எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 25 ஜூலை, 2015

ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களும் பகிர்வுகளும் :)

பாராட்டும் வார்த்தைகள் நம்முள் உற்சாகத்தைப் பிறப்பிக்கின்றன. அதிலும் நாம் ஒரு கட்டுரை சிறப்பானதாகக் கருதும்போது அதற்குக் கிடைக்கக் கூடிய பின்னூட்டங்களை ஊன்றிக் கவனிக்கிறோம். நாம் சொல்லவந்ததை சரியாக யார் கிரஹித்திருக்கிறார்கள் என்று. அவ்வாறு நம் எண்ணப் போக்கோடு இன்னொருவரின் சிந்தனையும் ஒத்துப் போகும்போது மகிழ்வுண்டாகிறது.

மேலும் சில சமயம் நம்முடைய நல்ல குணங்கள் என்று (!) நாம் நினைத்துக் கொண்டிருப்பதையும் யாராவது சிலாகித்தால்  நம் மூளையெனும் பொன்னேட்டில் பொறிக்கப்பட்டு மறக்கவியலா கல்வெட்டாகிறது. அப்படி மகிழ்வித்த சில ஊக்கமூட்டும் பின்னூட்டங்களை இங்கே பகிர்ந்துள்ளேன் :)




Pitchaipandiyan Kalimuthu ·

அட டேபிரமாதம்
என்ன இது காதல் அது இன்னு வேறுபதிவிற்கு செல்லநினைத்தபோது ஒருவரது கமண்டை படித்து தங்களது பதிவபார்த்து சிறிதுதயக்கத்துடன் இவரோ பிறவிப் பெண்கவிஞராயிற்றேன்னு படித்தால் அசந்தே போயிட்டேன். பஞ்சாமிருதம் போலெல்லாம் கலந்து படைத்துவிட்டீர்களே ரோமாபுரியிலாரம்பித்து சந்திரபாபு அவர்கள் பாட்டு, நண்பர்மகனின் நிஜக்காதலகதை, alisa dey பாடல், Romeo Juliet, cleopatra ,etc., வசந்தமாளிகை, ஒருதலைராகம், பாரதி, பாரதிதாசன் அவர்கள், அகநானூறு, குறுந்தொகை, மற்றும் திரைஇசைப்பாடலில் முக்கியமாக உள்ளம் என்ற கோவிலிலே தெய்வம் வேண்டும், மற்றும் Morris Albertன்பாடலையும் அதனது அருமையையும் சொல்லிமுத்தாய்பாக உண்மையானஅன்பு கடவுளுக்கு நிகரானது என்று முடித்திருக்கிறீர்கள் ஆமாம் உண்மைதான் இப்படி தமிழ்புலமையுடன் ஆங்கிலப்பாடல்களையும் ரசிக்கும் இந்தவிதம் என்னைப்போன்று தங்களது ஆற்றலைக்கண்டு வியப்போரில் நானும் ஒருவன் நன்றி.

# இது ஷெனாய் நகர் டைம்ஸில் வெளியான என்னுடைய காதல் காதல் காதல் என்ற கட்டுரை பற்றிய  பிச்சைப்பாண்டியன் காளிமுத்து அவர்களின் பின்னூட்டம். மிக்க நன்றி சார் !.

**********************************************


feeling so awesome dear Ezhil Arul love you and hugs EZHIL ARUL :)


