எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
காப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

காப்பு. (சிறுகதை)

காப்பு.
றுதியாய் முன்கை தன்னை உமைஇள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மால்மருகன் காக்க”
”தேவானை அடி தேவானை.. ” இரண்டாங்கட்டிலிருந்து ஆத்தா கூப்பிடுவது தெரியாமல் வளவுப் பூசைவீட்டில் குளித்துமுழுகித் தலையைச் சுற்றிய துணியோடு காக்கச்சொல்லி முருகனை அழைத்துக் கொண்டிருந்தாள் தெய்வானை. இவ்வரிகளைப் பாடும்போது புறஉலகம் மறந்து சண்முகத்தின் வலிமையான இருகைகள் அவள் விரல்களைப் பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்று நின்றதே கண்ணுக்குள் இனிமையாய் முட்டி நின்றது.
”அட இருஞ்சே. புள்ள சம்முகக் கவசம் சொல்லிக்கிட்டு இருக்கு. முடிச்சிப்புட்டு வரும். அப்பிடி என்ன அவசரம் ஒனக்கு.” என அப்பச்சி ஆத்தாளைக் கடிந்து கொண்டார்கள்.
”கார்த்தியலுக்குக் குன்னக்குடிக்கு வடிக்கப் போகோணும். நேரமாச்சு. ஆளும் பேரும் வந்திருவாக. அங்கன சமையக்காரவுகளும் காத்திருப்பாக. வெள்ளனக் கெளம்புனாத்தான தாவல. ”