எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 27 ஜூலை, 2012

குழுமங்களும் பக்கங்களும்..

கடிதங்கள் எழுதும் பழக்கம் கிட்டத்தட்ட பத்து வருடங்களாகக் குறைந்துவிட்டது.எல்லாம் வலை மூலமே. ஜி மெயில் யாஹு மற்றும் செல்போன் மூலம் மெசேஜ்.., தகவல் அனுப்புதல் மற்றும் , யாஹூ மெசஞ்சர்., ஜி டாக் தான் உடனடி செய்திப் பரிமாற்றத்துக்கு. அழைப்பிதழ்கள் கூட மின்னழைப்பிதழ்களாக அனுப்பப்படுகின்றன. வீட்டு அட்ரஸ் கேட்பதில்லை யாரும். கைபேசி எண் அல்லது மெயில் ஐடிதான்.

இந்த சூழலில் முதல் முதல் கம்ப்யூட்டரில் மெயில் அனுப்பத் துவங்கும்போது நாம் தனிப்பட்ட மெயில் அனுப்பத் துவங்குகிறோம். பின்னர் நம் ஐடியை யார் யாரோ சேர்த்து க்ரூப் மெயில்களாக அனுப்பும்போது கொஞ்சம் சிரமத்துக்கு ஆளாகிறோம்.
இதில் குடும்ப மெயில்., குழு மெயில் .,வேண்டாமல் வரும் ஸ்பாம் மெயில் எல்லாம் அடக்கம். குழுமம் பற்றிப் பேசும் போது குடும்பக் குழுமம்., இலக்கியக் குழுமம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் செயல்படும் குழுமம் என மூன்றாகப் பிரிக்கலாம். பக்கங்கள் எல்லாம் ஃபேஸ்புக் பக்கங்கள்தான். ஓரளவு தொந்தரவு இல்லாதவை.

பொழுது போகாத வெட்டி நேரங்களில் இந்த குழுமங்களின் பழைய மெயில்களைப் படிக்கலாம். இது பொது டைரி போன்றது. குடும்ப மெயில்களில் பெரும்பாலும் பிறந்தநாள்., திருமணநாள் மற்றும் வெளிநாடு ., உள்நாடுகளில் இருப்போர் தாங்கள் சென்று வந்த ஊர்களின் ., இடங்களின் , விழாக்களின் ,நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும். இதில் கமெண்ட்ஸும் போடலாம். இது பொதுவாக பிகாசா வெப் ஆல்பங்களில் இணைக்கப்பட்டிருக்கும். இதில் பழைய சண்டைகள்., மனஸ்தாபங்களை பார்க்கலாம். எல்லாவற்றிலும் பட்டும் படாமல் நம் கமெண்டை போடுவது அவசியம். யார் மனமும் புண்படாமல்.

அந்தக் குழுமத்திலும் சரி. இலக்கியக் குழுமத்திலும் சரி. ”பேசத் தெரிஞ்சுக்கணும்” . இந்த இரு குழுமங்களிலும் பெரியய்யா இருப்பார். சின்னய்யா இருப்பார்., சித்தப்பா., மாமா., மாமி என எல்டர்கள் குரூப்பும், பொடிப்பசங்களும் கலந்து கட்டி இருப்பார்கள். பெரியவர்களைப் புண்படுத்தக் கூடாது, தெரியாமல் கூட கிண்டலடித்து விடக்கூடாது என கமெண்ட் போடும்போதே., சின்னப் பசங்க நம்மைக் காயப்படுத்துவதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். எல்லாம் ஜாலி., ஜோவியல் என்பார்கள்., நாம் திரும்ப கமெண்ட் போட்டால் 4 நாளைக்கு குரூப்பில் சத்தமோ பதிலோ இருக்காது. ”என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது” என தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் ஒரு நிகழ்ச்சியைப் போடும் போது அதில் அவர்களின் குழந்தைகள் இருந்தால் எதிர்பார்ட்டியாக அந்த வீட்டுக்கு வந்த மருமகள்கள் அந்த குருப்பில் இருந்தால் .,”ஓஒஹ் சூப்பர்., ச்சோ ஸ்வீட். , க்யூட் கன்னுக்குட்டி., அழகு ” என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ”அடடா. ஏன் இவங்க இருவரும் சண்டை போடுகிறார்கள். கொஞ்சம் மாத்துங்க .” அட்வைஸி விட்டோமோ நாம் குடும்ப பொது எதிரியாகிவிடுவோம்.