////நட்பு எப்படி அரும்புகிறது..அது எப்படி வளர்கிறது . ஒருவரை நமக்கு ஏன் பிடிக்கிறது.. என்பதெல்லாம் சில நேரங்களில் புரிவதில்லை. நாம் நேசிக்கிறோம் என்பதைவிட நாம் நேசிக்கப்படுகிறோம் என்பது பெரிய மகிழ்வு. அதிலும் நாம் நேசிப்பவர்களால் நேசிக்கப்படுகிறோம் என்பது மிகப் பெரிய கொண்டாட்டமே. அந்தக் கொண்டாட்டத்தை பகிர்ந்து கொள்ள நினைப்பேன் ஆனால் வார்த்தைகள் கோர்க்க முயன்று தோற்றுப் போவேன். ஆம் தேனம்மையின் எழுத்துக்களை வாசிக்கும் வாசகியாக இருந்தேன் வெகுகாலமாய். வாசகியாய் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே. இங்கு நட்பான பிறகும் பதிவில் மட்டுமே என் கருத்துப்பரிமாற்றம். மனதுக்குள் தோன்றும் பேசுவோமா என்று. ஆனால் ஏனோ எந்த தோழிக்கும் நானாய்ப் பேசியதில்லை. இடையூறாய் நினைப்பார்களோ எனத் தயக்கம். கண்டிப்பாய் வலைப்பதிவர்கள் சந்திப்பில் எப்போதாவது சந்திப்போம் அப்போது பேசலாம் என நினைத்துக் கொள்வேன். எனக்குள்ளாக நட்பு வளர்த்திக் கொண்டிருந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக குங்குமம் ஸ்டார் தோழியில் பிடித்த தோழிகளின் லிஸ்டில் என் பெயரும் இருக்க மனதில் சந்தோஷ சலனம். என்னால் மட்டுமே நேசிக்கப்பட்ட தோழி அவளும் என்னை நேசித்திருக்கிறாள் அவள் மனதில் என் பெயரும் தோன்றியிருக்கிறது என்று நினைத்த நிமிடம் என்னால் என்ன சொல்லவென்றே தெரியவில்லை. பதிவில் கூட ஒரு வாசகியாய் பதிலிட்டு வந்தேன். ஆனாலும் தேனம்மையுடன் பேசலாமா எனும் தயக்கம். அதற்கும் முற்றுப்புள்ளியாய் அவரே என்னுடன் பேசியது அளவிலா மகிழ்ச்சி . இன்னம் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கண்டிப்பாய் கிடைக்கும் என எண்ணுகிறேன். மிக்க அன்பு தோழி... ஒரு தயக்கம் அன்பைத் தெரிவிக்கக் கூட எவ்வளவு நாட்களை எடுத்துக் கொள்கிறது... நம் நட்பு வளரட்டும் தோழி... Thenammai Lakshmanan

http://honeylaksh.blogspot.in/2015/02/blog-post_20.html#more

சும்மா: குங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக.
சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
honeylaksh.blogspot.com///

*****************************************

Kanthimathi Pitchumani இது எப்படிதேனம்மை., நான்எப்படி இவ்வளவு நாட்கள் உங்களது நயம்படு எழுத்துக்களைப் படிக்காமல் போனேன்.! எனக்கு ஒரளவுகதை.கவிதை கட்டுரைகள்படித்து ரசிக்கும் தன்மை உண்டு.எவ்வாறு உங்கள் எழுத்துக்களை இனம் காணாது போனேன்.? உங்களது."பெண்களும் பக்தி என்னும்போதையும். விஸ்வருபம்வெனது பார்வையில்.,உலகளாவிய குடும்ப.,,,இன்ன சிலவற்றைப் படித்ததும்."அடடா இத்தனை நாளாய் இச்சுவையை இழந்தேனே என்று வருந்துகிறேன்.

***************************************************

 Shanmugam Rengaraj

காலத்தின் கட்டாயம்.

March 13 at 11:35am
தங்கள் நட்பு கிடைத்ததற்காக மிகவும் மகிழ்கிறேன்.
நல்லதை நினைப்போம், நல்லதை சொல்வோம்,
நல்லதை மட்டும் செய்வோம்...
நட்பை வளர்ப்போம்.
தப்பு செய்யாதே, கடவுள் உன்னை தண்டிப்பார்" என்று சொல்லுவதை விட, "நல்லது செய், கடவுள் உன்னை பாதுகாப்பார்". என்று அனைவருக்கும் சொல்லிக் கொடுங்கள்..
குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்
தங்கள் பதிவுகள் நூறாண்டுகாலம் தொடர வாழ்த்துக்கள்!.
இன்னும் நூறு ஆண்டு வாழ . . . .
2115 லும். பிறந்தநாள் கொண்டாடிட வாழ்த்துக்கள்…..
நானும் வந்து வாழ்த்துவேன் உங்கள் குடும்பத்தினரோடு!

**********************************************

Shantha Dutt Suuuuuuper Thenammai...! O my God...! What a personality you are! Multiple talents...beautiful and rich tastes = Thenammai!!! I am very proud to say you my friend! Idhai vida chollaththeriyavillai. Biramippil vaayadaiththuppoyirukkiren.!

