தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காரைக்குடியில் இரண்டாம் ஆண்டாகப் புத்தகத் திருவிழாவைச் சிறப்புற நடத்தியது. அதில் சிக்ரியோடு ( செண்டரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ) இணைந்து சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களுக்கு விஞ்ஞானி ரகுபதி விருது அளிக்கப்பட்டது. எனக்கும் விருது வழங்கிக் கௌரவப்படுத்தினார்கள். இது பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். மொத்தப் புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 16 பிப்ரவரி, 2021
வெள்ளி, 12 பிப்ரவரி, 2021
கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம்.
வீட்டில் ஒரு ஜோசிய நோட்டுக் கிடைத்தது. அதில் குறிப்பிட்டிருந்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன். (பஞ்சாங்கம் போல் அனைத்துமே அதில் குறிக்கப்பட்டு இருந்தன.
திக்கயங்களாவன ( திசைகளுக்கான வாகனங்கள் என நினைக்கிறேன் )
ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பகந்தம், சார்லபௌமம், சுப்ரதீபம்.
நாகங்களாவன
அனந்தன், வாசுகி, தக்ஷ்கன், சங்கன், குளிகன், பத்மன், மகாபத்மன், கார்க்கோடகன்
சப்த ரிஷிகளாவன
மரீஷி, அத்திரி, ஆங்கிரஸு, புலஸ்தியன், புலகன், பிருகு, வசிஷ்டர்.
புதன், 10 பிப்ரவரி, 2021
காப்புக் கட்டுப் புதுமையும் கார்த்திகைப் புதுமையும் சுவீகாரப் புதுமையும் திருவாதிரைப் புதுமையும்.
162. 1751. காப்புக்கட்டுப் புதுமை
வீட்டின் முதற்குழந்தைகளுக்கு ( ஆண் & பெண் ) முதலாம் ஆண்டு பிறந்த விழாவை அதை ஒட்டி வரும் ஒரு நன்னாளில் கொண்டாடுவதே ஆதி காலத்தில் காப்புக் கட்டுப் புதுமை. பின்னாட்களில் ஆறேழு வயது வந்ததும் அக்குழந்தைகளுக்குப் புதுமை கொண்டாடினார்கள்.
1752. முதலில் இருப்பது என் கணவருக்கும் அவர் தங்கைக்கும் கொண்டாடிய காப்புக்கட்டுப் புதுமைக்கான அழைப்பிதழ் . 69 ஆம் வருடம் பங்குனி மாதத்தில் என் கணவருக்கு 7 வயதும், என் நாத்தனாருக்கு ஐந்து வயதும் ஆனபோது கொண்டாடி இருக்கிறார்கள்.
இந்நிகழ்வில் அனைத்து ஆபரணங்களும் அழகிய பட்டு உடைகளும் அணிந்த குழந்தைகளை வெள்ளித்தாம்பாளத்தில்/ தங்கத்தாம்பாளத்தில் அமரவைத்து திருஷ்டி கழியச் சுற்றும் ஆலத்தி போல் சுற்றி இறக்குவார்கள். விருந்தினர்களும் குழந்தைகளை ஆசீர்வதிப்பார்கள். காலையும் மதியமும் விருந்து இருக்கும்.
1753. அதன் பின் கார்த்திகைப் புதுமை.
கார்த்திகை மாதம் கொண்டாடப்படும் புதுமைக்குக் கார்த்திகைப் புதுமை என்று பெயர். இது கல்வி கற்கச் செல்லும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்காக நிகழ்த்தப்படும் கொண்டாட்டம். இந்நிகழ்வில் குழந்தைகளுக்கு அழகிய ஆடை அணிவித்து அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குக் குதிரையில் ஏற்றிச் சென்று வணங்க வைத்து அழைத்து வந்து வித்யாப்பியாசம் செய்து வைப்பார்கள். குழந்தைகள் கோயிலுக்கு குதிரையில் ஏறிச் செல்லும்போது விடிகாலை நேரமாக இருப்பதால் குதிரையின் முன்னே 1754*சூள்பிடி ( தீப்பந்தம்போலப் பிடித்துச் செல்வது ) எடுத்துச் செல்வார்கள். இதுவே சூப்பிடி என்று பேச்சு வழக்கில் மருவி உள்ளது. அதன்பின் பள்ளியில் ( ஏட்டுப் பள்ளிக்கூடம், திண்ணைப் பள்ளிக்கூடம் ) சேர்ப்பார்கள்.
