எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 நவம்பர், 2016

பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

481.* பெண்பிள்ளை புஷ்பவதி ( பூப்பெய்துதல் , பெரிய பெண்ணாக ஆதல் ) ஆனால் பேரனுண்டா அல்லது பேரன் பிறந்திருக்கிறானே எனக் கேட்பார்கள். ஏனெனில் சமைதல் என்பது  பெண் தனது குழந்தையை ( அம்மா அப்பாவுக்கு ஒரு பேரனை)ச் சுமக்கும் அளவு உடல் பக்குவம் அடைந்திருக்கிறாள் என்பதைச் சொல்லவே இவ்வாறு குறிக்கப்பட்டது. மங்கள நீராட்டு என்று ஏதும் செய்ய மாட்டார்கள் .

சமைந்தது தெரிந்ததும் எண்ணெய் சீகைக்காய் தேய்த்துத் தலை குளிக்க வைத்து கோலமிட்ட இடத்தில் தடுக்குப் போட்டு அமரவைத்து கீரை விதை கொடுத்து தண்ணீரோடு விழுங்கச் சொல்வார்கள்.தலை வாழை இலையில் பருப்பு மசித்துப் பாயாசத்தோடு சாப்பாடு போடுவார்கள்.

ஆனால் பதினாறு நாள் தினமும் அதிகாலையில் பச்சை முட்டை, அதே அளவு நல்லெண்ணெய், குடிக்கச் சொல்வார்கள்.  ( பாசிப்பருப்பு +பச்சரிசி +கருப்பட்டி, வெல்லம்+ நல்லெண்ணெய்+ நெய்யில் செய்த ) கும்மாயம்,  தினம் ஒரு பலகாரம் செய்து கொடுப்பார்கள். இடுப்பு பலம் பெற எண்ணெய்க் குளியல் உண்டு.  கீரை, நெய், காய்கறி , பயறு வகை, காய்கறி/அசைவ சூப்பிகள், அசைவம் சார்ந்த சத்துள்ள உணவு வகைகள் கொடுக்கப்படும்.

அதன் பின் 486,*மிட்டாய்த்தட்டு/சடங்குத்தட்டு வைத்தல் என ஒன்று வைத்து உறவினர் பங்காளிகளை அழைப்பார்கள். வீட்டில் சமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதலில் 487.*குங்குமம் சந்தனம் அடங்கிய ஸ்டாண்டில் கண்ணாடி பதித்த வெள்ளித் தட்டு ஒன்று இருக்கும். சடங்கு கேட்க வந்தவர்கள் சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்வார்கள்.

அதன் பின் ஆறு அல்லது நான்கு தொன்னைகள் கொண்ட வெள்ளி மிட்டாய் ஸ்டாண்டில் பிஸ்கட்கள், வேஃபர்ஸ் , வெளிநாட்டு சாக்லெட்டுகள், தேங்காய் மிட்டாய், கல்கண்டு, இன்னபிற இனிப்புகள் இருக்கும், இவற்றையும் வந்தவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

அதன் பின் 488.*கலர்/பனீர் லெமன் சோடா/காளிமார்க் பானம்/ரசனா/டாங்க்/ஃப்ரூட்டி/ஆப்பி/இன்னபிற கூல்ட்ரிங்க்/காஃபி/டீ இன்னபிற பானங்கள் அருந்தி விட்டு வெள்ளி வெற்றிலைத் தட்டில் வைக்கப்பட்டிருக்கும் வெற்றிலை பாக்கைப் போட்டுக் கொள்வார்கள். 

அவ மக 489.*சமைஞ்சிட்டாளா இல்லாட்டி பேத்தி சமைஞ்சிட்டாளா என்று பேச்சு வழக்கில் கேட்பதுண்டு. வீட்டுக்கு வருபவர்கள் 490.*பேரனுண்டா அல்லது பேரன் பிறந்திருக்கிறானே எனக் கேட்பார்கள்.

சடங்கு கழித்தல் :- பதினாறாம் நாள் சடங்கு கழிப்பார்கள்.நடுவீட்டுக் கோலமிட்ட இடத்தில் தடுக்குப் போட்டுப் பெண்ணை நிற்கவைத்து 482 *நொச்சி இலையில் சுட்ட அடையைத் தலை, தோள்பட்டை, மடித்துக்கூட்டிய முழங்கை, பாதங்கள் ஆகிய ஏழு இடங்களில் வைத்து வேப்பந்தழையால் அல்லது குச்சியால் தட்டி அத்தை சடங்கு கழிப்பார்கள். அன்றைக்கு 483.*சடங்குக்கு 484.*பங்காளிகள்,  485.* தாயாதிகள்- தாயபிள்ளைகளுக்கு சடங்குக்கு வடிப்பார்கள். சைவ, அசைவப் பந்திகள் தனித்தனியாக இருக்கும்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அருகிவரும் சீர் செனத்தி முறைகளை ஆவணப்படுத்தவே இவற்றை உறவினர் இல்லத் திருமணங்களிலும் சடங்கு இல்லங்களிலும் படம் பிடித்தேன்.