Shantha Dutt Happy for sharing SAKTHI Award with you as well as FB!

**************************************************

Padma Mani எல்லாபத்திரிகைகளின் ராணிநம்மதேனு. சும்மாஉம்மா

****************************************************

Revathi Narasimhan எழில் அருள் எழுதிய பதிவைப் படித்துவிட்டு இங்கு வந்தேன் தேன். ஆனந்த அதிர்ச்சியாக என் பெயரும் இருப்பதைப் பார்த்தேன். வலைப்பதிவுகளைப் படிப்பதையே அவ்வப்போது தான் செய்கிறேன்.
இத்தனை விவரங்கள் உங்களைப் பற்றித் தெரிய வந்தது மிக மகிழ்ச்சி,. naல்லதோழியின் அடையாளம் பளிச்சிடுகிறது. இன்னும் வளர வாழ்த்துகள் மா தேன்.

**********************************************************

Lakshmann Chettiar Not like that.. I have been missing your poetry

**********************************************************

Ganapathi Appan எங்கும் பரவட்டும் தங்களின் திறமை'பெருமை!

********************************************************

Vetri Vidiyal Srinivasan One of the best content

*******************************************************

Lakshmann Chettiar Though it looks simple. the real meaning is very powerfuls from you. Really powerful.

*******************************************************

Ramachandran Usha நாம ஓரே ஒரு முறைத்தான் சந்தித்திருக்கிறோம். ஆனால் ஆண்டாண்டு சிநேகிதமாய் மனசுக்கு நெருங்கிய உணர்வு

கார்த்திக் சரவணன் நாம ஒரு தடவை தான் பேசியிருக்கிறோம்... அது அறிமுகம் அளவுக்குக்கூட இல்லையென்றாலும் இன்று வரை இந்த உணர்வு தோன்றுகிறது....

Sakuntala Kesavan ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர் வீழ்க்குமே! புரிதல் இருந்தால் மட்டுமே!

Bknagini Karuppasamy என்னை நினைச்சி எழுதுனதுதான தேனம்மை. smile emoticon ஆமால்ல.. எவ்வளவு பெரிய உண்மை.. புரிந்துணர்வு சந்திக்காத ஆழமான நட்பிற்கும் பொருந்தும்தான்...நீண்டநாள் பழக்கம் போன்ற ஒரு ஆத்ம ஈடுபாடு தேனம்மையிடம்.. smile emoticon நெகிழ்ச்சிடா!

******************************************************

Lakshmann Chettiar Good observation.. usually in our families we are all more attached towards Ayah and Appathal .. and I presume the reason may be this..

******************************************************

Siva Madurai முகநூல் இல்லை என்றால்.....
உங்கள் நட்புறவு கிடைத்திருக்காது......
உங்கள் அழகிய 'தமிழ் கவிதைகளை' நான் சுவாசிக்க முடியாமல் போயிருக்கும்.....

ஆதலால் முகநூலுக்கு கோடானுகோடி நன்றி.....!!


*********************************************************


Girija Raghavan



தேனம்மை லக்ஷ்மணனின் "அன்ன பட்சி" புத்தகத்தை இன்று புத்தகக் கண்காட்சியில் வெளியிடும் நல்ல வாய்ப்பு

கிடைத்தது . எழுத்தை மிகவும் நேசிக்கும் ,தமிழ் ஆற்றல் மிகுந்த பெண்மணி தேனம்மை லக்ஷ்மணன்.என் மேல் மிகுந்த பாசம் கொண்டவர். பட படவென்ற பேச்சு,இன்னும் இன்னும் என்னும் எழுத்தார்வம், பளிச்சென்ற தோற்றம், வெளியுலகத்தைப் பற்றிய பயம் ,எல்லாம் கலந்த கலவைதான் தேனம்மை.

நான் கண்டெடுத்த நாள் முதல் மேலே மேலே வளர்ந்து வரும் இவரின் புத்தகத்தை வெளியிட்டதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. என் மனமார்ந்த பாராட்டுதல்களும்,

வாழ்த்துக்களும் !!


