எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

டைம்பாஸ்.. என்ன கொடுமை அகடவிகடா இது..

டைம்பாஸ்னா ஒரு சால்ட் பிஸ்கட் இல்லாட்டி  பஸ்ஸ்டாண்ட்ல விக்குற ஏதோ ஒரு குழந்தைகள் விளையாட்டு செட்டுன்னு நினைச்சிருப்பீங்க.. இது அக்மார்க் முத்திரையோட இருக்க ஒரு அழகான பத்ரிக்கையின் அஞ்சு ரூபா புத்தகம்.

ரயில்வே ஸ்டேஷன்ல படிக்க ஏதாவது புக் வாங்கலாம்னு போனா டைம்பாஸுன்னு போட்டு எனக்கு பிடிச்ச ஒரு பத்ரிக்கை பேரு போட்டுருந்துச்சு. ஆனா பாருங்க அட்டைப் படத்தைப் பார்த்தவுடனே கடுப்பாயிடுச்சு. காணும் பொங்கல்னா இதுதான்னு ஒரு படத்துக்கு கமெண்ட் போட்டு.

இந்த ஜாலி 1 ம் கேலி 15 ம் வந்திருக்கு. இந்த அக்குறும்பு நம்ம கண்ணுக்குப் படாமே போயிருக்கு. இதுல பாதிக்கு பாதி ஜூவியோட ராத்திரி ரவுண்டப் மாதிரி இருக்கு.


ஏதோ நல்ல சகவாசத்துகிட்டயும்  கொஞ்சம் கெட்ட பழக்கம் இருக்கமாதிரி இந்த புத்தகம் ஒரு பத்துப் பதினைஞ்சு நல்ல புத்தகம் வர இடத்துலேருந்து வருது. உள்ளபடியே இவள், குட்டி, விவசாயம், இஞ்சின், தெய்வீகம், ஜூவி, னு வர்ற இடத்துலேருந்து இப்படி ஒரு புக்கான்னு கொஞ்சம் அதிர்ச்சியாயிடுச்சு.

நிறைய புத்தகங்கள் சினிமா செய்திகளைப் போட்டு ரொப்புது. அதுனால இதிலேருந்தும் சினிமாவுக்காக இது போல. நிறைய செய்திகள் நல்லா இருந்தாலும்., ( ரங்கமணிக்கு வெளிநாட்டுல ஒரு கணவனும், மனைவியும் பார்ட்டிக்கு போயிட்டு வந்து என்ன நினைக்கிறாங்கன்னு போட்டது பிடிச்சிருந்துச்சு. ) . நிறைய சினிமா செய்திகளை தமாஷ் பாணியில போட்டுருக்காங்க.. ஆனா சிலது கமெண்ட்ஸும் சரி படமும் சரி நல்லா இல்ல.

வைகோ, அம்மா, நயந்தாரா, பேரரசு போன்றவர்கள் ஏன் இப்படி நடந்துக்கிறாங்கன்னு போட்டிருந்தது சிரிக்க வைச்சுது. ஆனா நடுப்பக்க ஸ்டில்ஸுக்காகட்டும், ஒரு ஆக்ட்ரஸ் ஸ்டோரியாகட்டும், ஆட்டமா, தேரோட்டமா ஆகட்டும், போயிட்டு போறாங்கன்னு பார்த்துட்டுஒரு புக்கைப் பார்த்துட்டு நகர முடியுது. ஆனா நாங்களும் ரௌடிதாம்லேய்ங்கிற பாணில பார், நடிகைகள் படத்தை அகட விகடா உன்னோட பத்ரிக்கைக் கிளையில பார்த்துட்டு நகர முடியல..

என்னோட எட்டு கவிதைகள் வந்திருக்கு . அதுக்கு நன்றி விகடா.. ஆனா அதுக்காக எனக்கு பிடிக்காதத பிடிக்கலைன்னும் சொல்ல உரிமை இருக்குன்னு நினைக்கிறேன்.

டிஸ்கி:- இது புத்தகத் திருவிழாவில் வலைப்பதிவர்கள் பற்றிய சமஸ் பதிவைப் பார்த்து பலகாலமாய் கோபமாய் இருந்து போட்ட பதிவல்ல.. அல்ல.. அல்ல.. :)


7 கருத்துகள்:

  1. நமக்கு தேவையானதை எடுத்துக்கொள்வோம் ! மற்றதை .....

    பதிலளிநீக்கு
  2. என்ன செய்ய, விலை குறையும்போது தரமும் குறையத்தானே செய்யும். நன்றி

    பதிலளிநீக்கு
  3. //ஜூவி, ரிப்போர்ட்டர்னு வர்ற இடத்துலேருந்து //
    ரிப்போர்ட்டர் குமுதம் வெளியீடு அல்லவா

    பதிலளிநீக்கு
  4. இன்னும் படிக்கவில்லை! இந்தப் பத்திரிகையை....

    பதிலளிநீக்கு
  5. நல்லவற்றை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  6. நன்றி மணி.. நல்ல கருத்து

    நன்றி டைரி

    நன்றி சேக்காளி திருத்திக் கொண்டேன்

    நன்றி வெங்கட்

    நன்றி மலர்

    பதிலளிநீக்கு
  7. விகடனின் வாசகியான நான் சிலர் டைம்பாஸை குப்பை என்றதும்... ஏற்றுக்கொள்ளமுடியவில்லை...இருந்தாலும் வாங்கிப் படித்து வருத்தப்படவும் விரும்பவில்லை..ஆனால் உங்கள் பதிவு அதனை உறுதி செய்கிறது.....

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...