///குழந்தைகளுக்கு வரும் முதல் பிறந்தநாளை புதுமை எனக் கொண்டாடுகிறார்கள். முதன் முதல் பள்ளி செல்லும் போது பிள்ளைகளை கார்த்திகைத் திருநாளில் வீடுகளில் வாழை நட்டு விளக்கேற்றி விநாயகர் கோயிலுக்கோ, சிவாலயத்துக்கோ குதிரை ஏற்றிச் சென்று சோதி தரிசனம் செய்து வரச் செய்கிறார்கள். இதை சூள்பிடி ( சூப்பிடி என்று இப்போது பேச்சு வழக்கு மருவி விட்டது ) என்ற அணையாத லாந்தர் விளக்குகள், மெழுகுதிரி விளக்குகளைக் குதிரை முன் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவார்கள்.////
1755*திருவாதிரைப் புதுமை என்பது பாவை நோன்பு போல மார்கழி மாதம் திருவாதிரையின்போது கொண்டாடப்படுவது. பருவ வயதில் அல்லது எட்டிலிருந்து பதின்பருவங்களில் இருக்கும் குழந்தைகளுக்குப் பட்டுச் சிற்றாடை கட்டி ( தாவணி போல் ஒன்று, புடவையை விட கஜம் குறைவாக இருக்கும் ) ஜம்பர் ரவிக்கை போட்டு நெத்திச் சுட்டியில் இருந்து வைரப்பதக்கம் வெள்ளிக் கொலுசு ஈறாய நகைகள் போட்டு அழகு படுத்தித் திருவாதிரைப் பாடல்கள் பாடுவார்கள்.
1756*திருவாதிரைப் புதுமையின்போது திருவாதிரைப் பெண்ணின் கையை மாமக்காரர் பிடித்து 108 முறை எழுத்தாணியால் திருவாதிரைத் தோசையக் குத்துவது.
இதை இங்கேயும் பாருங்க.
மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.
சனி, 6 பிப்ரவரி, 2021
பசுக்கள் மேய்த்து ஞானம் பெற்ற சுவேதகேது.
பசுக்கள் மேய்த்து ஞானம் பெற்ற சுவேதகேது.
வெள்ளி, 5 பிப்ரவரி, 2021
கொலோஸியத்தில்.. COLOSSEUM, ROME.
ஏழு புதிய உலக அதிசயங்களுள் ஒன்று இந்த கொலோசியம்.
பண்டைய ரோமாபுரியின் கட்டிடக்கலைகளுள் ஒன்று கொலோசியம். க்ளாடியேட்டர் என்றொரு படம் பார்த்திருப்பீர்கள். மனிதர்களும்( கைதிகள் ) மிருகங்களும் ஏன் அடிமைகளும் அடிமைகளுமே குபீரென பாதாளப் பாதைகளில் இருந்து உக்கிரத்துடன் வெளிப்பட்டு ஆக்ரோஷத்துடன் மோதும் இடம்.
யூரோப் டூரின் நான்காம் நாள் இந்த அரங்கத்தைப் பார்த்தோம். பல்லாயிரக்கணக்கான உயிர்களை மன்னர்களின் கேளிக்கைக்காகக் காவு கொண்ட இடம் இது. இதுவும் பாரிஸின் ப்ரெஞ்ச் தொழிற் புரட்சி நடந்த இடமும் ( OBILISH OF LUXOR ) - ப்ளேஸ் டி கன்கார்ட் மனதை வருத்திய இடங்கள்.
மதனின் “ மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்” என்ற நூலில் இந்தக் கொலோசியம் பற்றியும் அதன் கொடுங்கோல் மன்னன் பற்றியும் விவரித்து இருக்கும் விதம் படிக்கும்போதே சில்லிடக்கூடியது.
நாம் காணும் இந்தக் கொலோசியம் 20 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று சொன்னால் பிரமிப்பாய் இருக்கும். சலவைக்கல், இரும்பு கொண்டு திடமாய்க் கட்டப்பட்ட இக்கட்டடம் நிலநடுக்கத்தாலும் இயற்கைச் சேதங்களாலும் பாழடைந்து இந்நிலையை எட்டியுள்ளது.
வட்டவடிவமாக அமைக்கப்பட்ட இந்த மினி கொலோசியத்தை ஆம்பிதியேட்டர் என்றும் கொலோசியத்தை ஃப்ளேவியன் ஆம்பிதியேட்டர் என்றும் அழைக்கிறார்கள்.





