கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 2
இதில் சப்தமாதர்கள், திக்குபாலர்கள், கணங்கள், சக்கரவர்த்திகள், மகாராஜாக்கள், முக்தி நகர்கள் , நட்சத்திரங்கள், தியாஜ்ஜியம், 6 முருக பிரதானஸ்தலங்கள் ஆகியன பற்றி எழுதப்பட்டுள்ளன.
கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 2
இதில் சப்தமாதர்கள், திக்குபாலர்கள், கணங்கள், சக்கரவர்த்திகள், மகாராஜாக்கள், முக்தி நகர்கள் , நட்சத்திரங்கள், தியாஜ்ஜியம், 6 முருக பிரதானஸ்தலங்கள் ஆகியன பற்றி எழுதப்பட்டுள்ளன.
மரபின் நீட்சியாக..
பெண்களும் மரபுகளும்
இன்றைக்கும் பெண் வீரமிக்க வளாக, விவேகம் நிறைந்தவளாக, நிர்வாகத்தினைச் செம்மையுற நடத்தும் ஆற்றல் பெற்றவளாக, பாசமும் அக்கறையும் நிறைந்தவளாக, விருந்தோம்பலில் இணையற்றவளாகத் திகழ்கிறாள். இவையெல்லாம் பண்டைய மரபின் நீட்சியாகும்.
இதிகாச புராணங்களிலும் சரி, வரலாற்றிலும் சரி, இலக்கியத்திலும் சரி பெண் என்பவள் எப்படி வரையறுக்கப்பட்டிருக்கிறாள் எனப் பார்தோமானால் வீரமான, வெற்றிகொள்ளமுடியாத மங்கையாகவே அவள் உருவாக்கப்பட்டிருக்கிறாள். வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக உருக்கொண்டபோது காளியிலிருந்து காத்தாயிவரை ஆயுதம் சுமந்து அக்கிரமங்களை ஒழித்தவளாகவே மக்கள் சமூகத்துக்காக அவள் படைக்கப்பட்டிருக்கிறாள். பெரும்பகுதி ஆண் தெய்வங்கள் கோலோச்சினாலும் உலக அளவிலும் பெண் தெய்வ வழிபாடுகள் உண்டு.
விகடனில் எனது கவிதை. !
”நீங்கள் வாசித்ததில் உங்கள் நினைவில் நிற்கும் கவிதை நான்கு வரி சொல்லுங்களேன்” எனக் கேள்வி கேட்டிருக்கிறார்கள் விகடனில்..
அதற்கு சரவண்கவி என்பவர் எனது கவிதை ஒன்றைக் குறிப்பிட்டு இருக்கிறார். ஞாயிறு அன்று காலையில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ் உயராய்வு மையத்தின் தலைவர் திருமிகு. செந்தமிழ்ப் பாவை அம்மா அவர்கள் இதை விகடனில் படித்துவிட்டு உடனே கைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். வாட்ஸப்பிலும் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்திருந்தார்கள். சந்தோஷத்தில் ஒன்றுமே புரியவில்லை. மனுஷ்யபுத்திரன், கனிமொழி,புவியரசு, அப்துல் ரஹ்மான் ஆகியோரின் கவிதைகளோடு என் கவிதையும் !!! மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் அம்மா.
இதுதான் அக்கவிதை.
”எல்லாருக்குமான வீடு
டிஸ்கி:- இந்தக் கவிதை 22.6.2011 ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. நன்றி விகடன்.:)
முன்பே சொல்வனத்தில் வெளியானதுதான்.
நன்றியும் அன்பும் விகடனுக்கும் திரு சரவணகவி அவர்களுக்கும்.
சென்னையில் நடந்து வரும் 44 ஆவது புத்தகக் கண்காட்சியில் நம்பர் #2, சில்வர் ஃபிஷ் ஸ்டாலில் எனது நூல்கள் ( எட்டு நூல்கள் ) விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.