எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

குல்மோஹர்

குல்மோஹரின்
ரத்தச் சிகப்புப்
பூக்களைப் போல
ஒளிர்ந்தது
உன் கண்களில்
என் மீதான காதல்....

கண்வழி
பொறி பட்டது போல்
குல்மோஹரைப்
பார்க்கும் போதெல்லாம்
பற்றி எரிகிறது மனசு....

9 கருத்துகள்:

  1. // கண்வழி
    பொறி பட்டது போல் //

    வாவ்.. ரொம்ப நாள் கழித்து படிக்கும் உபமானம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இந்த word verification ஐ எடுத்துடுங்க. கமெண்ட் மாடரேஷன் இருந்தால் போதுமானது. வேர்ட் வெரிபிகேஷன் இருந்தால், பின்னூட்டம் போடுவது கொஞ்சம் கஷ்டம். தமிழில் அடித்து, பின் ஆங்கிலம் மாறி...

    பதிலளிநீக்கு
  3. நன்றிகள் இராகவன் நைஜீரியா அவர்களே
    வார்த்தைப் பிழை திருத்தியை நீக்கி விட்டேன்
    அறிவுரைகளுக்கும் விமர்சனத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  4. விமர்சனத்துக்கு நன்றிகள் முனியப்பன் ஸார்

    பதிலளிநீக்கு
  5. அடப்பாவமே பூக்கள பாத்து மனசு எறிஞ்ச முதல் கவிஞர் நீங்கதான்...

    பதிலளிநீக்கு
  6. மேடம் மன்னிக்கணும்..
    குல்மோகர் அப்படி என்றால் என்ன..
    நான் இதுவரை அறிந்ததில்லை...

    பதிலளிநீக்கு
  7. மனசு தீப்பிடித்து எறிகிறது எரிச்சலில் அல்ல அண்ணாமலையானே

    பதிலளிநீக்கு
  8. குல்மோஹர் ரத்தச்சிவப்பாகவும் மஞ்சளாகவும் பூக்கும் கமலேஷ்

    உங்க காதலின் பக்கங்கள் அருமை

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...