************************************************************


Prakash Ramaswami



தேனம்மை லக்ஷ்மணன்:
இவரின் கவிதைகள்... அதுவும் அந்த குடவரைக்காற்று.. இன்னும் மனதிலே உலவிக்கொண்டு இருக்கிறது. இவரின் ஆதிக்கம் நிறைய மகளிர் பத்திரிக்கைகளிலும்... என்று என் தாயார் அனுபவித்து படித்து சொன்ன போது.. எனக்கு இவர் என் குடும்ப நண்பராகிப்போனார்.

**************************************************** 


Kanthimathi Pitchumani When I return to chennai I will get all yr books

Kanthimathi Pitchumani சென்னைக்கு சென்றவுடன் உங்கள் புத்தகங்களை உடனே வாங்கிப் படிக்கப் போகிறேன்.,


**********************************************************

 Kalyaan Kumar சண்டாளின்னு தான் முதல் வார்த்தை மனசுல வருது, படிச்ச உடனே.. ஆங்கிலத்தில் பிரதி எடுத்து வெளியிட்டிருந்தால் உன் உயரம் அளவிட கஷ்டமாயிருக்கும்.. பரவாயில்லை.. தாய்த் தமிழ் தான் வளர சில பேரை தேர்ந்தெடுக்கும்.. அதில் நீயும் ஒருத்தி! பேரு வச்ச ஆத்தாவுக்கு நன்றி சொல்லு தேனம்மா:$.. வாழ்க தமிழுடன்..


8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

வலைச்சர அறிமுகத்தில் கோபால் சார் எனக்களித்த சிறப்பிடமும் சக நண்பர் (பதிவர்)களின்  அன்புரையும் :)

 26. திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
வலைத்தளங்கள்:
 சும்மா
டைரிக்கிறுக்கல்கள்
THENU'S RECIPES
கோலங்கள்
CHUMMA!!!

சாதாரணப் பெண் அல்ல
சாதிக்கப்பிறந்தவர்
நம் ’ஹனி மேடம்’ !
இவரைப்பற்றி மேலும் அறிய
http://honeylaksh.blogspot.in/2013/07/10.html

சமீபத்தில் இவர் எழுதி வெளியிட்டுள்ள பிரபல நூல்கள்:
’அன்ன பட்சி’
”ங்கா”
’சாதனை அரசிகள்’

கதை, கவிதை, கட்டுரை, அனுபவம்,
ஆன்மிகம், கலை, கட்டடங்கள்
மட்டுமின்றி
பங்குச்சந்தை முதலீடுகள் உள்பட
இவர் எழுதாத தலைப்புகளோ,
பங்கேற்காத நிகழ்ச்சிகளோ,
இவரின் ஆக்கங்கள் இடம் பெறாத
பத்திரிகைகளோ, மின்னூல்களோ,
முகநூல் பொன்ற சமூக வலைத்தளங்களோ ஏதும்
இல்லவே இல்லை என நாம் அடித்துச்சொல்லலாம்.

நான் சமீபத்தில் படித்து வியந்தது இவரின்
http://honeylaksh.blogspot.in/2015/05/blog-post_25.html
கூண்டுக்கிளி


அனைத்திலும் ஆர்வமுள்ள
அதி அற்புதமான
திறமைசாலியாவார் !


’சாட்டர் டே ஜாலி கார்னர்’

என்ற தலைப்பினில்

பல்வேறு நபர்களை பேட்டி எடுத்து இவர்

வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.



 இதோ ஒருசில சாம்பிள் பேட்டிகள்

 காணத்தவறாதீர்கள்

http://honeylaksh.blogspot.in/2014/05/blog-post_10.html

http://honeylaksh.blogspot.in/2014/11/blog-post_8.html



கடந்த ஏழு ஆண்டுகளாக இவர் தன் வலைத்தளங்களில்

எழுதிக்குவித்துள்ள பதிவுகளின் மொத்த எண்ணிக்கை



 2000த்தை தொட்டுள்ளன. :)

http://honeylaksh.blogspot.in/


அனைவருடனும் நட்புடன் பழகுவதில்



தேனினும் இனிமையானவர் !


-oOo-



வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!

என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

{இது தேனம்மை அவர்கள் அடிக்கடி கூறிவரும் தேன்மொழி}






நிமிர்ந்த நடை +

நேர்கொண்ட பார்வை +

தெளிந்த அறிவு +

அசாத்ய துணிச்சல் +

ஆளுமை சக்தி +

அன்பான உள்ளம் =



 நம் ஹனி மேடம்


வாழ்க ! வளர்க !!


வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் - இணைப்புகள்:






நடன சபாபதி :-

 வியக்க வைக்கும் ஒரு சாதனை பெண்மணியை இன்றைய அறிமுகத்தில் பார்த்தது மகிழ்ச்சி!
மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன்Sat Jun 06, 08:10:00 AM

அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்! முக்கியமாய் உற்சாகமே உருவான, சுறுசுறுப்பிற்கு மறு பெயராய் விள‌ங்குகின்ற, தினம் ஒரு அர்த்தமுள்ள பதிவாய் எழுதித்தள்ளும் தேனம்மைக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!

Thulasidharan V ThillaiakathuSun Jun 07, 09:23:00 PM

இன்றைய அறிமுகங்கள் மூவரில் சகோதரி தேனம்மை மட்டுமெ நன்கு அறிமுகம். அவரது படைப்புகளை நாங்கள் வியந்து வாசிப்பதுண்டு. ஆல் ரவுண்டர்! மிக மிக அன்பானவர். உற்சாகமானவர். வெரி பாசிட்டிவானவர்.

RAVIJI RAVISun Jun 07, 07:48:00 PM

வாத்யாரே! வணக்கம்! வலிமையான மகளீரணிதான்! ஒருதடவை நாக்(கு) அவுட் ஆனது ஞாபகம் வருதே!! இதெல்லாம் உண்மை வலைத்தளம்! என்னுடைய வலையை யாராவது புடிச்சுத் த(ள்)ள(ணு)ம்! புதுச்சேரி அல்லவா? நான் சொல்லுறது 'புல்'லாப் புரியுதா?! விஜிகே வாத்தியார் புண்ணியத்துல என்னோட பரிசு பெற்ற விமர்சனங்களும் இன்னிக்கு அறிமுகம் ஆகியிருக்கு! நன்றி வாத்யாரே! 2000 இடுகைகள் அதுல ஒரு முட்டைய கட் பண்ணி ஆம்லெட் போட்ட மிச்சம் 200 கூட இன்னும் நான் தொடலயே! வல்லமை வாய்ந்த சகோதரி தேனம்மை அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்! என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்!!!

Jayanthi JayaSun Jun 07, 07:01:00 PM

6ம் நாள் அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இன்றைய அறிமுகத்தில் பளீர் சிரிப்புக்காரி தேனம்மையை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். ஏதோ ரொம்ப நாள் பழகியவரை சந்தித்தது போல் இருந்தது. பேருக்கேற்றபடி இனிமையானவர். என் மனம் கவர்ந்தவர். தேனின் சிரிப்பு போல் அவரது எழுத்துக்கள் எல்லாமே அருமை. அவரது வலைத் தளத்தில் இருந்து தெரிந்து தான் நான் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசும், கடிதம் எழுதும் போட்டியில் சிறப்புப் பரிசும் பெற்றேன்.

அருமையான அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் கோபு அண்ணா

Kalayarassy GSat Jun 06, 05:20:00 PM

இன்றைய அறிமுகங்களில் சாதனை அரசி தேனம்மையை நன்கறிவேன். அவருடைய அன்னபட்சி வாசித்து என் தளத்தில் ஒரு பதிவு போட்டேன். என் எழுத்துக்கு மதிப்பு கொடுத்து அதனைத் தம் முகநூலிலும் பதிந்தார். அற்புதமான கவிஞர்! அவருடைய மற்ற புத்தகங்களையும் வாங்க நினைத்திருக்கிறேன். பெண் பதிவர்களில் மிகப் பிரபலமானவராயிருந்தும் நேரமொதுக்கி என் தளத்துக்கு வந்து பின்னூட்டமிடுபவர். அவருடைய கூண்டுக்கிளி கதையை இன்று வாசித்துப் பின்னூட்டமிட்டு விட்டேன். நீங்கள் அறிமுகப்படுத்திய மற்ற இருவர் பற்றியும் இன்று தான் தெரிந்து கொண்டேன். உங்கள் வாசகர் பட்டாளத்தின் மூலம் வலைச்சரத்தில் மறுபடியும் பழைய கலகலப்பைக் கொண்டு வந்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்! தொடருங்கள்!


