எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
முத்துசபாரெத்தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்துசபாரெத்தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

பங்கு வர்த்தகத்தில் பெண்களும் ஈடுபடலாம்

 பங்கு வர்த்தகத்தில் பெண்களும் ஈடுபடலாம்






காரைக்குடியில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாகப் பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் திருமதி முத்துசபாரெத்தினம் அவர்களிடம் பெண்கள் அதிகம் ஈடுபடாத இந்தத் துறையில் அவருக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது என விசாரித்தபோது அவர்,

 

“எனது பெயர் முத்துக் கருப்பாயி சபாரெத்தினம். எனக்கு இப்போது எண்பது வயதாகிறது. எனது கணவர் திரு. சபாரெத்தினம் அவர்கள் ஐசிஐசிஐ வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எங்களுக்கு நான்கு குழந்தைகள். பிள்ளைங்களுக்கெல்லாம் கல்யாணமாகி குடும்பமாக்கி வச்சபிறகு செடிகொடி மரம் வளத்தேன். (செடிகொடி நம்மளோட இருந்து பாய்ச்சின தண்ணிக்கும் போட்ட உரத்துக்கும் நல்ல பலன் தருது). (எங்க கல்யாணம் முடிஞ்சு 6 வருசத்தில மாமியார் 2 பையன்கள வச்சிட்டு சிவனடி சேர்நதுவிட்டார்கள். அவர்களும் எங்க பிள்ளைகளோட வளந்து பேரன்பேத்தி பார்ததுவிட்டார்கள்.)

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

வயது ஒரு தடையல்ல..

”மங்களா சிமிண்ட் 100 வாங்கிரு..அப்புறம் கேவீபீ என்ன ஆச்சு.. இன்னைக்கு ஏறுமா.. வைச்சுக்குவோமா வித்திருவோமா..” என்ற குரலுக்குச் சொந்தக்காரர் .. 65 வயதான முத்துக் கருப்பாயி ஆச்சி.. இது பங்குச்சந்தையில் அவர் முதலீடு செய்து ஏறினால் விற்பது.. இறங்கினால் வைத்துக் கொள்வது என்ற பாலிசியில் செய்யும் பங்கு வர்த்தகம்.

எந்த வயதானால் என்ன .. வட்டித்தொழில்., பங்குச்சந்தை என்பது எல்லாம் ரத்தத்திலேயே ஊறி இருக்க வேண்டும்.. இது ரிஸ்கானதாச்சே .. அதை செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்..