இலக்கியக் குழுமங்களில் எல்லா வலைத்தளவாசிகள் பற்றியும்., நவீன கவிதைகள் பற்றியும்., அவர்கள் ஒரு அளவுகோலால் அளந்து கொண்டிருப்பார்கள். இந்தக் குழுமங்களில் மிகப் பிரபலங்களைப் பார்த்ததும் நமக்கு பிரமிப்பும் மிரட்சியும் ஏற்பட்டு கொஞ்ச நாளைக்கு அந்த மெயில்களில் குளறிக் கொண்டிருப்போம். ஒரு வாசக மனோபாவத்துடன்., வெட்டி பந்தா எதும் செய்யத் தெரியாமல்., ”படித்ததில் பிடித்தது” ரேஞ்சுக்கு நம்மை பாதித்தவைகளை நம் கண்ணோட்டத்தில் நம் வாழ்வோடு தொடர்புடையதாய் எழுதிக் கொண்டிருப்போம். அதில் இருப்பவர்கள் எல்லாம் ஜாம்பவான் ஜாம்பவதிகள் போல நடந்து கொள்வார்கள், மேலும் டீச்சர் இல்லதபோது பேசும் பிள்ளைகளை காது திருகி தண்டிக்கும் சட்டாம் பிள்ளைகள் மனோபாவத்துடன் நம்மை .,”பெஞ்சு மேலே ஏறு, பேசாதே., வாயை மூடு., எழுதத் தெரிந்தால் எழுது., எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு எழுது.,” என்ற ரேஞ்சில் அதட்டுவார்கள். திருந்த சான்ஸ் (!) கொடுப்பார்கள்., திருந்தாவிட்டால்., அந்தக் குழுமத்திலிருந்து நம்மை தூக்கிவிடுவதாக வேறு இன்னொரு நண்பர் மூலம் மிரட்டுவார்கள்.! அந்த இலக்கியக் குழுமத்திலிருந்து நாமும் உருப்படியாக ஏதும் கற்றுக் கொண்டிருக்கமாட்டோம். அவர்களின் வெட்டிப் பெருமைகளையும்., நக்கல்களையும்., நையாண்டிகளையும்., மெயிலைத் திறந்தாலே .,”ஐயோ ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. ஆரம்பிச்சுட்டாய்ங்க..” என்ற எரிச்சலோடு படிக்க வேண்டி வரும்.

இதில் உண்மையிலேயே சில பெரிய எழுத்தாளர்கள் மிக அருமையாக எழுதுவார்கள். எழுதியதைப் பகிர்வார்கள். அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். பொது மெயிலாக இருப்பதால் நாம் பதில் கமெண்ட் போட்டாலும் ஒரு கர்ட்டஸி்க்காகக் கூட பதிலுக்கு ,”நன்றி” என சொல்ல மாட்டார்கள். அப்படிச் சொன்னவர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். வெகு சிலரே மிக அருமையாக எழுதவும்., அதற்கு நம்முடைய பதிலை ரெசிப்ப்ரோகேட் செய்யவும் தெரிந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் ஒரு ”ஹாட்ஸ் ஆஃப்.”

பொதுவாக குடும்ப மெயில் குழுமங்கள் ., இலக்கிய மெயில் குழுமங்கள் எல்லாவற்றையும் விட்டு வெளி வருவது நல்லது. நம் படைப்புத் திறமைக்கு., நம் எழுத்துக்களுக்கு., நம் மன நிம்மதிக்கு. இல்லாவிட்டால்., கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகு சொரிந்த கதையாகிவிடும்., அதிலிருந்து நாம் வெளி வரும்போது. ”விட்டால் போதும்..”.. ”சாமி. என்னை விடுவியுங்கள்.. உங்கள் அபத்தங்களிலிருந்து” என கூவ வேண்டி வரும். அல்லது நம் குழு விரோதப் போக்கு (!) கமெண்ட்ஸ் மற்றும் நடவடிக்கைகளைக் கண்டித்து அவர்களே நம்மை கேட்காமல் ( யாரைக் கேட்டுச் சேர்த்தார்கள் என தெரியாதது போலவே ) வெளியேற்றுவார்கள்.

