ஒரு விஷயத்தைத் தெரியும் என்றால் தெளிவுற உரைக்க வேண்டும். தெரியாது என்றால் உண்மையை ஒப்புக்கொண்டு அதைக் கற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் ஒரு முனிவர் தனக்கு எல்லாம் தெரியும் என்ற இறுமாப்போடு இருந்தார். அவரின் இறுமாப்பை ஒரு பெண் தகர்த்தாள். அந்தப் பெண் யார் அந்த முனிவர் யார் என்று பார்ப்போம் குழந்தைகளே.
வேதகாலத்திலேயே பெண்கள் கல்வி கற்றிருந்தார்கள். மைத்ரேயி, லோபமுத்ரா போல் கார்கி வாசக்னவி என்ற பெண் ரிஷியும் அவர்களில் முக்கியமானவர். இவர் சிறந்த பெண் துறவி. தத்துவ ஞானி, பிரம்மவதனி என்று அறியப்பட்டவர். ப்ரஹதாரண்ய உபநிஷத்தில் இவரது புகழ் பேசப்படுகிறது.
இவர் கார்கி முனிவரின் மகள். அந்தக் காலத்திலேயே ஆண் குழந்தைகளைப் போல் ஏழு வயதில் உபநயனம் செய்விக்கப்பட்டு குருகுலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் பயின்றவர். தத்துவங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றில் கரை தேர்ந்தவர். மிதிலாபுரி அரசர் ஜனகரின் சபையில் இருந்த ஒன்பது இரத்தினங்களில் ஒருவராக மதிக்கப்பட்டவர்.
இவர் கார்கி முனிவரின் மகள். அந்தக் காலத்திலேயே ஆண் குழந்தைகளைப் போல் ஏழு வயதில் உபநயனம் செய்விக்கப்பட்டு குருகுலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் பயின்றவர். தத்துவங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றில் கரை தேர்ந்தவர். மிதிலாபுரி அரசர் ஜனகரின் சபையில் இருந்த ஒன்பது இரத்தினங்களில் ஒருவராக மதிக்கப்பட்டவர்.
யக்ஞவல்கியரும் சாமான்யப்பட்டவரில்லை. இவரது பெற்றோர் பிரம்மரதன் , சுனந்தா என்போர். இவரது மாமா வேதங்களில் சிறந்த வைசம்பாயனர் என்பார். யக்ஞவல்கியர் சூரியனிடமிருந்து யஜுர்வேதத்தைக் கற்று அதை உலகுக்கு அளித்தவர். இவரும் ஜனகரின் அவையில் இடம்பெற்றிருந்தார்.