தமிழ் இளங்கோ :-

இன்றைய பெண் வலைப்பதிவர்களில், அதிகம் எழுதியவர், அதிகம் எழுதுபவர் யார் என்றால், சகோதரி தேனம்மை லெஷ்மணன் அவர்களைச் சொல்லலாம். அவரது ”THENU'S RECIPES” என்ற வலைத்தளம் தவிர மற்றைய அவரது வலைத்தளங்கலில் வரும் கட்டுரைகளைப் படித்து இருக்கிறேன்.
அவரைப் பற்றி நீங்கள் சொன்ன அத்தனை பாராட்டுக்களும் அவருக்கு தகும். மிகையன்று.

கீத மஞ்சரிSat Jun 06, 10:40:00 AM

இன்றைய பதிவர்களுள் ராம்வி அவர்கள் தவிர மற்றவர்கள் நானறிந்த மற்றும் தொடரும் பதிவர்களே... அனைவருக்கும் பாராட்டுகள். நான் எப்போதும் வியந்துபார்க்கும் பதிவர் சாதனையரசி தோழி தேனம்மை. அவரது பல்பரிமாண எழுத்தின் தீவிர ரசிகை நான். அவருக்கும் ஏனைய பதிவர்களுக்கும் தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.


S.P. Senthil KumarSat Jun 06, 07:33:00 AM

நான் ஒவ்வொரு முறையும் வியந்து பார்ப்பது தேனம்மை அவர்களைத்தான். எப்படி அவரால் எல்லா சப்ஜெக்டிலும் இவ்வளவு தகவல்களை கொடுக்க முடிகிறது என்று.. அவற்றை எழுதுவதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது? அதற்கான மூலங்களை எப்படி தேட முடிகிறது?


--அஹா மிக்க நன்றி செந்தில்சார். முன்பு பத்ரிகையில் சுதந்திர எழுத்தாளராகப் பணியாற்றியது ஒரு காரணம். மேலும் என் ஆசிரியை சுசீலாம்மா அவர்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது நானும் தொடர்ந்து செயல்பட  மென்மேலும் ஊக்கமளிக்கிறது. 


--அறிமுகப் படுத்தப்பட்ட சக பதிவர்களுக்கு வாழ்த்துகள். வாழ்த்திய அன்பு நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்பெருமை கிட்டச் செய்த மதிப்பிற்குரிய கோபால் சார் அவர்களுக்கு அன்பு நமஸ்காரங்கள். :)
 

---- அஹா எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா. தேனூறும் தமிழ் வாசிக்கும்போதே இனிக்கிறதே. நன்றி நன்றி நல்ல உள்ளங்களுக்கு நன்றி. உங்கள் பாராட்டுகளுக்கு முழுத்தகுதி உடையவளாக என்னை மாற்றிக்கொள்ள உழைக்கிறேன். அன்பும் நன்றியும். :)


9 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. அடடே... நான் சொன்னதையும் இங்க சுட்டிக்காட்டியிருக்கீங்களே!!!

    பதிலளிநீக்கு
  3. அட இப்பதான் பார்க்கறோம்...நம்ம பேரும் இருக்குது இங்க!!! சத்தியமா உங்களை நினைச்சு வியய்ப்பதுண்டு...எப்படி இப்படி தகவல் களஞ்சியம் மட்டுமல்ல, கவிதைக் களஞ்சியம், கட்டுரை, ரிசிப்பிஸ், கோலங்கள், கட்டுரைகள், புத்தக வெளியீடுகள், விழாக்களில் தலைமை, உரையாற்றுதல் என்று பல வெரைட்டியில் கலந்து கட்டி, பின்னி பெடலெடுக்கின்றீர்கள் என்று வியக்கின்றோம்...முக்கியமாக நேர மேலாண்மை...நாங்கள் இருவர் இருந்துமே ஒரு தளத்தில் எழுதுவதற்கு பல சமயங்களில் கஷ்டப்படுவதுண்டு....வாழ்த்துகள் சகோதரி! ...நாங்கள் வலை அன்பர்கள் எல்லோருமே உங்களை நினைத்துப் பெருமைப்படுகின்றோம்!

    பதிலளிநீக்கு
  4. நன்றி டிடி சகோ

    நன்றி rmn

    நன்றி கும்மாச்சி

    நன்றி கார்த்திக் சரவணன்

    அஹா ! மிக்க நன்றி துளசி சகோ :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...