எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SCHLOSS CASTLE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SCHLOSS CASTLE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 மே, 2020

ஷ்லாஸ்பர்க் கோட்டை - விபத்துகளும் விசேஷங்களும்.

12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிக அழகான இந்த ஷ்லாஸ்பர்க் கோட்டை பல்வேறு போர்களையும் சிதைவுகளையும் சந்தித்தபின் பதினெட்டாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது.



டச்சி ஆஃப் லிம்பர்க்கில் அடுத்தடுத்து நடந்த போர்கள் கோட்டையோட நிலைமையை ரொம்பவும் பாதித்தது. 

வெள்ளி, 1 மே, 2020

ஷ்லாஸ்பர்க் ஸோலிங்கன் கேஸில் & எங்கள்பர்ட் 2 .மை க்ளிக்ஸ். SCHLOSS BURG SOLINGEN CASTLE & ENGELBERT 2.MY CLICKS.

ஸோலிங்கன் ஷ்லாஸ்பர்க் கேஸில் எனப்படும் கோட்டை ஜெர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்பேலியா மாநிலத்தில் வூபர் என்னும் நகரில் அமைந்துள்ளது. டுசில்டார்ஃபிலிருந்து 3 மணி நேரப் பயணத்தில் இதை அடையலாம். 

ஒரு இளமழை நாளில் நாங்கள் கௌசியின் வீட்டுக்குச் சென்றோம். அங்கே விருந்துக்குப் பின் அவர் கணவர் சிவபாலன் எங்களை இங்கே அழைத்துச் சென்றார். இது பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மன்னராட்சியில் அதன்பின் பல்வேறு கை மாறி இப்போது வேறு ரூபம் எடுத்துள்ளது.  1185 இல் இருந்து 1225 வரை ஆண்ட எங்கள்பர்ட் - 2 என்னும் ராஜா கம்பீரமா கோட்டையின் தலைவாயிலில் குதிரையில் ஆரோகணித்து வரவேற்கிறார். அவரைக்கடைசியாப் பார்ப்போம். 





இந்த சிலிண்டிரிக்கல் பகுதிக்குப் பக்கவாட்டில்தான் கோட்டையின் கார்பார்க்கிங் பகுதி. இதோ தூரத்தே குதிரையில் அமர்ந்து பார்க்கிறாரே  எங்கள்பர்ட் - 2 ராஜா

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

ஷ்லாஸ்பர்க் ஸோலிங்கன் கேஸில் - டாய்ச்சஸ் கிளிங்கன் மியூசியம்.

கத்தி கபடாவெல்லாம் இந்தியாவில் ஜெய்ப்பூர் போன்ற சில அரண்மனை மியூசியங்களில் மட்டுமே பார்க்கமுடியும். அதேபோல்தான் ஜெர்மனியிலும் ஸோலிங்கன் அருங்காட்சியகத்திலும் கத்திகளின் அணிவகுப்பு.

தோழி கௌசியும் அவர் கணவரும் தங்கள் காரில் இந்த ஷ்லாஸ்பர்க் ஸோலிங்கன் கேஸிலுக்கு அழைத்துச் சென்றார்கள். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை அதன் பின் பல்வேறு மராமத்துப் பணிகளால் மீண்டு அழகாக இன்னும் காட்சி அளிக்குது. 1185 இல் இருந்து 1225 வரை ஆண்ட எங்கள்பர்ட் - 2 என்னும் ராஜா கம்பீரமா கோட்டையின் தலைவாயிலில் குதிரையில் ஆரோகணித்து வரவேற்கிறார்.

ராஜாவின் கோட்டை கொத்தளம் என்பதால் கேடயம்,வில்,அம்பு, தலைக்கவசம் எல்லாம் இருந்தாலும் அங்கே இருந்த மியூசியத்தில் கத்திதான் ப்ரதான அம்சம். ஏனெனில் இதை மட்டும் கண்ணாடிக் கூண்டுக்குள் பாதுகாப்பா காட்சிப்படுத்தி இருக்காங்க. :)


Related Posts Plugin for WordPress, Blogger...