எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 10 நவம்பர், 2016

காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

1.கருப்பட்டியார் வீடு

2. சுவரொட்டியார் வீடு - செவரக் கோட்டை என்ற ஊரில் இருந்து (கல்லுப்பட்டிக்கு அருகில் உள்ளது ) வலசை வந்தவர்களை செவரக் கோட்டையார் வீடு என்று சொல்வார்கள். பேச்சு வழக்கில் மருவி சுவரொட்டியார் வீடு என்று ஆகி விட்டது.

3. ஆற்காட்டார் வீடு- குன்றக்குடிக்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்காடு என்ற ஊரிலிருந்து வலசை வந்தவர்கள்.

4. நெய் வாசலார் வீடு – நெய்வாசல் என்ற ஊரிலிருந்து வந்தவர்கள்

5. வேகுப்பட்டியார் வீடு – வேகுப்பட்டி என்ற ஊரிலிருந்து வந்தவர்கள்.

6. ஆத்தங்குடியார் வீடு – ஆத்தங்குடி என்ற ஊரிலிருந்து வந்தவர்கள்

7. ஆவுடையான் செட்டியார் வீடு – திருவாலங்காட்டில் பசுமடம் வைத்து பால் கட்டளை நிறைவேற்றி வருபவர்கள் வீடு. ஆ என்றால் பசு. திரு என்றும் அர்த்தம்.

புதன், 9 நவம்பர், 2016

பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

1101. பாபநாசத்துக்குப் பின் சர்வநாசம்.. முடிவெடுக்க 2 வருஷமாம்.. எப்பிடி கௌதமி..புத்திசாலிங்களையும் காதல் புரட்டிப் போட்டுடுது. ஒண்ணுமில்லாம ஆக்கிடுது. பட் பொண்ணப் பத்தி சொல்லாம பிரிஞ்சிருக்கலாம். something odd..

http://tamil.oneindia.com/news/tamilnadu/gowtami-kamal-separted-266125.html

1102. எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை போயிடுதும்பாங்கள்ல அது போல இருக்கு.. சில விஷயங்களைக் கடக்க கஷ்டமா இருக்கு .. கொடுமைடா.. ஹ்ம்ம்ம்.

https://www.youtube.com/watch?v=ahUWAp50xGY

1103.BRAIN.. BRAIN.. EVERYWHERE..

1104. பட்டாசா., ட்ரான்ஸ்ஃபார்மரா.. கரெண்ட் கட்..

1105. IF SOMEONE DOESN'T APPRECIATE YOUR PRESENCE MAKE THEM TO APPRECIATE YOUR ABSENCE..!!!

1106. The e mail you entered does not belong to any account. ---- appidinnu varumpothu vara kovam mathiri epavumey vanthathillai.

1107. Dinam koncham pothum

செவ்வாய், 8 நவம்பர், 2016

காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

அம்மை அப்பன் என்று முடியும் பெயர்கள் காரைக்குடிப் பக்கங்களுக்கே உரித்தான ஒன்று. அவற்றில் சிலவற்றையும் இங்கே இடப்படும் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளேன்.


நாகப்பன், நாகம்மை
சாத்தப்பன், சாத்தம்மை
வள்ளியப்பன், வள்ளியம்மை
மெய்யப்பன் மெய்யம்மை
செல்லப்பன் செல்லம்மை
அடைக்கப்பன் அடைக்கம்மை
முத்தையா முத்தாத்தா
உடையப்பன் உடையம்மை
உலகப்பன் உலகம்மை
சேக்கப்பன் சேக்கச்சி
தேனப்பன் தேனம்மை
ஏகப்பன் ஏகம்மை
நாச்சியப்பன் நாச்சம்மை
அழகப்பன் அழகம்மை
நல்லப்பன் நல்லம்மை
கண்ணப்பன் கண்ணம்மை
சோலையப்பன் சோலைச்சி
வேலப்பன் வேலம்மை
ஏகப்பன் ஏகம்மை

வெள்ளி, 4 நவம்பர், 2016

நந்தினி :-



                   நந்தினி

ந்த ஆஸ்பத்திரியின் வெளி கேட் வரை அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் நின்றுகொண்டும் நகர்ந்து கொண்டும் ஒழுங்கற்ற அசைவோடும் இரைச்சலோடும் உணர்ச்சி வசப்பட்டும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தது.

“அந்த டாக்டரம்மாள வரச் சொல்லு. என் புள்ளய கொன்னுட்டா.. இப்ப என் மாப்பிள்ளையும் தூக்கு மாட்டி செத்துட்டாரு.” பச்சைபிள்ளைபோல மேல்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தார் கதிரேசன்.

”பொம்பளையா அவ.. அவளுக்கு மனசாட்சி இல்ல. இந்த ஆசுபத்ரியே வேணாம்னே. கொலைகாரப் பயலுவ. ஒழுங்கா கெவனிக்க மாட்டானுவ. போன வருஷம் நம்ம வெள்ளையன் மகளும் பிரசவத்துல செத்துப் போச்சுல்ல.. “ என்று கூடவே சேர்ந்து யார் யாரோ குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

”டாக்டரம்மா வந்தாத்தான் வாங்கிட்டுப் போவோம்.”
Related Posts Plugin for WordPress, Blogger...