எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சேரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

யுத்தம் செய் சேரன்

 யுத்தம் செய் சேரன்


”நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே””,”மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ”, “இருவிழியோ இறகடிக்கும் இமைகளிலே வெடி வெடிக்கும்” இந்தப் பாடல்களை முணுமுணுக்காதவர் இருக்க முடியாது. “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே” என்ற தன்னம்பிக்கைப் பாடல்கள் இவர் படங்களில் சிறந்த அம்சம்.

முதலில் இயக்குநராக ஆகி அதன் பின் நடிகரானவர்களில் இவரும் ஒருவர். வெள்ளலூரின் சலூனில் முடிவெட்டியபின் அப்போதைய இளைஞர்களின் ரோல்மாடல் நடிகரான கமலைப் போலத் தலையை வாரி வாரிச் சீவிக் கண்ணாடியில் பார்த்து ரசித்ததையும், பதின்பருவத்தில் கண்ட மேலூரின் இளம்பெண்களை ஏதென்ஸ் நகரத்துத் தேவதைகள் போல் உலா வருவார்கள் எனச் சிலாகித்தும், முறைப்பெண்ணான செல்வராணியைச் சந்திக்க ஒரு கூடை மல்லிகைப்பூவை வாங்கிச் சென்றதையும் விகடனில் வெளியான இவரின் கட்டுரைகள் அழகாகச் சித்தரித்தன.

Related Posts Plugin for WordPress, Blogger...