எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மனைவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனைவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

ராசக்ரீடை...



ராசக்ரீடை..
********************
எல்லாமும் தேவதைதான்..
ஒன்று காளியாய்
ஒன்று சூலியாய்
ஒன்று சரஸ்வதியாய்
ஒன்று வராஹியாய்
ஒன்று லக்ஷ்மியாய்..

வியாழன், 27 மே, 2010

கதவுகளும் ஜன்னல்களும்

வீட்டின் உள்செல்லவும்.,
வெளியேறவும்.,
இரண்டு கதவுகளும்,
ஏழெட்டு ஜன்னல்களும்....

எனக்கான சமையலறையில்
குருவியும்., காக்கையும்.,
கிளியும்., பட்டாம்பூச்சியும்.,
முருங்கை மரமும்.,
தென்னை கீறிய நிலாவும்..

திங்கள், 5 ஏப்ரல், 2010

கைவசம்

உன் கைப்பிடித்து வர
கையில் இருந்தவற்றைக்
கழட்டி வைத்தேன்...

உன் கை நெகிழ
கழற்றிய ஒவ்வொன்றாய்
கை வசமாக ..
கைக் கவசமாக...

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

என்னவளே

என்நேரமும் உன் பார்வைத்தோணியில்..
பத்திரமாய் விழிபிடித்து மிதந்துகொண்டு..

அவ்வப்போது நான் என்ற முகமூடி மாட்டி..
அன்பின் கழுத்தை இறுக்கக் கட்டி..

உன் புன்னகையையும் பார்வையையும்
தரையில் வீசி மிதித்து
காணாதது போல் புறந்திரும்பி..

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

எப்ப வருவ....?

கர்ப்பந்தான் பத்து மாசம்..
உன்னைக் காணவுமே பத்து மாசம்..
வருடத்தில் இரண்டு மாசம்..
வந்து செல்லும் என் வசந்தம்..
நீ இட்ட முத்தம்., பட்ட எச்சில்
எதுவுமே காயலயே..
டிக்கெட்டுப் போட்டாச்சு என்றதுமே
இருண்டதய்யா என் கண்ணு ...
குழம்புதான் வைக்கிறேன்
பொடியும் புளியுமில்லாம..

புதன், 3 பிப்ரவரி, 2010

ராமனின் மனைவி

முகமற்றவள் ..மண்ணில் பிறந்தவள்..
மண்ணால் விழுங்கப்பட...
சிவதனுசை நீ எடுத்த நொடி..
உன் கைவசம் முடிவு.. என் வாழ்வு..
அம்புறாத்துணியோடுதான் பார்த்தேன்..
நானே எய்யப்படுவது அறியாமல்...

வனவாசத்திலும் மரவுரியுடன்
உன் பின்னே சுற்றித்திரிய விழைவில்..
உன் மனவாசத்தில் இருந்தாலும்
என்னைத் தவிர்த்துச் செல்லும் விழைவில் நீ..

திங்கள், 4 ஜனவரி, 2010

குருக்ஷேத்திரம்

எதிர்பாராது
எதிரில் இருப்பவரே
எதிரியான குழப்பம்...
குறிவைத்தோ .,
குறிப்பிட்டதை மட்டுமே சொல்லியோ
எய்யப்பயிலாமல்...
கண்ணனே என் காதலன்.,
சாரதி., சேவகன் ஆனால்
என் போரேல்லாம் அவனுடனே ...

திங்கள், 7 டிசம்பர், 2009

ஆக்கிரமிப்பு

காட்டாற்று வெள்ளமாக
கடுங்கோடை இடியாக
ஆட்டுவிக்கிறேன் என்
அன்பெனும் அதிகாரத்தில்...

அடைமழையில் நனைந்த
கோழியாக ஆடிக்கொண்டிருக்கும்
உன்னை இன்னும்...

வெள்ளி, 30 அக்டோபர், 2009

டேபிள் ரோஸ்

என்னுடைய அன்பை
கவசமாகவும் சேணமாகவும்
தாலியாகவும் மோதிரமாகவும் மாட்டி
அழகாய் இருக்கிறாய்
என்கிறேன்....

நீ வலிகளைப்
பற்களுக்குள் ஒளிப்பதை
புன்னகைப்பதாக எண்ணி
மகிழ்கிறேன்....

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

மனைவி

எந்நேரம் வந்தாலும்
எனக்காக கதவடியில்
காத்திருந்திருப்பாய்..

அதீதப்பேச்சால்
அயர வைத்தது போல்
அன்பாலும்...

பணிக்கான ஓட்டத்தில்
ஊர் விட்டு ஊர் ஓட
என்னுடனே துணை வருவாய்...
Related Posts Plugin for WordPress, Blogger...