பங்கு வர்த்தகத்தில் பெண்களும் ஈடுபடலாம்
காரைக்குடியில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாகப் பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் திருமதி முத்துசபாரெத்தினம் அவர்களிடம் பெண்கள் அதிகம் ஈடுபடாத இந்தத் துறையில் அவருக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது என விசாரித்தபோது அவர்,
“எனது பெயர் முத்துக் கருப்பாயி சபாரெத்தினம். எனக்கு இப்போது எண்பது வயதாகிறது. எனது கணவர் திரு. சபாரெத்தினம் அவர்கள் ஐசிஐசிஐ வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எங்களுக்கு நான்கு குழந்தைகள். பிள்ளைங்களுக்கெல்லாம் கல்யாணமாகி குடும்பமாக்கி வச்சபிறகு செடிகொடி மரம் வளத்தேன். (செடிகொடி நம்மளோட இருந்து பாய்ச்சின தண்ணிக்கும் போட்ட உரத்துக்கும் நல்ல பலன் தருது). (எங்க கல்யாணம் முடிஞ்சு 6 வருசத்தில மாமியார் 2 பையன்கள வச்சிட்டு சிவனடி சேர்நதுவிட்டார்கள். அவர்களும் எங்க பிள்ளைகளோட வளந்து பேரன்பேத்தி பார்ததுவிட்டார்கள்.)