நம்முடைய குடும்ப குழுமங்களாகட்டும்., இலக்கியக் குழுமங்களாகட்டும்., சகிப்புத்தன்மை அதிகம் உள்ளவரே நீடித்து நிற்கக்கூடிய பெருமை உடையது. எதிர்க்கருத்து உள்ளவர்களை., ஏன் எதிர்த்துப் பேசினாய் என்ற ரேச்ஞ்சில் ட்ரீட் செய்வார்கள். கொஞ்சநாள் இந்தத் தொல்லைகள் நம்மைத் தொடராத போதுதான் தெரியும்., நம்முடைய ஐடி அதிர்ஷ்டவசமாக ஹாக் ஆகிவிட்டது அல்லது அந்த நரகத்திலிருந்து நாம் தப்பி விட்டோம் ., நம் மன நிம்மதியை மீட்டு விட்டோம் என்பது.

எனவே யாராவது குழுமத்துக்குள்ளே இணைக்கிறேன். உன்னை நீ செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என வந்தால் உறுதியாக நோ சொல்லி விடுங்கள்., குழும அரசியலுக்குள் எல்லாம் மாட்டிக் கொள்ளாமல். அப்புறம் தலை தப்பியது தம்பிரான் புண்ணியமாகிவிடும். இந்த மாதிரி வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களால்தான் அவர்கள் புத்தகங்களே விரும்பிப் படிக்கப்படுகின்றன என்ற எண்ணம் சிறிதுமின்றி.,” நான் சொல்வேன் ., நீ கேள். ”என்ற எதேச்சதிகாரக் குழுமங்களிடமிருந்து விடை பெறுங்கள்., விலகியே இருங்கள்.

உறவினர்களை நேரிலேயே சந்தியுங்கள் அல்லது ஃபோன் மூலமே மட்டும் பேசி விடுங்கள். இந்தக் குழுமத்தில் நட்பு வட்டத்தில் இருப்பவரிடமும் நேரிடையான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஊருடன் ஒத்து வாழத்தான் வேண்டும். ஆனால் தனிமையில் அமர்ந்து இந்த மெயில் வன்முறைகளில் சிக்கி உரிமைகளும் நேரமும் இழந்து புலம்ப அல்ல..

அடுத்து ஃபேஸ்புக் குழுமங்கள்., பக்கங்கள் கொஞ்சம் தொல்லைதான். ஆனால் நாம் அவற்றை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என தேர்ந்தெடுக்கலாம். நோட்டிஃபிகேஷன்., செட்டிங்க்ஸ் போன்றவற்றில் நாம் உருவாக்கும் குழுவிலும்., நம்மை இணைக்கும் குழுவிலும் பிடித்தால் இருக்கலாம்., அல்லது விலகிக் கொள்ளலாம். எனவே க்ளோஸ்டு குருப்புகளில் தேவையற்று இணைந்து உங்கள் நிம்மதியும்., நேரமும் பறிபோகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2011,நவம்பர் முதல் வார உயிரோசையில் வெளியானது.

7 கருத்துகள்:

  1. /// இந்த மாதிரி வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களால்தான் அவர்கள் புத்தகங்களே விரும்பிப் படிக்கப்படுகின்றன என்ற எண்ணம் சிறிதுமின்றி.,” நான் சொல்வேன் ., நீ கேள். ”என்ற எதேச்சதிகாரக் குழுமங்களிடமிருந்து விடை பெறுங்கள்., விலகியே இருங்கள். ///

    உண்மை தான்...
    நன்றி....

    பதிலளிநீக்கு
  2. Neenga ippa nadakuratha exacta sollinga

    Karunji

    பதிலளிநீக்கு
  3. இதைத்தான் எங்க ஆத்தா மயிலாடி, மயிலாடிங்கிறாங்களோ!

    பதிலளிநீக்கு
  4. hi there honeylaksh.blogspot.com blogger found your site via search engine but it was hard to find and I see you could have more visitors because there are not so many comments yet. I have found site which offer to dramatically increase traffic to your site http://bestwebtrafficservice.com they claim they managed to get close to 1000 visitors/day using their services you could also get lot more targeted traffic from search engines as you have now. I used their services and got significantly more visitors to my site. Hope this helps :) They offer best services to increase website traffic Take care. Mike

    பதிலளிநீக்கு
  5. நன்றி தனபால்

    நன்றி கவி அழகன்

    நன்றி கருண் ஜி

    நன்றி குமார்

    ஆம் ராமு மாமா..

    நன்றி மைக்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...