குழந்தை பிறந்தால், பேத்தி சமைந்தால், திருமணத்தின் போது பெண்ணுக்கு,மாமியாருக்கு, மாப்பிள்ளைக்கு என சாமான்கள் பரப்புவது வழக்கம். சாமான்களை அடுக்கி வைப்பதை 491*சாமான் பரப்புதல் என்று சொல்வார்கள். அவற்றில் சில இங்கே உங்கள் பார்வைக்கு.
ஒரு உறவினரின் பேத்தி சமைந்தபோது எடுத்தது. நகைகள், புடவை, வெள்ளிச் சாமான்கள், பிள்ளையார்.
$93*முறைக்குக் கொடுக்கும் பழங்கள்.
இது ஒரு திருமணத்தில் 493.*பெண்ணுக்குப் பரப்பிய சாமான்கள்.


அதே திருமணத்தில் 494.*மாமியாருக்குக் கொடுத்த சாமான்கள்.
பெரும்பணக்கார இல்லத் திருமணச் சீர்.இதில் இரண்டு வேவுக் கடகாம்கள். கம்போஸா தாம்பாளம், கம்போஸா மரவை, சாப்பிடும் தட்டுகள் ,கிண்ணிகள், பூக்கூடை, பன்னீர் செம்பு, சந்தனப் பேலா, குடம்  இன்னும் அநேக சாமான்கள் உள்ளன. முழுமையான செட்.
இது 495.*மாப்பிள்ளைக்குப் பரப்பிய சாமான்கள்.
திருமணத்துக்குக் கொடுத்த வெள்ளிச்சாமான்கள் கீழே. அதில் 496. குத்துவிளக்கு, 497. சின்னக் குத்துவிளக்கு, 498. ஜோடி விளக்குகள், 499. மாடவிளக்கு/காமாட்சி விளக்கு 500. ஸ்லேட்டு விளக்கு ( கோபுரம் போல் கைப்பிடியுடன் இருப்பது ), 501. குடம், 502. பால்பானைச் சொம்பு, 503. பூக்கூடை, 504. தேங்காய்ச்சட்டி 505. விளக்குச் சட்டி மூடியுடன் ( உருப்படி 2 ) 506. படி, 507. மாவிளக்குச் சட்டி 508. டம்ளர்,( போகணி ) 509. சாப்பிடும் தட்டு கிண்ணியுடன் ( உருப்படி 2 ) , 510. சடங்குத் தட்டு - ஏழு கிண்ணங்கள் பிள்ளையாருடன் ( உருப்படி 11), 511.மிட்டாய் ஸ்டாண்ட் மூடி போட்டுக் கிண்ணத்துடன் உருப்படி 6 ), 512. வெள்ளி பிடித்த சங்கு, 513. விபூதித் தட்டு, 514.. குழவி, 515. கத்திரிக்காய். 516. மாடவிளக்கு ( உருப்படி 2 ), 517. உலக்கைப் பூண் 2, 518. சந்தனப் பேலா, 519. குங்குமச்சிமிழ்,520. கிலுக்கி,  & பரப்பி இருக்கும் இரத்தினக் கம்பளம்.
இதே திருமணத்தில் பெண்ணுக்கு வைத்த சாமான் 521. வெள்ளி வேவுக்கடகாம், 522.காமதேனு, குத்து விளக்கு, தட்டு, சட்டி, சாப்பிடும் தட்டு ,கிண்ணி 523. வைர நெக்லஸ்,வைரத்தோடு.
524. சூட்கேஸுகள், ட்ராவல்பேகுகள் , செருப்பு, ஹாண்ட்பேகுகள், அலங்கார, வாசனைச் சாமான்கள்.
525. பட்டுப் புடவைகள்
* பங்காளிகள்  - தந்தை வழிச் சொந்தங்கள்
*தாயாதிகள்  - தாய் வழிச் சொந்தங்கள்
*மாமக்காரர்கள் -தாயின் உடன்பிறந்த சகோதரர்கள்.


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

10 கருத்துகள்:

  1. பார்த்து அசந்துபோனேன் !

    பரப்பிய சாமான் எல்லாமே சும்மா ஜொலிக்குது !!

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. VERY, VERY INFORMATIVE.WITH BEAUTIFUL PHOTOS ON CHETTIAR COMMUNITIES AUSPICICIOUS FUNCTIONS AND PRACTICES SUCH AS PERAN UNDA (?WHEN YOUNG GIRL ATTAINS AGE. DETAILED REPORT ON AUSPICIOUS OCCASIOND PERTAINING TO NAGARTHAR COMMUNITY. IT WILL BEBA GREAT INTEREST BOTH TO INDIAN AND FOREIGN TOURISTS, WHO VISIT CHETTINAD . SHOULD IT BE COMPILED IN A BOOK FORM IN ENGLISH .

    பதிலளிநீக்கு
  3. //தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அருகிவரும் சீர் செனத்தி முறைகளை ஆவணப்படுத்தவே//

    ரொம்ப முக்கியமான விஷயம் தேனக்கா. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. நன்றி உஷா ஸ்ரீகுமார்

    நன்றி சந்தர்.பரம்பரைச் சொத்தை சீஸ் பண்ணலையாமே :)

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி விஜிகே சார்

    நன்றி முருகப்பன்

    நன்றிடா தென்றல்.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. 481.பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே. Congratulations to the Author. Nagarathar tradition is well documented with photos.This would be a "go to place" for me and younger generations to know more about Chettiar heritage.
    பகிர்வுக்கு நன்றி.
    Warm Wishes,
    Nadaraja Chidambaram

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...