எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 மே, 2018

கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்ப வேலைப்பாடுகளும்.

கானாடுகாத்தானில் கம்பீரமாக இன்றும் நிற்கும் வீடொன்றின் முன்புறம். நன்றாக 931 * மராமத்து செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே பழமையின் விரிசல்கள். மிக உயரமான வீடுகள் என்பதால் 932* இடிதாங்கும் கலசங்கள் வைத்துக் கட்டப்பட்ட வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் பல கலசங்கள் கவின்மிகுஎழிலோடு காட்சி அளிக்கும்.

கீழே வீட்டின் பக்கவாட்டில் அரக்குநிறத்தில் காணப்படுவதுதான் 933 * செம்புறாங்கற்கள். இவை வீட்டின் அடித்தளம் அமைக்கப் பயன்படுகின்றன. இந்த செம்புறாங்கற்கள் பாறையாக இருக்கும். இவை செவ்வக வடிவில் வெட்டப்பட்டு பதிக்கப்படுகின்றன. பூமியின் கீழே எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை. ஆனால் மேற்புறம் ஐந்து அடி உயரமாவது பதிக்கப்பட்டிருக்கும். வீட்டின் உள்புறத்தில் இந்த இடத்தில்தான் தரைத்தளம் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். அதுவரை அடித்தளமே. மேலும் ஒவ்வொரு வீடும் பத்து படி அளவு உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காவிரிப்பூம்பட்டினத்தில் வீடுகளைக் கடல் கொண்ட காரணத்தால் இங்கே வீடுகளை இவ்வளவு உயரத்தில் அமைத்து இருக்கிறார்கள்.
இந்த வீடும் கானாடுகாத்தானில் உள்ளதே. ஒரு 934* அனுவல்சமயம் எடுத்தேன். இரட்டைத் தூண்கள்.  ஆறு ஜோடித் தூண்கள் உள்ளன. இரண்டு பக்கமும் முன் கோப்பான மேல்மாடி அறைகள். பக்கவாட்டில் பார்த்தால் தெரியும் செம்புறாங்கற்களின் அடுக்கை.இங்கே அவை ஆறடி உயரம் இருக்கின்றன. மேலும் கெட்டியான சிமிண்டினால் பூசப்பட்டிருக்கின்றன.

வியாழன், 3 மே, 2018

கொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன். தினமலர் சிறுவர்மலர் - 16.

கொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன்.
யர்பாடி அன்று ஒரே கோலாகலமாயிருந்தது. பசுக்கள் தங்கள் கழுத்து மணியை ஆட்டியபடி பசும் புற்களை மேய்ந்துகொண்டிருந்தன.  வைக்கோல் வேய்ந்த குடில்கள் அன்று பசுஞ்சாணம் பூசியிருந்தன. இல்லங்களில் ஆய்ச்சியர் தயிர்கடையும் மத்தொலி கூட சரட் சரட் என்று கால்கள் கீறித் திமில் திருப்பிக் கொம்பசைத்துக் கிளர்ந்து நிற்கும் எருதுகளின் ஹீங்காரத்தை எதிரொலிக்கின்றது.
கொன்றை மரத்திலிருந்து பொன்னிறக் கொன்றைப்பூக்கள் அன்று நிகழப்போகும் ஏறு தழுவலுக்கு ஆசி அளிப்பதுபோல் உதிர்ந்துகொண்டே இருந்தன. ஆமாம் அன்று ஏறு தழுவப் போவது யார் ? அதுவும் ஏழு ஏறுகளைப் தழுவப் போகும் அந்த மாவீரன் யார் ?
வாருங்கள் தங்கள் நீண்ட கூந்தலில் பலவிதப் பூக்கள் அணிந்த ஆயர் மகளிர் ஒன்று கூடும் அந்த மைதானத்தை அடைவோம். அடடே அங்கே உயரத்தில் பரண் எல்லாம் கட்டப்பட்டு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. கூர் சீவிய கொம்புகளை உடைய ஏறுகள் கம்பிக்கட்டைகள் பின்னே அணிவகுக்கின்றன. அவை திமில் மிரள வாடிவாசலில் இருந்து உள்ளே ஓடி வருவதற்குள்  நாம் பாதுகாப்பாகப் பரணில் ஏறி அமரலாம். யாருக்காக இந்த ஏறுதழுவல் என்பதைப் பார்க்க நாம் அதோ சில குழந்தைகள் குரவைக்கூத்தாடும் இடத்துக்குப் போவோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...