பசுக்கள் மேய்த்து ஞானம் பெற்ற சுவேதகேது.
பள்ளிக்கூடத்தில் சரியாகப் படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு எனத் திட்டுவார்கள். மாடு மேய்ப்பது அவ்வளவு சுலபமா என்ன ? நன்கு படித்திருந்தும் தன் ஆசிரியர் மாடு மேய்க்கச் சொன்னதற்காகக் கோபப்படாமல் பசுக்களை மேய்த்து அவற்றின் மூலம் ஞானம் பெற்ற சுவேதகேது என்பவன் கதையைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
உத்தாலக ஆருணி என்றொரு முனிவர் இருந்தார். அவருடைய மகன்தான் சுவேதகேது. அறிவும் ஆற்றலும் நிரம்பப் பெற்றவன். உத்தாலக முனிவரே சுவேதகேதுவுக்குக் கற்பித்து வந்தார் . ஆனாலும் அவனுக்கு உரிய வயது வந்ததும் அவனைக் கல்வி கற்க வேறொரு குருவிடம் அனுப்பினார்.
