ஓடி ஓடித் திரவியம் தேடி நீ..
புன்னகை தொலைத்த உன் முகத்தில்
எப்போதாவது அத்திப்பூ மலர்ந்து..
உன் வருகைக்காய்க் காத்துப்
பூ பூத்துப் போன பின்
யுகங்களுக்கொரு முறை
வருவாய் அத்தி பூத்ததாய் ..
பூக்களின் நறுமணம் போல்
உனக்கென்றும் ஒரு ப்ரத்யேக வாசனை..
டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் ..ஒரு அழகுத் தொகுப்பு
பரிசல் கிருஷ்ணா பாராட்டுக்கள்...!! நெகிழ வைத்து
விட்டீர்கள்.. ஆச்சர்யம்..! அருமை..!! அற்புதம்..!!!
இது நாகரத்னா புத்தக வெளியீடு.. கவிஞர் சுரேகா
முன்னுரை எழுதி இருக்கிறார் ..மனித நேயம் .,
நட்பு .,காதல்., க்ரைம் என அனைத்திலும் சிறப்பான
இத்தொகுப்பு கிருஷ்ணாவின் கிரீடத்தில் மயில் இறகு!!
வலையுலகில் நன்கு பரிச்சயமான கேபிள் ஷங்கர்
ஜியின் புத்தகம் என்பதால் மிக ஆவலுடன் படிக்கத்
துவங்கினேன். அவருடைய திரைப்பட விமர்சனங்கள்
மிகுந்த தரமுள்ளவையாக இருக்கும்.. சினிமா சம்பந்
தப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுவதலோ என்னவோ
இவரின் முதல் சிறுகதைத்தொகுப்பில் அனைத்துக்
கதைகளும் சிறந்த திரைக்கதையுள்ள குறும்படம்
போலவே இருக்கிறது.. சுகாசினி., பாலு மகேந்திரா
போல இவற்றைத்தொடராகவும் இயக்கலாம் இவர்.
கதைகள் எல்லாம் விறுவிறுப்பாய் இருக்கின்றன.