தேடிப்பாரேன்,
கொஞ்சம் தேடிப் பாரேன்.
நொறுங்கிக் கிடக்கும்
கண்ணாடிச் சில்லுகளில்
ஆற்றின் கண்ணாடிச் சில்லுகளில்
கொட்டிச் சிதறும்
வெளிச்ச வெள்ளங்களில்
சூரியனின் சூடான முத்தங்களில்
கண்ணீர் கசியவைக்கும் நெஞ்சை நெகிழவைக்கும் மனசை ஆட்டிப் படைக்கும் எழுத்தை சமீபத்தில் படித்தேன். ஆண் எழுத்தாளர்களே பெரும்பகுதியும் உண்மையைப் பொளேரென அறையும் விதத்தில் எழுதி இருப்பதைப் படித்துப் பிரமித்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண் எழுத்தைப் படித்துவிட்டு அயர்ந்து போய் இருக்கிறேன் இன்று.