொடுக்கும்
    கோயில் வாசல்கள் எல்லாம்
    காசுக்காய் பிச்சைக்காரர்கள்..//

    என்னை கவர்ந்த வரிகள் அக்கா நன்றி

    பதிலளிநீக்கு
  15. ஒரு தென்றலை போல மனதை வருடி எல்லாத் திசைகளிலும் பயனிக்கும் கவிதை

    அருமை

    பதிலளிநீக்கு
  16. கவிதைக்கு மறுமொழிகள் மேலும் அழகு சேர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  17. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையுடன். அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  18. கடைசி ஆறு வரிகளும் ரொம்பவே அருமை.

    பதிலளிநீக்கு
  19. சன் டி.வி பாணியில்

    வெம்மிளகாய் = உறைப்பு

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  20. நன்றி கார்த்திக்., ரிஷபன்., சித்து., நியோ., வெற்றி., ரமேஷ்., வினோ., அஷோக்., பத்மா., ஹேமா., வேல்ஜி., நேசன்.,முனியப்பன் சார்., பாலாஜி., சை கொ ப., ராமலெக்ஷ்மி., சசி., குமார்., வேலு., ஜெரி., ஜெயந்தி.,ஸ்ரீராம்., விஜய்.

    பதிலளிநீக்கு
  21. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  22. தலைப்புகளை இத்தனை லாவகமாக உங்கள் மூளை எங்கிருந்து கொண்டுவருகின்றது தேனம்மை?

    பதிலளிநீக்கு
  23. நன்றி அண்ணாமலை., தமிழ்த்தோட்டம்., ஸாதிகா..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...